Share

Oct 6, 2009

நடிகை விஜயகுமாரி



நடிகை விஜயகுமாரி பேட்டி சமீபத்தில் கலைஞர் டி வி யில் பார்க்க நேர்ந்தது . இளமை இவரிடம் எப்படி இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அவர் காலத்து சரோஜா தேவியை விட இப்போது ரொம்ப அழகாக தெரிகிறார். கே ஆர் விஜயா தொப்பையும் ,தோற்பையுமாக கழன்று போய்விட்டார் .பின்னால் வந்த ஜூனியர் நடிகை 'கலர்' காஞ்சனா இப்போது முழுக்கிழவி . ராஜஸ்ரீ யும் உருக்குலைந்து போன நிலை . இவ்வளவு ஏன் இவர் கதாநாயகியாய் நடித்த ஜீவனாம்சம் படத்தில் அறிமுகமான லக்ஷிமியை இப்போது கமலின் ' உன்னைப்போல் ஒருவன் ' படத்தில் காண சகிக்கவில்லை.
இன்று கடந்த சிலவருடங்களுக்கு முன் வந்த நடிகைகளே எத்தனை பேர்
குண்டி, கை,நெஞ்சி,மூஞ்சி சுருங்கி வத்திப்போய் அல்லது ஊதிப்பெருத்து யாளி போல விகாரமாக தோற்றமளிக்கிறார்கள்.
ஆனால் விஜய குமாரி அப்படியே இளமையுடன் இருக்கிறார்!




'எங்க வீட்டுக்காரர் ' என்று எஸ் .எஸ் . ஆர் பற்றி இன்னமும் குறிப்பிடுவது சோகம் தான் . அவர் எப்போதோ முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இவரை விட்டு விட்டு தாமரை செல்வி என்ற பெண்ணை மணந்து பிள்ளை குட்டி என்று ஒதுங்கி விட்டார் . அல்லது விஜயகுமாரி ஒதுங்கிகொண்டதால் மூன்றாவது திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார் என்று கூட சொல்லலாம்.
இலட்சிய நடிகருடன் வாழ்வு கசந்து பிணக்கு ஏற்பட்டதை, பின்னால் பிரிவு தவிர்க்கமுடியாதது என்பதை அவருடைய தலைவர் சி.என். அண்ணாத்துரையிடம் நேரில் தான் விளக்கியதைப்பற்றி அந்த காலத்தில் ஒரு பேட்டியில் நடிகை விஜய குமாரி கூறியிருந்தார் .
விஜயகுமாரி மகன் ரவி நடிகர் விஜயகுமார் மூத்த மகளை (மஞ்சுளா மகள் அல்ல)திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார் .

நிம்மதி இல்லை என்று நடிகைகள் எப்போதும் சொல்வதை டி வி பேட்டியில் விஜயகுமாரி அடிக்கடி சொன்னார் .'தலையில் குத்து ,முதுகில் குத்து , நெஞ்சில் ஏகப்பட்ட குத்து 'என்று அதை அப்படி தன் கையால் குத்தி செய்து காட்டினார். பிரச்னைகள் !The intray is never finished. யாருக்குமே தான் உயிர் உள்ளவரை!

சினிமாவில் செயற்கைத்தனம் , நாடகத்தனம் விஜயகுமாரியிடம் உண்டு. இயல்பாக துருதுருப்பு ,படபடப்பு அதிகம் உள்ளவர் என்பதால் கொஞ்சம் மிகை நடிப்பு . பத்மினி கூட கொஞ்சம் மிகையாகத்தான் நடிப்பார்.
பூம்புகார் படம் பற்றியும் கண்ணகி சிலைக்கு மாடல் தான் தான் என்பதிலும் விஜயகுமாரிக்கு மிகுந்த பெருமிதம்.


இவர் பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர் . ஸ்ரீதர் " கல்யாண பரிசு ".
கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் முதல் படம் " சாரதா " விஜயகுமாரி படங்களில் மாஸ்டர் பீஸ்!
பி . மாதவன் முதல் படம் " மணியோசை " யில் விஜயகுமாரி தான் கதாநாயகி .
ஆரூர் தாஸ் இயக்கிய முதல் படம் "பெண் என்றால் பெண் " படத்திலும் நடித்துள்ளார்.
அன்று பேட்டி கொடுக்கும்போது அவர் நினைவில் வர மறுத்த படம் "ஜீவனாம்சம் ". மல்லியம் ராஜகோபால் இயக்கிய முதல் படம் . அதிலும் இவர் கதாநாயகி .
இன்னொன்று இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெயர் அப்போது படங்களின் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது .

சாரதா ,
சாந்தி ,
ஆனந்தி ,
பவானி
போன்ற படங்கள்.
கற்பகமும் இவருக்கு வந்தது தான் . ஆனால் எஸ் எஸ் ஆர் தனக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கற்பகமாக விஜயகுமாரி நடிக்க அனுமதி தரமுடியும் என்று பிடிவாதம் பிடித்ததால் கே.ஆர். விஜயா என்ற நடிகை கற்பகமாக தமிழ் திரையில் அறிமுகமானார் !
கே எஸ் ஜி " இந்த விஜயா இல்லாவிட்டால் இன்னொரு விஜயா " என்று சவால் விட்டு கே ஆர் விஜயாவை நடிக்க வைத்தார்.

இலட்சிய நடிகை என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள விஜயகுமாரி கொடுத்த விலை இப்படி மிக அதிகம்.

சாவித்திரி , சரோஜாதேவி , பத்மினிபோன்றவர்கள் பிறமொழியில் இருந்து தமிழுக்கு வந்து அளப்பரிய சாதனை புரிந்தார்கள் . அவர்களிடையே தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகை விஜயகுமாரி ஓரளவு சாதனை புரிந்தவர்.


மனோரமா எப்போதும் தமிழக முன்னாள் இந்நாள் முதல்வர்களுடனான தன்னுடைய rapport பற்றி பெரிதாக சொல்லிக்கொள்வார் . ஆனால் விஜயகுமாரி தான் இப்படி பெருமைப்பட்டுக்கொள்ளும் முதல் தகுதி கொண்டவர் . வி . என் .ஜானகி யின் கிச்சன் கேபினட் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் . எஸ் .எஸ் .ஆர் அவர்களின் அப்போதைய அரசியல் ,சினிமா அந்தஸ்து காரணமாக அண்ணாத்துரை , கருணாநிதி , ஜெயலலிதா அனைவரும் இவர் வாழ்வில் முக்கியமானவர்கள்.
பல வருடங்களுக்கு முன் மணியனின் 'இதயம் பேசுகிறது ' வாரப் பத்திரிகையில் இவர் தன் வாழ்க்கை தொடரை பரபரப்பாக எழுதினார் . அப்போது அவர் நெஞ்சில் ,தலையில் ,முதுகில் விழுந்த குத்துகள் பற்றி நிறைய குறிப்பிட்டார் . பகீரங்கமாக.
அவற்றில் ஒன்று : எஸ் . எஸ் .ஆர் எடுத்த மணிமகுடம் திரைப்படம் பற்றியது . வெளிப்புற படப்பிடிப்புக்கு கொடைக்கானல் சென்ற எஸ் . எஸ் .ஆர் . இவரை அந்தப்படத்தில் நடித்த போதும் சென்னையில் ஒதுக்கி விட்டு விட்டு அந்த படத்தில் நடித்த ஜெயலலிதாவுடன் சென்றார் என்கிற விஷயம்.




7 comments:

  1. Dear Gabie!
    I really missed that programme.
    True Great but Sad Lady.
    I used to run around, calling Anniee Anniee, when she came to meet us all in our home with HIM In Madurai and Periyakulam too.
    My mother and her aged sets, loved to adapt her current fashion trends. Times has gone like a sweeping wind.
    Two days before, i met my long time friend, your great Admirer, Ramachandran Arumugam, He talked and talked and talked about you and your blog. We really enjoyed
    talking about your American college life incidents.
    Have a nice time Gabie, and convey our warmest regards to your life parner and beautiful sons.

    Tilakar Marudu. M.
    Chennai

    ReplyDelete
  2. Thank you Tilak! I feel honoured.

    My kind regards to you and your wife.
    You are there in my mind always.

    ReplyDelete
  3. Tilak!

    My best regards to your long time friend Ramachandran Arumugam,my blog admirer!!

    ReplyDelete
  4. மிக விரிவான தகவல்களுடன் தவற விட்ட ஒரு நிகழ்வை பதிவு செய்ததற்கு நன்றி சார்

    ReplyDelete
  5. Dear RP Rajanayahem,

    Thanks a lot sir..I never miss reading your blogs.. it has become one of my every day duties..not to be missed!

    I was overjoyed to know that Tilak whom I met recently after 20 long years is your good friend...
    We spent a lot of time talking about you..

    I really admire and wonder at your vast knowledge and experiences..

    At the same time I have also felt that you have been deprived of your righteous and deserving place in the society..

    Something is terribly wrong somewhere...

    Anyway sir.. I am at least happy now that you have your blog and it is THE NUMBER ONE BLOG..in terms of its contents... this I am sure is the majority of the
    blog visitors opinion..

    I wish sir...you all the best and my humble respects.

    arumugam ramachandran

    ReplyDelete
  6. Please write about other actresses also.

    ReplyDelete
  7. திருமதி விஜயகுமாரியின் நடிப்பு போலீஸ்காரனில்(makal) மிக இயல்பாக இருக்கும்.
    அந்த நாளைய எங்கள் காலத்தவர் அப்படித்தான் இருந்தார்கள்
    இப்போது வேண்டுமானால் மிகையாகத்ட தெரியும்.
    நானும் இந்தப் பேட்டியைப் பார்த்தேன். தனக்குள்ளே அழுந்திவிட்ட ஒரு பேதைப் பெண்தான் தெரிந்தார்.
    வெளியில் வருவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
    அப்படியில்லாமல் கலகலப்பாக இருக்கலாமே என்று தோன்றியது. பாவம்:(

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.