Share

Oct 14, 2024

R.P. ராஜநாயஹம் எழுத்து - கீதப்ரியன்

கீதப்ரியன் கார்த்திகேயன் வாசுதேவன்:

R.P. ராஜநாயஹம் சார்,

 உங்களுக்கு மீறி இங்கே இலக்கியவாதி, எழுத்தாளர், தத்துவஞானி , அல்லது  கவிஞர் இல்லை,

தவிர தலைக்கனமின்றி முன்னோடிகளை கொண்டாடும் பண்பை உங்களிடம் அனைவரும் படிக்க வேண்டும்.

அபுனைவுக்கும் சாகித்ய விருதுகள் தரப்பட்டுள்ளன,   சாகித்ய விருது உங்களுக்கு தரப்படுவது சரியானது,
சாலப் பொருத்தமானது.

உலக இயல் இசை நாடகங்கள் குறித்து ஒரிஜினலாக மனிதில் இருந்து இங்கே எழுதுவது நீங்கள் மட்டுமே, உங்கள் எழுத்துகள்  க்ளாஸிக் ஆக மாறுகிறது.

நூறாண்டு தாண்டியும் வாசிக்கப்படும் அபுனைவுகள் உங்களுடையது.

உங்களுக்கு கிடைக்காத விருதுகள் விருதுகளே அல்ல என்பேன், இதை எழுத எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

முழுத்தகுதியும் கொண்ட தமிழ் இலக்கியவாதியின் மீதான சாபம் உண்டு,                       அது வாழும் காலத்தில் கொண்டாடப்படாதது, 
அது உங்களுக்கும் நடக்கிறது. 

இந்நிலை நிச்சயம் மாறும்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.