Share

Apr 23, 2015

INTEGRITY



வருடம் 1999.டெல்லி தெற்கு லோக் சபா தொகுதியில் போட்டியிடும் மன்மோகன் சிங்.

தேர்தல் செலவுகளுக்கே நெருக்கடி.

 குஷ்வந்த் சிங் உதவ முடியுமா என்று தன் மகளுடைய கணவரையே அனுப்புகிறார்.

அரசியல் உலகம் பற்றி எந்த ‘ஜீவித அறிவாளி’க்கும் உள்ள ஆயாசம் குஷ்வந்த் சிங்கிற்கும் உண்டு என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் அந்த ஆயாசம் அவருக்கு ஆச்சரியமாகிப்போனது.

முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர், இந்திய அரசில் முன்னாள் நிதி அமைச்சராய் இருந்த மன்மோகன் சிங் இரண்டு லட்சம் கடன் கேட்கிறார்! குஷ்வந்த் சிங் அந்தத்தொகையை உடனே கொடுத்தனுப்புகிறார்.
Manmohan Singh participated in direct elections only once. That was in 1999 from South Delhi.
அந்த தேர்தலில் மன்மோகன் சிங் தோற்றுப்போகிறார். சில நாட்களில் மன்மோகன் சிங்கிடமிருந்து போன். உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கமுடியுமா என்று குஷ்வந்த் சிங்கிடம் கேட்கிறார். மன்மோகன் சிங் வந்து ஒரு பாக்கெட்டை கொடுக்கிறார். “நான் உங்களிடம் வாங்கிய தொகையை செலவு செய்யவேயில்லை.” இவருடைய மருமகனிடம் குஷ்வந்த் கொடுத்த அந்த இரண்டு லட்சம்! That kind of thing no politician would do!




http://rprajanayahem.blogspot.in/2014/03/khushwant-dies.html

http://rprajanayahem.blogspot.in/2014/04/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_13.html

http://rprajanayahem.blogspot.in/…/amrita-sher-gils-self-po…


.........................


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.