Share

Aug 28, 2020

ஜம்பம்



ஒரு திருமணம். 

பெண், மாப்பிள்ளை இருவருக்குமே 

இரண்டாவது திருமணம். 


இருவருமே ஏற்கனவே விவாக ரத்து பெற்றவர்கள்.


 பெண் தான் எனக்கு உறவு. 


அதே ஊரில் பெரிய திருமண மண்டபத்தில் அவளுடைய முதல் திருமணம் 

ஐந்து வருடம் முன் தடபுடலாக நடந்திருந்தது.

இந்த இரண்டாவது திருமணம் 

அவள் பெற்றோருக்கு மட்டுமல்ல 

உறவினர் எல்லோருக்கும் 

ஆசுவாசத்தை தந்திருந்தது. 


திடீரென்று பெண்ணின் தகப்பனாரும் மற்றவர்களும் என்னை வாழ்த்தி பேச சொன்னார்கள். 

ஏற்கனவே பெண்ணின் தாத்தா, 

தாய் மாமன் பேசியிருந்தார்கள். 


நான் பேசினேன் " இது வழக்கமான கல்யாணம் அல்ல. ஒரு மீட்சி. Second Marriage is a grand success after a miserable experience.... 

a resurrection from the worst sorrow "


தொடர்ந்து பையனின் பெற்றோர், பெண்ணின் பெற்றோர் இவர்களுக்கு மன ரீதியாக ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து, 

பெண், பையன் இருவரின் கடந்த கால கசப்பு,

மன உளைச்சலுக்கும் இந்த மணவாழ்க்கை 

ஒரு விடுதலை என்பதையும் கூறி

 மணமக்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தேன். 


பெண்ணின் அம்மா,சித்திமார்களுக்கு முகம் விளங்கவில்லை. 'இதையேன் பேசணும் '


மாப்பிள்ளை வீட்டில் அவருடைய அக்கா இந்த பேச்சுக்கு பின்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம். "இது என்ன இப்படி பேசிவிட்டார். 

நாங்க பெண்ணுக்கு இது இரண்டாம் கல்யாணம் என்பதை எங்க தாய் மாமா குடும்பத்திற்கே தெரியப்படுத்தவில்லை. 


நாங்க பத்திரிகை கொடுக்கும் போது

 எங்கள் சொந்தக்காரர்கள் யாருக்குமே 

பெண் ஏற்கனவே திருமணமாகி விவாக ரத்து பெற்றவர் என்பதை மறைத்து தான் அழைத்திருந்தோம். 


எங்க தம்பிக்கு புதுசா ஒரு பெண் தான் என்று எங்க உறவெல்லாம் நம்பியிருந்தவங்க இனிமே 'பெண்ணும் உன் தம்பி மாதிரி ஏற்கனவே கல்யாணம் ஆனவள் தானாமே' என்று எங்களை குத்தி குத்தி கேட்பாங்களே. 

எங்க கௌரவமே போச்சே. 

எங்களுக்கு கேவலமாயிடுச்சு.

ஏன் இவர் இப்படி பேசினார்? யார் இவரு?

எப்படி இப்படியெல்லாம் பேசலாம்.... " 

பையனின் அக்கா சங்கு சக்கர சாமி வந்து

 திங்கு திங்குன்னு ஆடிய கதையாய் 

பெண் வீட்டாரிடம் ஆடி தீர்த்து விட்டடாராம். 


மாப்பிள்ளையின் அக்கா எடுத்த எடுப்பிலேயே எப்படி பெண் மீது சேறு அடிக்கிறாள். 

தம்பி மனைவி இவளிடம் என்ன பாடு படுவாள். 

Social stigmaவின் ஊற்றுக்கண்ணே இவள் தான். 


மணப்பெண் வாழ்க்கையை 

எப்படி தங்கள் வசதிக்கு திரிக்க முடியும்? 

பின்னால், ஏற்கனவே இந்த பெண் திருமணமானவள் என்கிற விஷயம்

 மாப்பிள்ளையின் தாய்மாமனுக்கும், இவர்களுடைய ஏனைய உறவுகளுக்கும் 

 தெரியவராமலா போய் விடும்? 


முழு பூசணிக்காயை காலாகாலத்திற்கும் 

மறைக்க முடியும் என்ற 

ஜம்பம், வரட்டு கௌரவம். 

Hypocrisy. False prestige. 


கண் மூடிக்கொண்ட பூனைகள். 


மாப்பிள்ளையின் பிராமண நண்பரின் மனைவி என்னிடம் வந்து

" என்ன இப்படி .. உங்க பேச்சு 

அவாளை ரொம்ப கோபப் படுத்திடுச்சு "


மாப்பிள்ளை வீட்டாருக்கு கோபம்... 

அதனால் பெண் வீட்டாருக்கும் 

ரொம்ப கோபமும் வருத்தமும் ..


ஊர் வந்து சேர்ந்த பின் பெண்ணின் அப்பா              போனில் தன் மனஸ்தாபத்தை வெளியிட்டார்


....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.