Share

Jan 26, 2018

பாலியல் தொழிலாளி மற்றும் அர்த்தமுள்ள மதம்


பாலியல் தொழிலாளி

ஜி.நாகராஜனின் ’துக்க விசாரணை’ சிறுகதை படித்துப்பாருங்கள்.
..................
”அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது.
சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்துகொள்ள முடியும். எது எப்படியிருப்பினும், ’தேவடியாள்’ என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன் படுத்த நியாயமே இல்லை.
வேண்டுமென்றால் தி.ஜானகிராமனது கோவில் விளக்கு என்ற சிறுகதையையோ அல்லது யூஜின் ஓநீலின் அன்னா கிருஷ்டி நாடகத்தையாவது படித்துப் பாருங்கள்…
பரத்தை மாதவியின் நல்லியல்புகள் தானே மணிமேகலையிடத்துக் குடிகொண்டன.”
- ஜி. நாகராஜன்.
......................
இந்த யூஜின் ஒநீல் மகள் ஊனா ஓ நீல் தான்
"Catcher in the rye நாவல் எழுதிய ஜே.டி.சாலிஞ்சருடைய காதலி.
ஊனா ஒநீலுக்கு நீண்ட கடிதங்கள் சாலிஞ்சர் எழுதியிருக்கிறார். 1941ல் நூல் விட்டுக்கொண்டிருந்தார் சாலிஞ்சர்.
ஆனால் சார்லி சாப்ளினை விதி வசமாக ஊனா ஓநீல் சந்திக்க நேர்ந்த பிறகு விதி விளையாடியது. சார்லி சாப்ளின் வாழ்வில் நடந்த நான்காவது திருமணம் இந்த ஊனா ஒநீலோடு தான்!
நான்காவது திருமணமா என்று ஏளனமாக எண்ணி விடக்கூடாது. இந்த திருமணம் தான் சாப்ளின் சாகும் வரை நிலைத்து நின்றது.(1943-1977) அது மட்டுமல்ல. இந்த ஓநீல் மூலம் சாப்ளினுக்கு எட்டு குழந்தைகள். இதில் முதல் மகள் 1965ல் வந்த டாக்டர் ஷிவாகோ படத்தில் ஷிவாகோவின் மனைவி டோன்யா வாக நடித்த ஜெரால்டைன் சாப்ளின்.
......................................................


அர்த்தமுள்ள மதம்

இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் ஜெயந்திர சரஸ்வதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்து கர்ப்பக்ரகம் வரை வந்து சேவித்தார்.
அப்போது பட்டர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். வைஷ்ணவ கோவிலுக்குள்ளே காஞ்சி பீடாதிபதி வந்ததை அவ்வளவு சிலாக்கியமானதாக அவர்களால் ரசிக்க முடியவில்லை.
’கோவிலை தீட்டு நீக்க சம்ப்ரோக்ஷனம் செய்யவேண்டும்’ என்று பதற்றத்தை வெளிப்படையாக காட்டினார்கள்.


People are strange creatures. Obsessed with Religion, Caste and Native languge. The carrots are cooked. There is no hope. We have had enough.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.