Share

Feb 3, 2023

ராஜநாயஹம்‌ எழுத்து பற்றி ஷண்முகப்ரியன்

இயக்குனரும் எழுத்தாளருமான, ஷண்முகப்பிரியன், உடல்நல குறைவு காரணமாக மறைவு.

2009ம் ஆண்டு ராஜநாயஹம் எழுத்து பற்றி சிலாகித்து ஷண்முகப்ரியன் 
சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.

Oct 26, 2009
ஷண்முகப்ரியன்
R.P.ராஜநாயஹம் பதிவுகள் பற்றி

ஷண்முகப்ரியன் said... எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் உங்கள் பக்கத்தில் வந்து நிலைத்து விட்டேன்,சார்.
என்னைத் தூண்டிய,எனக்குள் எந்த ஆர்வத்தினையும் தூண்டாத இரண்டு எதிர் முனைகளிலும் உங்களது எழுத்தின் பாணி என்னை ஆட்கொண்டது.
 ஆழமில்லாத இடம் எனக் காலை வைத்தால் ஆளையே விழுங்கிவிடும் ஆழத்தோடு ஓடும் நதி போல உங்களை நம்பிப் படிக்க முடியவில்லை!பரவசமான நன்றிகள்,நண்பரே. 
Friday, 23 October, 2009
ஷண்முகப்ரியன்-நான் ஒரு திரைப்பட எழுத்தாளன்! இயக்குனர்! வெற்றிவிழா, சின்னத்தம்பி பெரிய தம்பி, பிரம்மா போன்று 30 படங்களை எழுதியதும், ஒருவர் வாழும் ஆலயம் போன்று நான்கு படங்களை எழுதி இயக்கியதும் எனது அனுபவங்கள்.

http://rprajanayahem.blogspot.com/2009/10/blog-post_26.html?m=0

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.