Share

May 28, 2023

இவரை நினைக்கும்போது ஏன் கண் கலங்குகிறது?


ராஜநாயஹம் - இவரை நினைக்கும்போது
 ஏன் கண் கலங்குகிறது?


"R.P. ராஜநாயஹம்.

சின்ன வயதில் சாந்தி என்றொரு நரிக்குறவர் பெண். அக்காவின் சிநேகிதி. வருடத்திற்கு ஓரிரு முறை எங்கள் கிராமத்திற்கு பாசி மணிகள் ஊசி சீப்பு விற்க வருவார். எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசி ஆசுவாசப்படுத்திக்கொள்வது வழக்கம். பேசிக்கொண்டிருக்கும்போது கையில் மணிகளைக் கோர்த்து பிண்ணிக்கொண்டிருப்பார். கலர் கலராக கோர்த்து எப்படிப் பின்னுகிறார்? சடுதியில் எப்படி மாலையாக மாறுகிறது? ஆச்சரியப்பட்ட பிள்ளைப்பருவம். 

   ஆர்ப்பி சாரின் எழுத்தைப் படிக்கும்போது அந்த ஆச்சரியம் எனக்கேற்பட்டதுண்டு.  
மணிகளைக் கோர்ப்பதுபோல எப்படி லாவகமாக எழுதுகிறார்?
 அதனை முடிக்கும் போது ஒரு மாலையை கட்டிய நேர்த்தி! 

என்னவகை எழுத்து இது?

இலக்கியம், அரசியல், அறிவியல், உளவியல், சினிமா,இசை, ஓவியம்.....என எல்லாவற்றையும் இணைத்து சுவாரஸ்யமாக  ஒரு தேர்ந்த கதை சொல்லியைப்போல....சொல்லும் புதுவகை எழுத்து.

ஓரிரு முறை பார்த்திருப்பேன்.

என் பேரைச்சொல்லிக் கூப்பிடும் அளவிற்கு அவரது நண்பன். நான் செய்த பேறு.

இவரை நினைக்கும்போது 
ஏன் கண் கலங்குகிறது?"

- வாசுதேவன் காத்தமுத்து

Vasudevan Kathamuthu

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.