Share

Aug 12, 2020

R. P. ராஜநாயஹம் பற்றி திருப்பூர் மா. சரவணன்



திருப்பூர் மா. சரவணன் பார்வையில் 

R. P. ராஜநாயஹம் பற்றிய மதிப்பீடு 


'முதல் முதலாக கனவு கூட்டத்தில் வாசித்த "தளையசிங்கத்தின் தொழுகை" கட்டுரையும்

 அதை நண்பர்கள் அனைவருக்கும் பிரதியெடுத்துக் கொடுக்கும் போது 

எனக்கும் ஒரு பிரதி என்று தான் பழக்கம்!.


மனிதரின் அறிவைக் கண்டு எப்பொழுதுமே 

ஒருப் பிரமிப்பு உண்டு.பிறகு ஒவ்வொருக் கூட்டத்திலும் ஒவ்வொருக் கட்டுரைப் பிரதியென்று இன்னும் கூட என்னிடம் 

ஒன்றிரண்டுப் பிரதிகள் உள்ளது.


அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பை பூணூல் என்று தள்ளி வைக்க விழைந்த 

என் இடதுசாரி நண்பர்களின் மூலமாக இழந்தேன்.


இடையிடையில் வழியில் பார்க்கும் போதுக்கூட அவ்வளவுப் பெரிய மனுஷனிடம் என்ன பேசுவது என்று கவனிக்காததுப் போல 

கடந்துவிடுவது வழக்கம்.


அவ்வளவு அறிவிலும் உணர்வுப்பூர்வமாகப் பேசுவது..ஆச்சர்யத்தைத் தரும்.


ஒருமுறை சுரா படித்தவர்கள் அனைவரும் எழுதியே ஆகவேண்டுமா என்று கேட்டதையும் தான் அதிகம் படிப்பது மட்டுமே எழுதுவதில்லை என்றும் கூறிய ஞாபகம்.


இவ்வளவு அறிவுள்ளவர்கள் எல்லாம் எழுதாமலிருக்கும் போது நாமெல்லாம் எழுதக் கிளம்புகிறோமே என்ற குற்ற உணர்வில் சிறிதுகாலம் எழுதாமல் கூட இருந்தேன்...


அவரின் அலைக்கழியும் வாழ்வு 

திருப்பூரில் தான் முற்றுப்பெற்றிருக்கும் 

என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..


இன்றும் சென்னை என்று தொடர்கிறதுப் போல. 


 கிரா சொன்னதுதான் 

இந்த நள்ளாத்துக்காரன் இனியேனும் 

கருணை காட்டட்டும்.பல்லாண்டு!(...அப்படி நானும் ஒரு ஞாபக குறிப்பு எழுதிட்டேன் உங்களப்பத்தி😜.)'


....



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.