ஜெய்சங்கரிடம் 'அன்புள்ள மான்விழியே' யில் இருந்த துறு துறுப்பு, Smartness ஹரநாத் ராஜாவிடம் 'அந்தால ஓ சிலக்கா'வில் கொஞ்சம் கூட இல்லை.
தமிழ் தெலுங்கு இரண்டிலுமே
ஜமுனா பூரணம் தான். Graceful .இயல்பான நளினம்.
பொடியனாக இருக்கும் போது ஜெய்சங்கருக்கு காலேஜ் ரோடு விலாசத்திற்கு கடிதம் எழுதியதுண்டு.
அவருடைய பதில் printed letter
" அன்புடையீர் வணக்கம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. என் கையொப்பமிட்ட புகைப்படம் இத்துடன் அனுப்பியிருக்கிறேன்.
அன்புடன்
ஜெய்சங்கர்
புகைப்படத்தில் கையெழுத்தும் அச்சிடப்பட்டிருந்தது.
திருச்சி செயிண்ட் ஜோசப்'ஸில்
ஜெய்சங்கரிடம் ஃபோட்டோ வாங்கினவன் என்ற பிரபலம்.
அப்போது எம்ஜிஆர் ரசிகன்.
திமுக என்பதால் பாதிரியார் ஆண்டனி ராஜ் கோபமாக கேட்டார்" உன் தலைவன் கடவுளே இல்லை என்று சொல்பவர். தெரியுமாடா? அந்தோ, மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்து போனால் என்ன பயன்? "
" சின்னப்பையனா இருக்கும்போதே சினிமா நடிகருக்கு கடிதம் எழுதினாயாமே?"
பத்தாம் வகுப்பு படிக்கையில் கேட்டார்.
https://youtu.be/f-fL8CVz-HU?si=shUe9pTS7E8iXd_P
https://youtu.be/pLsSfxOEZ1g?si=w9Fa4XiNiZIrvGsN&sfnsn=wiwspwa
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.