Share

Nov 25, 2008

பகுஜன் சமாஜ் கட்சி

பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் வேரூன்றுகிறது .

முதல் முறையாக ஒரு கட்சி எம் எல் ஏ பெரிய ஆவலாதிகள் இல்லாமல் , அதே போல் கட்சித்தலைவரின் பெரிய குற்றச்சாட்டு இல்லாமல் வெளியேறி பகுஜன் சமாஜ் கட்சி யில் இணைந்து விட்டார் ! செல்வபெருந்தகை பகுஜன் சமாஜ் கட்சி யில் .

சிவகாமி ஐ ஏ எஸ் விருப்ப ஒய்வு பெற்று மாயாவதியை போய் சந்தித்திருக்கிறார் . பகுஜன் சமாஜ் கட்சி யில் இணைந்து விட்டார் .நல்லவர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது . அதிலும் ஒரு எழுத்தாளர் அரசியலுக்கு வருவது எந்த அளவுக்கு நல்லது ..சிவகாமி க்கு அரசியல்வாதிகளுடன் ஐ ஏ எஸ் அதிகாரி என்ற அளவில் நிறைய அனுபவங்கள் இருக்கும் . அதனால் ஏதோ' புறா ஒன்று வல்லூறுகளுக்கு இடையே என்ன செய்யபோகிறது' என்ற கவலைஎல்லாம் தேவையில்லை .

மாயாவதியின் 'பிரதமர் பதவி ஆசை ' வெளிப்படையான விஷயம் . ஜெயலலிதா காதில் புகை !

என் நண்பர் காட்டுமன்னார் கோயில் எம் எல் ஏ ரவிகுமார் இப்போதைக்கு என்ன முடிவு எடுப்பார் . செல்வபெருந்தகை யின் விருப்பம் பகுஜன் சமாஜ் கட்சி யில் திருமா வளவனின் விடுதலை சிறுத்தைகள் ஐக்கியமாகி விடவேண்டும் என்பது .

தேசிய கட்சிகள் தமிழகத்தை பொறுத்தவரை சர்பத் ஸ்டால்கள் போல தான் என்பது இதுவரையிலான காட்சிகள் !

கொஞ்ச காலம் முன் பீஹாரி பஸ்வான் கட்சி தமிழகத்தில் சுறுசுறுப்பாக ஆரம்பிக்கப்பட்டது .... புஸ்வானம் ஆகி விட்டது !பஸ்வானும் ,மாயாவதியும் ஒன்றா ? என்று கோபம் கொண்டு வித்தியாசங்களை விளக்குவார்கள் .

இன்று மாயாவதியின் வாக்குறுதி ஒன்று ."நாங்கள் இந்திய ஆட்சியில் அமர்ந்தால் உயர் ஜாதி ஏழைகளுக்கும் சலுகைகள் உண்டு "

..

மேதமையின் ரகசியம்

"எல்லா சொற்களும் கிட்டத்தட்ட ஒரே பொருளையே குறிக்கின்றன ."

மனதில்வை . யாரிடமும் இதை சொல்ல முனையாதே .

எனக்கு போல் உனக்கொருவன் கிடைத்தாலன்றி .

ஊமைஒன்று ஓர் ஊமை தேடிப்போகும்

சரளமாய் சம்பாஷித்துகொண்டிருக்க .

எவ்வளவு கொடுமையானது ஊமை ஒன்று

உளறுவாயன் இடம் மாட்டிகொள்வது

- "நீயுமொரு கிறுக்கு என்றால் வா " என்ற கவிதையில் தேவ தேவன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.