Share

Nov 16, 2021

புரியல

உரையாடும் போது, 
நேரடியான பேச்சிலோ,
மொபைலிலோ அலோவானாலும், அடிக்கடி இருவரில் ஒருவர் பேச்சுக்கிடையில் 'புரியல' என்று நிறுத்த, அடுத்தவர் 
தான் சொன்னதை
 மீண்டும் புரியும்படி சொல்ல
 தவித்து தக்காளி
 விக்க வேண்டியிருக்கிறது.

நீண்ட கால பழக்க வழக்கத்திலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்டதாக முடிவு செய்வதெல்லாம் சாத்தியமாவதில்லை.
ஆண்டாண்டு காலமாக பழகிய ஒருவனை  நெருங்கிய போது தெரிந்த விஷயம், அவன் மிக மோசமான Sadist.

வடிவேலு புரியாமல் திகைத்துப் போய் அனுகூல சத்ருக்களான
 தாடி பாலாஜியையும், 
போண்டா மணியையும் ஏற இறங்க உற்றுப் பார்த்து கேட்ட
 'கெட்ட' வார்த்தைகள் " அதென்னடா, 
எங்க போனாலும் 
சிக்கல் எனக்குத் தான் வருது.
நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க."

'புரியாது, புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது' கவிஞர் சுரதாவின் வரிகள். சுப்புரத்தின தாசன்.
P.B.ஸ்ரீநிவாஸ் குரல்வளத்தில்.

The eternal mystery of the world is 
its comprehensibility.

'ஒன்னுமே புரியல உலகத்தில, 
என்னமோ நடக்குது, 
மர்மமா இருக்குது' 
- சந்திரபாபு Base voice.

மழை வெள்ளப் பாதிப்பு.

எழுத்தும் புரிதல் வேண்டி நிற்கிறது.

“Only one man ever understood me…
 And he didn’t understand me”
ஹெகல் இப்படி சொன்னான்.                                புரிதலைப் பற்றி
 இதை விட சொல்ல 
வேறு என்ன இருக்கிறது?
...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.