Share

Apr 27, 2009

மாத கிம்பள வருமானம் ஐம்பத்து நான்கு லட்சம் .

ஒரு நாள் கிம்பளம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் . இதனால் இந்த வகை வருமானம் மட்டும் மாதத்திற்கு ஐம்பத்து நான்கு லட்சம் . சுமதி ரவிச்சந்திரன் என்ற ரீஜனல் பாஸ்போர்ட் ஆபிசர் இன்று புழல் சிறையில் . கணவர் டாக்டர் ரவிச்சந்திரன் , புரோக்கர் பாத்திமா ( முஸ்லீம் லீக் அப்துல் சமது மகளாம் ) ஆகியோரும் ஸிபிஐ பிடியில். சிறையில் .

..

ராஜபக்ஷே பிடிவாதம் ..

இலங்கை தமிழ் மக்கள் பெருந்துயர் தீர வழி ...??

விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தத்தை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது .

இங்கே தமிழக முதல்வர் காலவரையற்ற உண்ணா விரதப்போராட்டம் ஆரம்பித்து விட்டார் . தேர்தல் நேரம் இன்னும் என்னவெல்லாம் பார்க்கவேண்டியிருக்குமோ ? ஜெயலலிதாவின் எதிர் அதிரடி திட்டம் பற்றி ஹேஷ்யங்கள் ....??

...

மாலை ஐந்து மணி

உண்ணாவிரதத்தை மதியம் முடித்துக்கொண்டார் முதல்வர். ராஜபக்ஷே உள்நாட்டு போரை நிறுத்த சம்மதம் தெரிவித்து விட்டார் என ப .சிதம்பரம் சொன்னாராம் !

கல்லக்குடி போராட்டத்தில் இவர் தண்டவாளத்தில் தலை வைத்த சாகசம் பற்றி வனவாசத்தில் கண்ணதாசன் விரிவாக எழுதியிருக்கிறார் . இது கூட கருணாநிதியின் கல்லக்குடி தண்டவாளம் தான் .

...

சீனாக்காரன் தலையை இலங்கையில் உள்ளே நுழைத்து விட்டதால் அமெரிக்காக்காரன் கரிசனக்காரன் ஆகி விட்டான் .

3 comments:

  1. Mr RPR,
    What's your opinion abt the USA advice to Srilanka..

    It seems Raja bakshe is not bothered abt anyone except his Chinese 'friends'..

    Now that LTTE is beaten and done away with ..
    what is going to happen to all those thousands of
    Tamil civilians..

    ReplyDelete
  2. Wonder what our State politicians will do if Lankan issue is resolved !

    ReplyDelete
  3. அவசரம்.....அவசியம்.....
    மலயாளிகள் நாராயனன்,சிவசன்கர மேனொன்.. விஜய் நம்பியார்(?)..அலொக் ப்ரசாத்.....இந்த 4 பேரையும்,கைது செய்து "விசாரிக்க" வேண்டும்!
    இவர்கள் தமிழர்கலின் வாழ்வை அழித்தவர்கள்...
    பூனைக்கு யார் மணி கட்டுவது?
    ஒரு முறை "சரியாக" விசாரித்தால்,எதிர்காலத்தில்,எந்த கொம்பனும் தமிழனுக்கு எதிராக போகமாட்டான்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.