Share

Jun 17, 2017

What to do with the time given?


சார்த்தரின் நாடகம் No Exit. மீளமுடியுமா? என்ற பெயரில் தமிழில் வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்த பழைய க்ரியா வெளியீடு.

இந்த நாடகம் அந்தக்காலத்தில் மு. நடேஷ், கலைராணி நடிப்பில் அரங்கேறியதுண்டு.

வெளியேற வழி இல்லை.
புலி வாலைப்பிடித்தாற் போல என்று ஒரு சொலவடை.

நரகம் என்பது மற்றவர்கள் தான். பிரச்னையற்ற மனித உறவுக்கு வழியேயில்லை.

மற்றவர்களும், போலி மனசாட்சியும் நிரந்தர தொந்தரவு தான்.
எப்போதுமே சீக்கிரமாக சாக வேண்டியிருக்கிறது அல்லது ரொம்ப தாமதமாக காலம் கழித்து. முடிவு பெற்ற வாழ்க்கை ஒன்று உள்ளது. நீ என்பது உன் வாழ்க்கை மட்டுமே.


What to do with the time given?
…………….

’தூண்டில்காரனிடம்
சிக்கி விட்ட மீன்
நாசியில் ஊசி நுழைந்த வேதனையோடும்
புதிய நம்பிக்கையோடும்
மீதி வாழ்வின் முன் வாசலில்
மெல்ல நீந்திப் பார்க்கிறது
பாதியளவு நீர் நிரம்பிய தோள்பையுள்’

- பிரான்சிஸ் கிருபா

“Poetry is written with tears, fiction with blood, and history with invincible ink.”
- ’The shadow of the wind’ – a novel by Carlos Ruiz Zafon.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.