Share

Apr 14, 2022

அருணா சாய்ராம் பாடிய வலஜி


 சகோதரி வழக்கறிஞர் சுமதி             அடையாளம் காட்டிய வலஜி 
அருணா சாய்ராம் பாடிய தேனிசையாக.



சினிமா பாடல்களில்
"பொட்டு வைத்த முகமோ?
கட்டி வைத்த குழலோ?"
வலஜி ராகத்தின் மெட்டுகளில் ஒன்று என என் அபிப்ராயம். 
சுமதி  'இல்லை சார்' என்கிறார்.

வலஜி ராக மெட்டுகளில் இன்னும் கூட சினிமா பாடல்கள் நினைவிற்கு வருகிறது. 

" கேள்வி பிறந்தது அன்று 
நல்ல பதிலும் கிடைத்தது இன்று"

"பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை
தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை"

இதெல்லாம் கூட..

ஒவ்வொரு ராகத்திற்கும் பற்பல மெட்டுகள் உண்டு.

வலஜியிலேயே "பாதமே துணை பரமசிவா"விலும்
"கார்த்திகேய கமலேசன சிவ சுதே"விலும் துவங்கும் போதே மெட்டு வேறுபடுவதை காண முடியும்.

கல்யாணி ராகத்தில் "எதாவுனரா"
"வாசு தேவயனி" இரண்டு கீர்த்தனைகளும்
வெவ்வேறு மாதிரியானவை

72 மேளகர்த்தா ராகங்களுக்கும் அப்படி பார்த்தால் கணக்கிடவே முடியாத அனந்த கோடி மெட்டுகள்.

..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.