Share

Oct 26, 2018

கூத்துக்கு பிள்ளை பெத்து கோமாளின்னு பேர் விட்ட கதை


என் அம்மாவிடம் எப்போதும் கோமாளி சேட்டை நிறைய செய்வேன். மிகையான நடிப்புடன் கொனஷ்டையுடன் ஏதாவது செய்வேன்.
“ தாயும் தன் பிள்ளையை தள்ளிடப்போமோ?” - இதை நிறைய விதமாக பல விதங்களில் உருக்க பாவம் சொட்ட சொட்ட ஆடிப் பாடுவேன்.
வினோதமாக கைநாட்டு பாமர பாணியில், முகத்தை அஷ்ட கோணலாக்கி உச்ச குரலில் சோகம் தளும்பிச் சொட்ட பாடுவேன்.
“ சிலர் சிரித்தான், சிலர் அழுதான், சிலர் சிரித்துக்கொண்டே அழுதான்”

In the trueman there is a joker concealed.

’லாலி பப்பி, லாலி மம்மி 
லாலி பப்பி, லாலி மம்மி’ தொர இங்க்லீஷ் பாட்டு கூட பாடுவேன்.
இது ஏதோ சிறுவனாய் இருந்த காலத்தில் மட்டுமல்ல. திருமணமாகி, இரண்டு பிள்ளைகள் பெரியவர்களாகி, அம்மாவின் கடைசி காலம் வரை.
அம்மாஎப்போதுமே சிரிக்காமல், திகைத்தவாறு சொல்வாள்
“ கூத்துக்கு பிள்ளை பெத்து கோமாளின்னு பேர் விட்ட கதையாய் இருக்கு”
Mighty lines.
அம்மா இறந்த இரண்டு வருடத்தில் கூத்துப்பட்டறைக்கே வந்து சேர்ந்தேன். ’எங்கும் சுற்றி ரங்கனைச்சேர்’. முத்துசாமியிடம் வந்து சேர்ந்தேன்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். அம்மாவிடம் செய்த கோமாளி சேட்டைகளையெல்லாம்
என் மனைவியிடம் ஆடி பாடிக்காட்டிக்கொண்டிருக்கிறேன்.
தாய்க்குப் பின் தாரம்.
எப்போது இந்த பாடி நடிக்கிற ஆசை, தாகம் தீரும்?
கைக்கட்டு, வாய்க்கட்டு. கால்கட்டோடு பாடையில் ஏறும் போது தான்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.