Share

Jan 11, 2019

நக்கல்


ஒரு வீட்டின் டோர் பெல், வீட்டில் உள்ளவர்களை அழைப்பதற்காக மட்டும் என்று தான் இனணக்கப்படுவது.
எங்கள் அப்பார்ட்மெண்டில் உள்ள நான்காம் வகுப்பு படிக்கும் லிகித் சௌத்ரி மற்ற வீடுகளின் டோர்பெல்லை அழுத்தி விட்டு ஓடி விடுவான். குழந்தைகளுக்கு இது ஒரு த்ரில் விளையாட்டு.
ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஒருவர் ஒரு வீட்டின் டோர்பெல்லை ஒரு சிறுவன் அழுத்த முடியாமல் எட்டி, எட்டி தவிப்பதைப் பார்த்து விட்டு, உதவி செய்ய வந்திருக்கிறார். ”இரு நான் ஸ்விட்சை அழுத்துகிறேன்.” பையன் “Thank you” சொல்லியிருக்கிறான். அவர் டோர்பெல்லை அழுத்தியவுடன் சிறுவன் பரபரப்பாக சொல்லியிருக்கிறான். ”வாங்க. ஓடிடுவோம்.”
கனடாவில் சமீபத்தில் ஒரு வீட்டின் டோர்பெல்லை ஒரு 33 வயது இளைஞன் மூன்று மணி நேரம் நக்கிக்கொண்டே இருந்திருக்கிறான். வெட்டி ஓழு, நித்திரைக்கேடு. எதற்கு மூன்று மணி நேரம் நக்க வேண்டுமோ? தலையில ஓத்த விதி. சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. வீட்டிற்குள் குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்திருக்கின்றன. குழந்தைகளின் அம்மா அப்போது இல்லை. வெளியே போய் இருந்திருக்கிறார். அந்த அம்மாவுக்கு பின்னால் ஒரு நிம்மதி.
“ பாருங்க. அவன் எதையும் திருடல. யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்கல.”
டோர்பெல்லை மூனு மணி நேரம் நக்கி விட்டு வீட்டு தோட்டத்தில் சுகமாக டூ டாய்லட், ஒன் டாய்லட் பண்ணி விட்டு அவன் போயிருந்திருக்கிறான். ரெண்டுக்கு போனாலே ஒன்னுக்கும் போகத்தானே செய்யும்.
விசித்திர விஞ்ஞானி கோவை ஜி.டி நாயுடு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இவர் டாய்லட் போகும்போது ஒரு விஷயம் கவனித்திருக்கிறார். முதலில் சிறுநீர் போய் இருக்கிறது. அப்புறம் மலம் வெளியேறியிருக்கிறது. தொடர்ந்து இதைக்கவனித்த அவருக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
சிஸ்டத்தை மாற்ற வேண்டும். ஆமா. சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று ரஜினி மாதிரியே  ஜி.டி.நாயுடு அன்றே முடிவு செய்திருந்திருக்கிறார்.
அதன் படியே சிஸ்டத்தை மாற்றி தான் அதன் பிறகு he was relieving himself. இதை அப்புறம் ஒரு டாக்டரிடம் சொல்லியிருந்திறார். அவர் “ ஏங்க சிஸ்டத்தை இப்படி மாத்துறீங்க. இயல்பா அத போக விட்டுடுங்க. சும்மா லூஸ்ல விடுங்க..” என்று அறிவுறுத்தியிருக்கிறார். அப்புறம் தான் பழைய சிஸ்டப்படியே காலைக்கடனை முடித்து வந்தாராம்.
மலச்சிக்கல் உள்ள ஒருவன் ஒரு பாலத்தின் கீழே உட்கார்ந்து முக்கி, முக்கி பார்த்திருக்கிறேன். ஒரு புழு பூச்சி கூட வரவில்லை. அந்த நேரம் பாலத்தின் மேல் வந்து ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். இவன் நிமிர்ந்து பார்க்கவும் அவன் விட்டை போடவும் சரியாய் இருந்திருக்கிறது. மலச்சிக்கல்காரன் தலையிலேயே தான் பாலத்தின் மேல் இருந்தவன் பேண்ட பீ விழுந்திருக்கிறது. இவனுக்கு மேலிருந்து பேண்டவன் மேல் கோபம் வரவில்லை. பேல மறுக்கும் தன்னுடைய குண்டியை ஓங்கி ஓங்கி அடித்து அடித்து மேலே பார்த்து “ அது அல்லவோ குண்டி, அது அல்லவோ குண்டி..குண்டின்னா குண்டி அதுவல்லவோ குண்டி!” என்று பாராட்டினானாம்.
’வானத்தில் திரியும் பறவைகளை பற்றி மட்டும் பாடாதீர்கள்.
மலத்தில் நெளியும் புழுக்களையும் பாடுங்கள்.’
- ஐம்பது வருடத்திற்கு முந்தைய ஒரு புதுக்கவிதை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.