Share

Jul 2, 2023

கல்கத்தா விசுவநாதன்

கல்கத்தா விசுவநாதன்
- R.P. ராஜநாயஹம் 

Calcutta Viswanathan wore many hats.

Double M.A. 

 'International Relations' course in Oxford University.

மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஹரி ஸ்ரீநிவாசனின் கஸின் கல்கத்தா விசுவநாதன். ஹரி ஸ்ரீநிவாசன் தான் எழுத்தாளர் சார்வாகன்.
Architecture Advisor மோகன் ஹரிஹரன் சார்வாகனின் உடன் பிறந்த சகோதரர்.

கல்கத்தா விசுவநாதனின் இளைய சகோதரர் மோகன் பத்மநாபன் journalist. 
Times of India, Economic Times, 
The Hindu ஆகிய ஆங்கில ஏடுகளில் பணியாற்றியவர்.

கல்கத்தா விசுவநாதன் Theatre personality.

Shakespearean Actor.
He had acted as Malvolio in Twelfth Night.
Malvolio: "Some are born great. Some achieve greatness. Some are having greatness thrust upon them."

 பெங்காலி நாடகங்களில் நடித்தவர்.
 
தன் பள்ளித் தோழர் உத்பல் தத் பின்னாளில் நடிகராக நடத்திய People's little theatre ல் நடிகர் கல்கத்தா விசுவநாதன். 
கல்கத்தா விசுவநாதன் Calcutta players என்று நாடகக்குழு நடத்தியவர்.

எஸ். பாலச்சந்தர் 'அந்த நாள்' படத்தில்
சிவாஜி நடிப்பதற்கு முன்பு கல்கத்தா விசுவநாதன் தான் நடித்துக்கொண்டிருந்தார். 
எஸ்.பாலச்சந்தருடன் ஏற்பட்ட கசப்பான ஒரு சம்பவம் காரணமாக நீக்கப்பட்டார்.

சத்யஜித்ரே முதல் வண்ணப்படம் கஞ்சன்ஜுங்காவில் நடித்தவர்.

மிருணாள் சென் இயக்கிய புனஸ்ச்சாவில் கல்கத்தா விசுவநாதன் இரண்டாவது கதாநாயகன்.

முப்பத்தைந்து பெங்காலி படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய மகன் அசோக் விசுவநாதன் விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குநர்.
பெங்காலில் திரைப்பட தொழில்நுட்ப நிறுவனத்தில் டீன் ஆக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

கல்கத்தா விசுவநாதன் பழைய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
பீம்சிங் இயக்கத்தில் 'திருமணம்' 
பானுமதி எடுத்த 'கானல் நீர்' போன்ற படங்களிலேயே கூட இவர் உண்டு.

தமிழில் மூன்று முடிச்சு துவங்கி, லலிதா, கவரி மான்,  மூடுபனி, கண் சிவந்தால் மண் சிவக்கும், எனக்குள் ஒருவன், வெள்ளை ரோஜா,
 நிலவு சுடுவதில்லை, படிக்காத பண்ணையார் போன்ற படங்கள்.

மூன்று முடிச்சில் ரஜினிக்கு அப்பா கல்கத்தா விசுவநாதன்.
 ஸ்ரீதேவிக்கு கணவர்.
ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த 
முதல் படம்.

ரஜினி 'பாபா'விலும் தலைகாட்டியவர்.

'கவரி மான்'  க்ளைமாக்ஸில் சிவாஜியிடம் கல்கத்தா விசுவநாதன் சொல்வது mighy line.
"நீ ஜெயில்ல இருந்து திரும்பி வரும் போது நான் இருக்க மாட்டேன். ஆனா என் டைரி இருக்கும்."

படங்கள்
1. கஞ்சன்ஜுங்காவில் கல்கத்தா விசுவநாதன்
2. புனஸ்ச்சாவில் கல்கத்தா விசுவநாதன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.