Share

Jan 9, 2018

A blundering boy!


A blundering boy!
சரோஜா தேவி என்ற புனை பெயரில் யாரோ ஒரு ஆள் ஆபாச கதைகள் எழுதி அந்த காலத்தில்
"சரோஜா தேவி புத்தகம் " ரொம்ப பிரபலம்.

சிறுவனாய் இருக்கும்போது நீதி போதனை வகுப்பில்
'வாடாமல்லி' என்ற சரோஜாதேவி புத்தகம் படிக்கும் போது
நீதி போதனை ஆசிரியர் வில்சன் சாரிடம் மாட்டிகொண்டேன்.
பார்ரா! ’மாரல் இன்ஸ்ட்ரெக்சன்’ க்ளாஸ்ல செக்ஸ் புக் படிக்கிறான்டா இவன்!
திருச்சி செயிண்ட் ஜோசப்’ஸ்!

பின்னர் அதே ஆண்டு பள்ளியிறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழாவில்
நான் ' நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே! நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே!' பாடலை பாடினேன்.
வில்சன் சார் 'டே! 'நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே' பாட்டை பாட நம்ம ஸ்கூல்லே வேற ஒரு பயலும் இல்லையாடா? என்னடா இவன் பாடுறான். devil quoting the bible!' என்று விழா முடிந்தவுடன் கிண்டல் பண்ணினார்.



https://rprajanayahem.blogspot.in/2008/10/trichi-st.html


.......................



 26 -12- 2004 அன்று தினமலரில் என்னை பேட்டியெடுத்து வெளியிட்டார்கள். தினமலரில் பாதி பக்கத்துக்கு அந்த பேட்டி வெளியாகியிருந்தது.
பேட்டி வெளியான அன்று காலையில் தான் சுனாமி. டி.வியில் மிகவும் பரபரப்பாக சுனாமி அழிவு காட்சிகளை காட்டிக்கொண்டிருந்தார்கள்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.