Share

Nov 14, 2017

என்னவோ ஏதோ


முப்பத்துரெண்டு வயசு வர தான் பூமியில இருந்த சிவப்பிரகாசருக்கு என்ன துயர அனுபவமோ தெரியவில்லை. சரியான Misogynist. போற போக்கில ஒரு புழுக்கய போட்டிருக்கிறார்.
”நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தளவிருந்து
பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ளல் ஆகாதே.”

’ஏன் இப்படி ஒண்டியா இருக்கீங்க. நீங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டா வசதி தானே’ என்று ஒருவர் அவரிடம் கேட்டதற்கு இந்த பதில்
“நோய் கண்டாலும் கொள்ளலாம் நூறு வயது அளவு
பேய் கொண்டாலும் கொள்ளலாம் நூறு வயது அளவு
பெண் கொள்ளல் ஆகாது”
பெண்ணியவாதி குசும்பன் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல வேண்டும்.

பட்டினத்தார் என்ன ஔவை பாட்டியே கூட இப்படி வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார்.

சிவப்பிரகாசரின் தம்பி பேரன் சுவாமிநாத தேசிகர் கிறிஸ்தவராகி சூசை என்று பெயர் மாற்றிக்கொண்டார். கிறிஸ்தவ மதம் ஊடுறுவாத இடமே இல்லை. புகை நுழையாத இடத்தில் கூட வேதம் பாய்ந்திருக்கிறதே. சிவ அனுபூதி செல்வர் குடும்பத்தையும் ஆட்டி வைத்திருக்கிறது. 

சிவப்பிரகாசர் எழுதிய ’யேசு மத நிராகரணம்’ என்ற கிறித்தவ எதிர்ப்பு நூலை முன் வைத்து சுவாமிநாத தேசிகர் கதாகாலட்சேபமெல்லாம் செய்தவர் என்ன கஷ்டமோ கிறித்துவ மதத்தை தழுவியிருக்கிறார்.
When you refuse to accept anything but the best, often you will get it.

………………
மகன் செத்தாலும் பரவால்ல. மருமக வெள்ளச்சேல கட்டனும் - மாமியார் மனநிலை பற்றிய சொலவடை
ஒரு ஐரிஷ் பழமொழி
What is the world to a man when his wife is a widow?
நான் திருப்பூரில் மூன்று பள்ளிகளில் Spoken English Teacher ஆக வேலை பார்த்திருக்கிறேன்.
ஒரு பள்ளியில் Faculty roomல் என்னைத் தவிர எல்லோருமே பெண்கள். எல்லோரும் தங்கள் சொந்த விஷயங்களை என் காது பட பேசுவார்கள். வெளிப்படையாக.
எல்லோருக்குமே அவரவர் மாமியார் பற்றி கடும் அதிருப்தி.
………………………………………………
A Khushwant Joke
An Englishman met a Sardarji in a toilet
English : How do you do?
Sardarji : We open the zip and do.
..........................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.