Share

Jun 22, 2022

குமுதம் ப்ரியா கல்யாணராமன்

"சார் வணக்கம் ஃபேஸ்புக்ல நீங்க எழுதறது எல்லாம் படிச்சிட்டு வரேன் பிரமாதமா இருக்கு சார் corona kku அப்புறம்  குமுதத்தில் எழுதனும்  சார்"

ப்ரியா கல்யாணராமன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
17.04. 2020 அன்று
 R.P. ராஜநாயஹத்திற்கு 
ஃபேஸ்புக் மெஸ்ஸஞ்சரில் ப்ரியா கல்யாணராமன் அனுப்பிய செய்தி.


ராஜநாயஹம் response : 
"உங்கள் அன்புக்கும் அபிமானத்திற்கும் என் நன்றி சார். நிச்சயம் சார். ப்ரியா கல்யாணராமன் என்னிடம் இப்படி சொல்வது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது"

இரண்டு வருடங்களாக 
என் இயல்புபடி இது குறித்து வாளாவிருந்தேன். நான் தொடர்பு கொள்ளவேவயில்லை.

இப்போது  20.04. 2022 அன்று "உங்கள் தொலைபேசி எண் வேண்டுமே"
என்று மீண்டும் ப்ரியா கல்யாணராமன்.

மொபைலில் தொடர்பு கொண்டார்.

மீண்டும் துவங்கவிருக்கும் 'குமுதம் தீராநதி'யில் R.P. ராஜநாயஹம் இலக்கிய கட்டுரைகள் எழுத வேண்டும்.

 ஆறு பக்கங்கள் எழுதினாலும் பிரசுரிக்கப்படும்.
தலைப்பு தாருங்கள். குமுதம் தீராநதியில் நீங்கள் எழுதுவது பற்றி நன்றாக விளம்பரப்படுத்துவோம்"

என் பதில் : ம்ஹும். மாட்டேன்.
குமுதத்தில் எழுதுவதற்கு தான் ராஜநாயஹத்தை அழைக்கப் போவதாக இரண்டு வருடங்கள் முன்னரே செய்தி அனுப்பியிருந்தீர்கள்"

ப்ரியா கல்யாணராமன் : 'நிச்சயமாக குமுதத்திலேயே எழுத உங்களை அழைப்பது விஷயமாக தகவல் தருகிறேன்.'

A slip between the cup and lip?
அப்படியான பிரமையெல்லாம் இல்ல.

2016ம் ஆண்டில்
சாவித்திரி, சரோஜாதேவி,
T.R. ராஜகுமாரி பற்றி குமுதம் ஸ்பெஷலில் எழுதியிருக்கிறேன்.
குமுதம் கிசு கிசு சிறப்பிதழிலும் ஒரு கட்டுரை நான் எழுதி வெளியானது.

http://rprajanayahem.blogspot.com/2021/09/blog-post_4.html?m=0

https://www.facebook.com/100006104256328/posts/2750190265194422/

http://rprajanayahem.blogspot.com/2016/10/kumudam-kisu-kisu-special_11.html?m=0

http://rprajanayahem.blogspot.com/2016/10/tr.html?m=0


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.