Share

Jan 26, 2009

The incarnation of Good

Mangalore Pub Assault

சிவ சேனா ,நவ நிர்மான் சேனா கேள்விப்பட்டிருக்கிறீர்கள் . இப்போது கர்நாடகத்தில் ஸ்ரீ ராம் சேனா என்று ஒன்று பற்றி தெரிந்து கொள்ளுங்கள் . Self-styled moral police force!

Amnesia ( பெயரின் அபத்தம் ! இதை மறக்க முடியுமா?) என்ற ரெஸ்டாரன்ட் . ( barஎன்று சொல்லவேண்டுமா) மங்களூரில் . அதில் கூடியிருந்த இளம் பெண்களை , வாலிபர்களை ஸ்ரீ ராம் சேனா கலாச்சார காவலர்கள் மிக கடுமையாக தாக்கி பண்பாடு காத்திருக்கிறார்கள். பெண்களை அடிக்கும் வீரமிலா நாய்கள். ஈனப்பிறவிகள்.

People believe themselves to be the incarnation of good
have a distorted view of the world.
- Todorov

நாற்பது சேனாக்காரர்களில் ஒரு பத்து பேரை கடமையே என கர்நாடக அரசு சலிப்போடு கைது செய்து 'பிரச்சனை யை விடுங்க' என்கிறது .

இந்த தாலிபன் போக்கு பஜ்ரங்தல் , விஹெச்பி , சிவ சேனா , நவ நிர்மான் சேனா மட்டும் தான் என எண்ணிவிடக்கூடாது .தமிழகத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி , விடுதலை சிறுத்தைகள் , திராவிடகழகம் , ஏன் எல்லா அரசியல் கட்சிகளிடமும் அவற்றில் இருப்பவர்களிடமும் பரவி இருப்பது தான் .

சினிமாவில் சிகரெட் புகைக்கும் சீன் இருப்பது தவறில்லை என்று இப்போது தீர்ப்பு நீதிபதிகள் வழங்கி விட்டார்கள் .அன்புமணியின் முட்டாள்தனத்திற்கு சவுக்கடி .( என்னிடம் புகை பிடிக்கும் வழக்கம் , மது அருந்தும் பழக்கம் கிடையாது ,சீட்டு விளையாட்டு எதுவும் கிடையாது )

திருமாவளவன் ' காங்கிரசை தமிழகத்தில் வேரோடு வெட்டி சாய்ப்பேன் ' என்பது கூட தாலிபான் குண கூறு தான் .( நான் காங்கிரஸ் காரன் கிடையாது )

தங்க பாலு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என மிரட்டுவது கூட கலாச்சார காவல் பண்பே .

பிராந்தி ,விஸ்கி குடிக்கலாம் , பனைமரப்பால் கள்ளுக்கடை கூடாது என்பது கூட முட்டாள் தனமான பாசிசம் அன்றி வேறன்ன ?

5 comments:

  1. அருமை ரொம்ப ரொம்ப :-)

    ReplyDelete
  2. Well done RPR sir ! India is not Taliban land, moral policing is absolutely wrong and condemnable.

    ReplyDelete
  3. மிக யதார்த்தமாக ஆனால் மிகச் சுகமாக எழுதும் ராஜநாயஹம் அவர்களுக்கு வணக்கம்.
    உங்கள் பதிவை விடாமல் விரும்பிப் படிக்கும் ரசிகர்களுள் நானும் ஒருவன். வெறுப்பு, பாரபட்சம், ஒருகண்பார்வை இல்லாது எழுதுகிறீர்கள்.
    மங்களூர் மதுச்சாவடியில் நடந்த கலாட்டாவை வைத்து நமது டி.விக்கள் அடிக்கும் கூத்துக்கு நீங்களும் துணைபோவது ஆச்சரியமாக இருக்கிறது.
    தாய்-தந்தையர் பேச்சை, அறிவுரையை அலட்சியம் செய்து மதுவுண்டு, மதி இழந்து மானம் இழந்து கூத்தாடும் பெண்களை யார் திருத்துவது? பெண்கள் கெட்டால் நாடே அழிந்துவிடுமே! வரலொட்டி ரங்கசாமியின் ஒரு சிறுகதை மெய்யாகிக் கொண்டுவரும் இந்நாளில், பெண்களின் மதுக்கலாசாரத்துக்கு எதிர்ப்பிரசாரம் செய்வதற்கு ஏன் ஆளில்லை?
    சு. கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  4. Sir! S.

    You are also "One among The incarnation of Good"

    ReplyDelete
  5. Well said RP sir. We Indians tend to be righteous all the time. But we never look inward to see the shit in ourselves. The utter feeling of helplessness is driving me crazy. The suicide of Muthukumar for example, happened due to the in ability for a common citizen to come out and speak against the government and they choose a extreme way. Tagore rightly said ' if they is another birth as these scriptures, let only the holiest of holies be born in this land and I dont want to be bron again in this country' God i hate this fucking country.
    -Kannan

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.