Share

Oct 9, 2009

Carnal Thoughts-25


In the twinkling of an eye
- The Merchant of Venice.
கண் அடிப்பது என்பது காமத்தின் பிரதான சமிக்ஞை . ஆயிரமாயிரமாண்டு மரபுத்தொடர்ச்சியின் காம வெளிப்பாட்டுக்கான குறியீடு .
'காதல் விழிக் குறிப்பு' -குயில் பாட்டில் பாரதி.
திருவள்ளுவர் காமத்துப் பாலில் ' அவள் கண்ணடித்தாள்'என்பதை சொல்லும் விதம் " ஒரு கண் சிறக்கணித்தாள் "
கலவி செய்யும்போது வெளிப்படும் ' ஆ .. .. யம்மா .. ஐயோ ..ஹா .. ஹம்மா ..ராட்சசா ..ராட்சசி ..' என்ற சொற்கள் அப்போது தரும் பொருள் என்ன ? '' பாதி நடுக்கலவியிலே காதல் பேசி ..'' என்று பாரதி கூறுவது அனிச்சையாக வெளிப்படும் இந்த வார்த்தைகளைத்தானா ?!
'பல்லு போன பசு ஒன்று பசும்புல்லை நக்கி சப்பி ,சப்பிப் பார்ப்பதைப் போன்ற முடிவில்லா அறுசுவை தான் காமம் 'என சங்கக் கவிதை சொல்லும் .
கலவியின்பத்தை விட ஊடல் இனிமையானது - வள்ளுவன் வாக்கு " காமம் புணர்தலின் ஊடல் இனிது ''
கண்ணடித்தல் , பாதி நடுக்கலவியிலே காதல் பேசுவது , ஊடல் இவையெல்லாமே கலவியின்பத்தின் Sister concerns.

"the beast with two backs" meaning intercourse in Shakespeare's play Othello.
உடலுறவு என்பது ரெண்டு குண்டி கொண்ட மிருகம் - "the beast with two backs"ஷேக்ஸ்பியர் கண்டுபிடித்த Phrase!

Iago tells Brabantio:
Your daughter Desdemona and Othello are now making the beast with two backs.

1 comment:

Note: Only a member of this blog may post a comment.