Share

Nov 8, 2019

காவிச்சாயமும், ஆளுமையான தலைமைக்கு வெற்றிடமும்

’நானும் திருவள்ளுவரும் காவிக்குள் சிக்க மாட்டோம்’ என்று ரஜினி சொல்லியிருப்பது பெரும் வதந்தி ஒன்றிற்கு முற்றுப்புள்ளி என்றே சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் அரசியலில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் என்று அவர் சொன்ன போது ’அரசியலில் ஏற்கனவே குதித்து விட்ட கமல் ஹாசனையும் சேர்த்துத் தான் சொல்கிறாரா?’ என்று எந்த சேனலிலிருந்தும் ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை.
ஸ்டாலினையும் எடப்பாடியையும் குறி வைக்கும் விஷயம் ஆளுமையான தலைமை வெற்றிடம் என்ற வார்த்தை.
பாலச்சந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் ரஜினியும் கமலும் ஒருவரை ஒருவர் பற்றி பாசப்பிணைப்போடு பேசிய விஷயங்கள்.
ரஜினி பேசும்போது கமல் அரசியலுக்கு வந்தாலும் சினிமாவை விட மாட்டார் என்ற அர்த்தத்தில் பேசினார். அரசியல் வெறுத்துப்போய், அரசியலில் தோற்றுப்போய் சினிமாவுக்கே திரும்பி விடுவார் என்கிறாரோ என்னமோ?
கமல் தீவிர அரசியல் ஈடுபாட்டுடன் இருக்கும் போது இன்னும் உள் நுழையாத ரஜினி தலைமை வெற்றிடம் பற்றி தீர்மானமாக சொல்கிறார்.
இந்த தலைமை வெற்றிடத்தை நிரப்புவதில் கமலின் பங்கு எப்படி என்று ஒருவரும் கேட்கவில்லை. கேட்டிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.