Share

Jun 1, 2023

உள்ளம் உருகுதய்யா

உள்ளம் உருகுதய்யா பாடல் பற்றிய சுவாரசியமான தகவல் இன்று கீதப்ரியன் 
மூலம் தெரிந்தது. இது உண்மை தானா?!
ஆச்சரியம்.
குங்குமம் பத்திரிகையில் 2020ல் 'உள்ளம் உருகுதய்யா' பாடல் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்று இப்போது தான் தெரிய வந்தது.
பெண் எழுதிய பாடல். மரகதவல்லி என்ற ஆண்டவன் பிச்சை. 
கவிஞர் வாலி இவரைப்பற்றி விரிவாக கூறியிருக்கிறார்.

பழனியில் இருந்து மதுரைக்கு ரயில் நிலையத்தில் தகப்பனாருடன் இருட்டு விலகாத அதிகாலையில் வந்து இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து ரிக் ஷாவில் ஏறிய போது முதல் முறையாக டி.எம்.எஸ் கனிவான குரலில் ஒலித்த'உள்ளம் உருகுதய்யா'
பாடலில் சொக்கிப் போனேன். 
இரண்டாம் வகுப்பு படித்த போது தான் முதன் முதலாக அன்று அதிகாலை உருக்கமான இந்த பாடலை 
 ஆறு வயதில் கேட்டேன் என்பது இன்றும் நினைவில் நிழலாடுகிறது.

மதுரையை அப்போது தான் ஆறு வயதில் முதன் முறையாக பார்க்கிறேன். 'உள்ளம் உருகுதய்யா' பாடலையும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.