Share

Jun 5, 2012

Carnal Thoughts - 31

http://fc08.deviantart.net/fs43/f/2009/098/c/6/Voyeurism_by_SamuraiSunshine.jpg   

Voyeurism

அறுபது வயது தாண்டிய பெண்கள் நான்கைந்து பேர்  ஓய்வாக பேசிக்கொண்டிருந்த போது சுப்பாத்தாக்கிழவி செய்த லூஸ் டாக்.

”என் மாமியா பேச்சிக் கிழவி ஈன சிறுக்கி.நான் கொஞ்ச பாடா பட்டேன்.விவஸ்தை கெட்ட முண்ட.  எனக்கு கல்யாணம் ஆனப்ப ராவுல என் புருஷன் கூட இருக்கும்போது சாவி ஓட்டயுல கண்ண  வச்சி பாத்துக்கிட்டே இருப்பா. பொறுத்துப்பொறுத்துப் பார்த்தேன். ஒரு நா அம்புட்டையும் அவுத்துப் போட்டு முண்டக்கட்டயா நின்னேன். நல்லா பாத்துக்கடின்னு”


..............................

”ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை”யில்
 R.P. ராஜநாயஹம்

தாசுவுக்கும் பேபிக்கும் ஏற்கனவே ஒரு கடுமையான மனஸ்தாபம் உண்டு. பேபி அவன் மனைவி வெரோனிக்காவை ஒருமுறை பகலில் புணர்ந்து கொண்டிருக்கும்போது தாசு ஓட்டை வழியாகப் பார்த்திருக்கிறான்.
 
Voyeurism! அப்போது வெரோனிக்கா ஐந்து வினாடிக்கொருமுறை 'இயேசுவே ரட்சியும்' என்று
( முட்டாள் தாசுவின் வார்த்தைகளில் 'பேபி ஏறியடிக்கும்போது ஒவ்வொரு 'குத்து'க்கும் வெரோனிகா ஓரு 'ஏசுவே ரட்சியும்') சொல்லிக்கொண்டிருந்தாளாம். இதை தாசு பலரிடமும் சொல்லிவிட்டான். பேபியையோ வெரோனிக்காவையோ பார்க்கும்போது 'இயேசுவே ரட்சியும்' என்று சின்னப்பையன்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். தாசுதான் ஒளிந்திருந்து பார்த்து இப்படி ஊரே சொல்லி கேவலப்படுத்திவிட்டான் என்கிற விஷயம் பேபிக்கும் தெரிந்தும் விட்டது. இப்போது தாசு கழுதையைப் புணரும் போது பேபி அதைப் பார்த்து விட்டான்.


.....................................................................

மனுஷ்ய புத்திரன் கவிதை கீழே

அந்தரங்கம்

எனக்குத் தெரியும்

ஓசைப்படாமல்
கதவு திறந்து வந்து

சுற்று முற்றும்
கவனித்துவிட்டு

பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஒரு ஜோடிக் கண்களை

........................................

கலாப்ரியாவின் ’விகார புஷ்பங்கள்’ கவிதையிலிருந்து

பொலி காளைகளைச்
செக்கு மாடாக்கு
இனி பசுக்களின்
வீதியோரக் கருவுறுதல்;
நான்கு பிள்ளைகள்
வேடிக்கைப் பார்க்க
இல்லையெனக் கவிதை எழுது.
( பாரதியிடம் தொனியைக்
கடன் வாங்கி )

.....................
இடாலோ கால்வினோ வின் "If on a winter's night a Traveller " நாவலில் ஒரு காட்சி

மியாகி சீமாட்டி என்னைப் பின்புறமாக பற்றி, என்னை பாயில் படுக்க வைத்தாள். அவள் மகள் மகிகோவை புணர்வதாக நினைத்துக்கொண்டு நான் மோகப் பெருக்கில். “மகிகோ“ என்று கத்தினேன். பாதி திறந்திருக்கும் கதவின் பின் முழந்தாளிட்டு மியாகியின் மகள் தலையை சாய்த்து பார்த்துக் கொண்டு இருந்தாள். தன் அம்மாவையும் என்னையும் கண் விரித்துப் பார்க்கிறாள் மகிகோ. நான் கத்தியதால் தான் ஓடிவந்திருக்கிறாள். தாழ்வாரம் தாண்டி
இன்னொரு உருவம். மியாகியின் கணவன் - மகிகோவின் அப்பா -  மிஸ்டர் ஒகேடா பார்த்துக்கொண்டிருந்தார்.நான் அவரை கவனித்த போது பின்னிப் படர்ந்திருக்கும் என்னையும் தன் மனைவியையும் பாராது , எங்களை ஓளிந்து பார்த்துக்கொண்டிருக்கும் தன் மகளை வெறித்து நோக்கினார். அவரது சில்லிட்ட கண்ணி்லும்,சுளித்த உதட்டிலும், மகிகோவின் பார்வையிலும்கூட பளிச்சென்று தெரிந்தது என்னவென்றால்,மியாகி சீமாட்டியின் orgasm தான்!

-

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.