Share

Jul 21, 2024

R.P. ராஜநாயஹம் - சினிமா எனும் பூதம்

உண்மைச் 
சம்பவங்களைப் புனைவின் வசீகரத்துடன் சொல்ல  அசாத்தியப் படைப்பூக்கம் வேண்டும். 
அது ராஜநாயஹத்துக்கு இயற்கையாய் வாய்த்திருக்கிறது. அசாத்திய திறமைசாலிகளின் தோல்விகளைக் காவிய சோகத்துடன் பதிவு செய்துள்ளார்
(இதில் ராஜநாயஹமும் ஒருவர்தானே).

 வாழ்ந்து வீழ்ந்தவர்கள், வீழ்ந்தவரைத்தாங்கியவர்கள்,
தாங்கியவரைச் சாய்த்தவர்கள், 
ஊதிப் பெருக்கப்பட்ட சித்திரக்குள்ளர்கள், 
பல்கலை வல்லுநர்களாக்கப்பட்ட கோமாளிகள்
 என்று இப்பூதத்தின் திருவிளையாடல்களை ஒரு காவியச் சுவையுடன் எழுதியிருக்கிறார்.

'சினிமா எனும் பூதம்' வெகுகாலம் பேசப்படும் புத்தகமாயிருக்கும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.