Share

Oct 14, 2018

படிமம்


ஆல்பர் காம்யு இளமையில் விதவையாகி விட்ட தன் அம்மாவுக்கு கணவர் பற்றிய நினைவு காலத்தால் மிஞ்சியிருக்காதது பற்றிய ஒரு உவமானமாக
” காட்டுத்தீயில் எரிந்து போன பட்டாம்பூச்சியின் சிறகின் சாம்பலைப்போல” என்கிறார் ‘முதல் மனிதன்’ நாவலில்.
அலெசாண்ட்ரோ பாரிக்கோவின் ‘ பட்டு’ நாவலில் காட்சி.
ஆகாயத்தில் ஏராளமான பறவைகள்.
நீல நிறத்தில் சிறகுகள் அகலமான, ஏராளமான பறவைகளால் வானம் கீறப்பட்டிருந்தது. சிறகுகளால் ஆகாயத்தையே கிழித்து ஒழித்து விட ஆசைப்பட்டவை போல அந்த பறவைகள் உயரே மேலும் கீழும் பறந்து கொண்டிருந்தன.
ஜான் பான்வில் நாவல் ’கடல்’
கடலின் சின்ன சின்ன அலைகள் உயிரோடு வந்து, மிகப் பழங்காலத்தில் நிகழ்ந்த ஒரு பெரும் அழிவினைக்குறித்து சுவாரசியத்துடன் கள்ளக்குரலில் என்னிடம் பேசுகின்றன. அது ட்ராய் நகர வீழ்ச்சி பற்றியா, அட்லாண்டிஸ் புதைந்தது பற்றியா என்பது காதில் தெளிவாக கேட்கவில்லை.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.