Share

Aug 10, 2009

Survival and Career


வாழும் வகை ஆளுக்கு ஆள் வேறுபடும் .ஒவ்வொரு தொழிலிலும் வெவ்வேறு வகையான போராட்டங்கள் உண்டு . போஸ்ட் ஆபீஸில் வேலை. கஸ்டம்ஸ் வேலை .இரண்டுமே மத்திய அரசாங்க வேலை தான் . என்றாலும் கஸ்டம்ஸ் டிபார்ட்மென்ட்டில் வேலை பார்க்கிறவருடைய அந்தஸ்து சொல்லி தெரியவேண்டியதில்லை .

போலீஸ் வேலை
Round the clock Duty என்றாலும் கஜலக்ஷ்மி அருள் பெற்றது .
Power! அதிகாரம் !!

சாமானியன் வாழ்வு பரிதாபம் .

Survival என்பது டார்வின் தியரியை ஞாபகபடுத்தும் .
வாழும் வகை பற்றி ராஜசுந்தரராஜன் விளக்கம் கீழே :

"நாக்கு தொங்க வாய் நீர் வடிய நாறுகிற திசையெல்லாம் ஓடுது
நாய் .
கரணம் போட்டு கட்டிய வீட்டில்
இருந்து தின்னுது சிலந்தி ."

..
தொழில் சார்ந்து வாழும் வகை பற்றி எம் ஆர் ராதா வின் கிண்டல் - பாலும் பழமும் படத்தில் டாக்டராக நடிக்கும் சிவாஜி கணேசன் நர்சாக நடிக்கும் சரோஜா தேவியை திருமணம் செய்து கொள்வார் . அதற்கு எம் ஆர் ராதாவின் சர்காஸ்டிக் கமெண்ட் :
" டாக்டர் எல்லாம் நர்சை தான் கல்யாணம் பண்ணிக்கணும் ... எஞ்சினியர் எல்லாம் சித்தாளை தான் கல்யாணம் பண்ணிக்கணும் .."


...
"பள்ளிகொண்டபுரம் "நாவல் நீலபத்மநாபனுக்கு பேர் வாங்கி கொடுத்த நாவல். க .நா. சு ., தி ஜானகிராமன் , பாரதிமணியின் துணைவியும் ,க .நா. சு வின் மகளுமான ஜமுனா மாமி துவங்கி இன்றைக்கு நாகார்ஜுனன் வரை பலரால் கொண்டாடப்பட்ட நாவல் .
பள்ளிகொண்டபுரம் நாவலில் பிஷாரடி என்ற கதாப்பாத்திரம் நாவலின் முக்கிய பாத்திரமான அனந்தன் நாயரிடம் திருவனந்தபுரம் டவுன் பஸ்ஸில் சொல்லுகிற வசனம் " வாழ்க்கை ஓரு கரையை போய் அடையவில்லை . என் மூத்த மகனுக்கு பி .ஏ . இல பர்ஸ்ட் க்ளாஸ் இருந்தது . லஞ்சம் கொடுத்து தான் எம் . ஏ .க்கு அட்மிசன் கிடைத்தது . எம் . ஏ . பாசாகி தான் என்ன புரயோஜனம் ? ட்ரான்ஸ்போர்ட்டில் ஓரு கிளார்க் வேலை க்கு லஞ்சம் வகையில் இது வரை ஐயாயிரம் செலவாச்சு ! அடுத்தவன் ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே எம் பி பி எஸ் பாசாகி விட்டு இன்னும் வேலை கிடைக்காமல் அலைகிறான் . ஆமா.. எஞ்சினீரிங் பாசாகி இருந்த உங்க மகனுக்கு வேலை ஆயிட்டுதா ? "


ரொம்ப ஓவர் !
நாவல் எழுதி பிரசுரமான வருடம் 1970!!
எம் பி பி எஸ் படித்து விட்டு ரெண்டு வருடம் வேலையில்லாமல் யாரும் இந்தியாவில் இருக்க முடியுமா ? இந்தியாவில் எந்த மூலைக்கு போனாலும்
doctors won't starve. (சும்மாவா! கல்யாண மார்க்கெட்டில் இன்று கூட டாக்டர் மாப்பிள்ளைக்கு தான் டிமாண்டு அதிகம்.)1970க்கு முன் பி ஏ படிச்சவன் எம் ஏ படிக்க லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்திருக்குமா ? ஒருவேளை கேரளாவில் இவையெல்லாம் சாத்தியமாயிருந்திருக்குமோ ?

2 comments:

  1. Hello sir, how are you?I am very happy that you have started writing again.convey my regards to Mrs.Malar. Mrs.Shanthi.

    ReplyDelete
  2. எனக்கு தெரிந்து 1970ல் கூப்பிட்டு வேலை கொடுத்தார்கள் என்பது உண்மை. கேரளாவில் புரியவில்லையே. MA, MBBS படித்தவர்கள் வெளிநாட்டில் வேலை try பண்ணி உழைத்து கொண்டிருப்பார்கள் கேரளாவில். உள் நாட்டில் வேலை கிடைப்பது easy இல்லையா?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.