Share

Jun 23, 2017

வித்யாலட்சுமி


திருச்சி முதலியார் சத்திரம். அங்கே ஒரு முதிய பெண்மணி.
இவர் சங்கிலியாண்ட புரத்தில் பல வருடங்களுக்கு முன் இருந்தவர்.
இருட்டினால் எப்போதும் ஒரு
ரொம்ப பழைய காலத்து விஷயத்தை நினைவு கூர்வார்.( 1930களில் நடந்த விஷயம்) 

’ இன்னேரம் இருட்ட ஆரம்பிக்கிற நேரம் எப்பவும் சிவாஜி கணேசனுடைய அம்மா விளக்கு பொருத்த வேண்டி ஒவ்வொரு வீடா போய் ‘கொஞ்சம் விளக்குக்கு எண்ணை கிடைக்குமா அம்மா’ என்று கெஞ்சுவா…..’
அப்போது சிவாஜி உச்சத்தில் இருந்த காலம். 



’குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்’ பாடலில் ஒரு வரி -
 “ராஜாமணி எனும் அன்னை முகத்தில் விளங்கிடும் மங்கலக் குங்குமம்”
தன் தாயை மகாராணியாக்கி விட்டார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய்.

அவருடைய வித்தை – நடிப்பு – அவரை எங்கோ கொண்டு போய் விட்டது. செல்வம், செழிப்பு, புகழ்.

சங்கிலியாண்டபுரத்திலேயே ஒரு சிவாஜி காலனியே இருந்தது. எம்.ஆர்.ராதா காலனியும் கூட.


……………………………………………..

’போடா போடா பொக்கே எள்ளுக்காட்டுக்கு தெக்கே’ ஜானகி பாட்டுக்கு ஒரு கிழவி நடித்திருப்பார். அந்த கிழவியின் கணவர் மணி என்று ஒரு வயசாளி ஒரு விஷயம் சொல்வார்.

சிவாஜி பராசக்தியில் நடிப்பதற்கு முன் இவரிடம் ஏக்கமும் விரக்தியுமாக கேட்பாராம் ‘ மணியண்ணே.. நானெல்லாம் என் வாழ்க்கையில ஒரு நூறு ரூபா நோட்ட கண்ணுல பாப்பனாண்ணே….’

சிவாஜி கணேசனின் பொருளாதார போராட்டமெல்லாம் அவருடைய இருபத்தி நான்கு வயதிற்குள்ளே தான். அதன் பின் வறுமை என்பதை அவர் எங்கே பார்த்திருப்பார்?

பராசக்தி படத்திற்கு பின் வித்யாலட்சுமியின் அருள் பரிபூர்ணமாக கிடைத்து விட்டது. He never looked back.

கற்ற வித்தை மூலம் எல்லோரும் பெரும் சம்பாத்தியம் செய்து விடுவதில்லை. அதற்கு அஷ்டலக்ஷ்மிகளில் ஒருத்தியான வித்யாலட்சுமியின் அருள் வேண்டும் என்பது ஐதீகம்!
சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் ஆகாது என்பார்கள். ஆனால் ’வித்யா லட்சுமி’யில் தான் இருவரும் இணைகிறார்கள். ’வித்யாலட்சுமி’யின் விசித்திர தனித்துவம் இது! 






………………………….

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_21.html

1 comment:

  1. சுக்ர திசை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலத்திற்கு அடிக்கிறது.சிலருக்கு வருவதே இல்லை.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.