Share

Mar 17, 2021

'மணல் கோடுகளாய்..' பற்றி பத்மஜா நாராயணன்

 R. P. ராஜநாயஹம் "மணல் கோடுகளாய்.." 

நூல் பற்றி 

பத்மஜா நாராயணன் 


Autobiography begins with a sense of being alone. It is an orphan form.

........John Berger


இப்படிக் கூறித் தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது திரு.ராஜநாயஹத்தின் மணல் கோடுகளாய் நூலைப்பற்றி. ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் எத்தனையோ மறக்கமுடியாத சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். அதை ஒரு சமயம் நகைச்சுவையாகவும், ஒரு சமயம் ஏற்றுக்கொண்ட மனப்பான்மையுடனும், ஒரு சமயம் விரக்தியுடனும் அனைவரும் அசைபோட்டு பார்ப்பதுண்டு. அவ்வாறு உரக்க அசை போட்ட நினைவுகள்தான் இந்த நூல். இதை வாசிக்கும் பொழுது இதை எழுதியவர் எத்தகைய  வாசிப்பாளராகவும் திறமை உள்ளவராகவும் இருந்திருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரிடமும் ஒருவகையில் விளையாடிக் கொண்டே இருக்கிறது. அதன் விளையாட்டு இப்படியாகத்தான் 

திரு.ராஜநாயஹத்துடன் நிகழ்ந்திருக்கிறது. 

இதை வாசிக்கும் பொழுது பல சமயங்களில்

 க. சிவக்குமாரின் எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதற்கு முதல் காரணம் சுய எள்ளல் மற்றும் வாழ்க்கைச் சூழலில் சிக்கி தவிக்கும் நிகழ்வுகளும் தான். 


இது என்னவோ அவருடைய சுயசரிதையின் 

ஒரு முன்னோட்டம் போல்தான் எனக்குத் தோன்றுகிறது.   வாழ்வில்  மறக்க இயலாத நிகழ்வுகள்  இல்லாவிட்டால் அதற்கு வாழ்க்கை என்ற பெயரே இல்லை. 

அதை அழகுபட எழுத 

மிகச் சிலருக்குத்தான் முடியும். 

அந்த மிகச் சிலரில்

 ஒருவர்தான் ராஜநாயஹம். 


 மணல் கோடுகள் அழிந்துவிடும். ஆனால் இவை கல்மேல் செதுக்கப்பட்ட கோடுகள். காவியங்கள்.


....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.