Share

Aug 22, 2018

’எச்ச’ எங்கெங்கும், எப்போதும்,



மனுஷ்ய புத்திரன் மீது ஹெச்.ராஜா பாய்ந்திருப்பதை அறியும் போது எனக்கு 2002ம் ஆண்டு நினைவுக்கு வந்தது. இந்த மாதிரி எச்சத்தனம் அரசியல் உலகில் மட்டுமல்ல முதிர்ந்த ஞான இலக்கிய சாகரத்திலும் உண்டு. எங்கெங்கும், எப்போதுமான சாசுவத விஷயம்.
ஊட்டி நாராயண குருகுலத்தில் ஜெயமோகன் ஒரு எதிர் அழகியலை( தளையசிங்கத்தின் “ தொழுகை” சிறுகதை) முன்வைத்த போது நான் ஒரு எதிர் அழகியலை முன் வைத்தேன். அது ஏற்படுத்திய சர்ச்சை அப்போது பிரபலம். நான் எழுதிய “ ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை” திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில் வாசித்தேன். அந்த கட்டுரை லாஸ் ஏஞ்சல்ஸ் இணைய இதழ் திண்ணை.காம், காலச்சுவடு 42வது இதழ் இரண்டிலும் அவரவர் வசதிக்கு எடிட் செய்யப்பட்டு வெளி வந்தது. அப்போது மனுஷ்யபுத்திரன் காலச்சுவடு ஆசிரியக்குழுவில் இருந்தார்.
சொல் புதிது 10வது இதழின் தலையங்கத்தில் ஜெயமோகன் 'காலச்சுவடு அனுப்பிவைத்த ஒற்றன் தான் ராஜநாயஹம்' என்று எழுதிய கையோடு தன் பூர்வீகப் பார்வையுடன் 'ராஜநாயஹத்தின் கட்டுரையை வாசிக்க இடம் கொடுத்த அமுதன் அடிகளும், (கிறிஸ்துவ பாதிரி) கட்டுரையைப் பிரசூரித்த மனுஷ்ய புத்திரனும் (முசல்மான்) தங்களது மதக் காழ்ப்புணர்வின் காரணமாகவே இந்து நிறுவனமான நாராயண குருகுலத்தின் மீது தாக்குதல் தொடுத்ததாக துப்பறிந்து எழுதியிருந்ததை இப்போதும் மறக்க முடியுமா?
ஒரே ரகம் தான். ஒரே முகம்.
Both are cut from the same cloth. They are two peas from the same pod.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.