Share

Oct 1, 2009

Nobleness


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக
(23 March, 1947 to 6 April,1949) இருந்தவர்.அப்போது அவருடைய மந்திரிசபையில் மூன்றே மந்திரிகள் தான்.
(பக்தவத்சலம், அவினாசிலிங்கம் செட்டியார், TSS.ராஜன்)

இப்போதெல்லாம் எல்லா மாகாணங்களிலும் பன்னிப்படை மாதிரி.


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அன்றைக்கு அவர் தங்கியிருந்த T .V .ஸ்டேசன் பக்கத்துலே கூவம் ஹவுஸ் வீட்டுக்கு அரசாங்கக் காரை உபயோகப்படுத்தாமல் நடந்தே வீட்டுக்கு வந்தார். இந்த அதிசய நிகழ்வை அந்த தெருவே ஆச்சரியத்தில் வியந்து போய் பார்த்தது.
நேர்மை, நாணயம் நம்மிடத்திலிருந்து தான் வரணும்னு ஓமந்தூரார் சொல்வாராம். சொன்னது மட்டுமல்ல . அப்படியே வாழ்ந்து காட்டியவர்.

....................



ஈ . எம் . எஸ் . நம்பூதிரிபாட் . முன்னாள் கேரளா முதல்வர். அவருக்கு பல்வலி . திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார் . துணைக்கு அவருடைய மருமகள் . க்யூவில் நிற்கிறார் ஈ .எம் .எஸ் . டாக்டரைப் பார்ப்பதற்காக. விஷயத்தை கேள்விப்பட்ட தலைமை டாக்டர் பதறிப் போய் ஓடி வந்து முன்னாள் முதல்வரிடம் க்யூவில் நிற்கவேண்டாம் என்று மன்றாடி , உள்ளே வர அழைக்கிறார் . இவர் மறுத்து விட்டார் . ஒரு மணி நேரம் க்யூவில் நிற்கும்படியாகிறது . பிறகு தான் பல்வலிக்கு சிகிச்சை பெறுகிறார் . இது நடந்தது மார்ச் 18,1998 அன்று . அவர் மரணமடைவதற்கு இரண்டே நாள் முன்னதாகத்தான் இந்த சம்பவம் .
..................


ராஜாஜி முதல் அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாச விளைவுகள் . மந்திரிகள் உடனே கஜதுஜபதாதிகளோடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிளம்ப யத்தனித்த போது ' நீங்கள் யாரும் போகவேண்டாம் . உங்களை வரவேற்கவும் , வசதி செய்து தரவும் , பாதுகாப்பு அளிக்கவும் தான் அதிகாரிகள் கவனம் செலுத்த முடியுமே தவிர ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அல்ல ' என்று தன் சக அமைச்சர்களுக்கு தடை உத்தரவு விதித்து விட்டார் ராஜாஜி . அமைச்சர் பெருமக்கள் வராததால் மிச்சமாகும் பணத்தைக்கொண்டு , கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குத் தாராளமாக,சிறப்பான உதவிகளை செய்யமுடியும் என்று மூதறிஞர் முடிவு செய்தார் .

6 comments:

  1. IDHEY RAJAJI THAN 1967-L TAMILNATTIRKKU NERUPPU VAITHAR.VIZZY.

    ReplyDelete
  2. The leaders you mentioned in your post were moral giants. Now we have only immoral pygmies !

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. தனக்கு லாபமெனில் உலகையே தீயுண்ணக்கொடுக்கும் தலைவர்களைத்தான் காலம் நமக்கு அருளி இருக்கிறது :(

    ReplyDelete
  5. Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now. Keep it up!
    And according to this article, I totally agree with your opinion, but only this time! :)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.