Share

Jan 4, 2022

அம்பர்கிரிஸ்

இப்படி ஒரு கடத்தல் பற்றி கேள்விப்பட்டதில்லை.
அம்பர்கிரிஸ்.
இது பற்றிய செய்தி
 ஒரு டி.வி சேனலில்
திமிங்கல உமிழ் நீர் என்றும் இன்னொரு சேனலில் திமிங்கல கழிவு என்றும் விவரிப்பு.

தென்காசியில் 3.5 கோடி மதிப்புள்ள அம்பர்கிரிஸ் கடத்திய இருவர் பிடிபட்டனர் என்று செய்தி.

கூகுளில் தேடிப்பார்த்ததில் அம்பர்கிரிஸ்  திமிங்கலத்தின் வாந்தியாம். திமிங்கலத்தின் கழிவாக மலப்புழை வழியாகவும் வெளியேறுவதுண்டாம்.

மாட்டுச்சாணி கோமியம். 
பூனைக்கழிவு தானே புனுகு.
யானை தும்பிக்கையால் அருந்தி உமிழும் நீரே ஆசி, மருந்து என தலையிலே வாங்கி மகிழ்வர்.
குழந்தைகளின் முகத்தில் தும்பிக்கை துப்பும் நீர்.

திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ் மொதல்ல கெட்ட வீச்சம் அடிக்கும். 
துர்நாற்றம் மாறி பின்னர் அதில்
நல்ல சுகந்த நறுமணம் வீசும்.

அம்பர்கிரிஸை பாலியல் சம்பந்தமான மருந்து, மற்றும் வாசனைத்திரவங்கள் தயாரிக்கவும் 
பயன்படுத்தப்படுகிறதாம்.

ஓ, அப்படியா..சரி தான்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொன்னது ஞாபகம் வருகிறது.
"Evidence points out that 
if you raise tariffs too much 
it will increase smuggling."

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.