Share

Nov 28, 2017

Carnal Thoughts - 44



“ஏய்யா… தொர.. ஏய்யா உங்க மாமா இப்படி செய்றாரு..? நூறு பவுனோட வந்தேன். எனக்கப்பறம் ரெண்டு கல்யாணம் பண்றாரு..ஏங்கிட்ட என்னய்யா இல்ல…..அறிவில்லயா..?அழகில்லய்யா..? சொல்லுங்கய்யா…அத்த கிட்ட என்னய்யா இல்ல..? அறிவில்லயா…?அழகில்லயா..? ஆனா..உங்க மாமா சொல்லிட்டாருய்யா… தெளிவா சொல்லிட்டாரு…அவரு ஒடம்புல ஓடுற ஒவ்வொரு துளி ரத்தமும் ‘பொம்பள..பொம்பள’ன்னு தான் ஏங்குதாம்.” என்று பொழம்பிய ஒரு தூரத்து அத்தக்கி காதலர்கள் அதிகம். முக அழகும் கிடையாது. ஊதிப்பெருத்த யாளி. அறிவிலும் சிலாக்கியமாக சொல்ல ஏதும் கிடையாது.

தரமேயில்லாத ஒரு சல்லியிடம் படுத்திருந்த போது மகனிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார். அப்புறமும் கூட கணவன் துரோகம் பற்றி புலம்பிக்கொண்டே தான் இருந்தார்.

முக அழகில்லாத பொம்பளைக்கு தான் பெரிய அழகின்னு நெனப்பு வந்துடுச்சின்னா…ஐயோ பாவம்.

அறிவில்லாத பலருக்கும் தான் அறிவாளி என்று நினைப்பு வருவது இயற்கை. இயல்பு. இதைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.
.......................

https://rprajanayahem.blogspot.in/…/08/carnal-thoughts-39.h…

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.