Share

Jun 12, 2017

எடடா!


ந.முத்துசாமி இளைஞனாயிருக்கும்போது பாரதி தாசன் மாயவரத்திற்கு ’நடராஜன் வாசகசாலை’யின் ஆண்டு விழாவிற்கு வந்திருக்கிறார்.

பாரதி தாசனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு முத்துசாமிக்கு.

பாரதிதாசனுக்கு உணவு பரிமாறியிருக்கிறார்கள்.
அதில் ஒரு ஈ கிடந்திருக்கிறது. எல்லோரும் பதற்றமாகியிருக்கிறார்கள்.
பாரதி தாசன் அந்த ஈயை தூக்கி போட்டு விட்டு சாப்பிட்டிருக்கிறார்.


”என்னய்யா? கோழி, ஆடு, மீனுன்னு என்னன்னமோ சாப்பிடுறோம்.
ஒரு ஈ உணவில் கிடந்தால் என்ன கெட்டுப்போய் விட்டது?” என்றாராம்.


……………………………



அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா (பின்னாளில் இவர் கல்லூரி முதல்வராய் இருந்தார்) தமிழ் வகுப்பில்
“ கொலை வாளினை எடடா! கொலை வாளினை எடடா......!
கொலை வாளினை எடடா!
மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா!”
என்று உணர்ச்சிகரமாக பாரதி தாசன் கவிதையை சொன்ன போது
நான் வயதின் துடுக்குத்தனத்தோடு சொன்னேன் : “ஐயா! டா போடாதீங்க.. எடடான்னு. கொஞ்சம் மரியாதையா கொலை வாளினை எடுங்கன்னு சொல்லுங்க..”


……………………….

"எண்ணம் தானே கொப்பளிக்கிறதா, இல்லை நான் கல் விட்டெறிகிறேனா என்பதிலேயே தெளிவில்லை என்னத்தைச் சொல்ல" – பாதசாரி

.................................

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/04/blog-post_19.html

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.