Share

Oct 3, 2008

Carnal thoughts -5

பழம் பெரும் நடிகை  மிகவும் அழகானவர் .
இயக்குனர் குள்ளமானவர் . மிகவும் உணர்ச்சி வசபடுபவர் .படம் பார்க்க வரும் பெண்களை பிழிய பிழிய அழ வைத்து விடும் பரா ’அக்கிரமம்’ நிரம்பியவர்.
இந்த நடிகையை வைத்து படம் எடுக்க வாய்ப்பு கிடைத்த போது அந்த இயக்குனர் தன் மனக்கிடங்கை வெளியிட்டிருக்கிறார்.
"நான் அந்த பெரிய இயக்குனர் வசனகர்த்தாவாக இருந்த காலத்தில் அவரிடம் உதவியாளனாக இருந்த போதே உன்னை நினைத்து ஏங்கி தவித்திருக்கிறேன் . உன் உடல் மீது தீராத மோகம் எனக்கு . என் உடம்பு தகிக்கிறது . அணையா நெருப்பை நீ என்னுள் விதைத்து விட்டாய் ."
அந்த நடிகை ' பூ இவ்வளவு தானா ! உடனே ஓட்டலில் ரூம் புக் பண்ணுங்க . இன்னைக்கே ' - இப்படி விளம்பியிருக்கிறார் .
அன்றிரவு நல்ல ஓட்டலில் ரொம்ப நல்ல ரூமில் இருவரும் உடனே உடனே படுக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள் .
அந்த நடிகையின் செல்ல பெயரால் அழைத்து இயக்குனர் சொல்ல ஆரம்பித்தார் ஒரு புது திரைகதையை " நீ தான் இந்த கதையில் நாயகிக்கு கச்சிதமாய் நிற்க முடியும் ."
சாதாரணமாக இயக்குனர், ஷூட்டிங் நடத்துகையில் உருக்கமான காட்சிக்கு செட்டிலேயே எல்லோர் முன்னிலும் கூச்சமின்றி அழுது விடும் சுபாவம் உள்ளவர் .
இந்த கதையின் நாயகி நீ தான் என்று ஆரம்பித்தவுடன் நடிகையும் கதையில் ஒன்றி விட்டார் .
இருவரும் கலைஞர்கள் .விரிவாக கதை சொல்லல் தொடர்கிறது
இயக்குனர் நெஞ்சை உருக்க கதை சொல்லும்போதே தேம்பி அழ , அந்த நாட்டிய தாரகையும் விக்கி விக்கி அழ ..................
விடிந்து விட்டது !
விடிந்தே விட்டது !!
சரீர சம்பந்தம் "அன்று" நடக்கவில்லை .
அன்று தான் நடக்கவில்லை .
கிணத்து நீரை வெள்ளமா கொண்டு போய் விடும் . அப்புறம் சாகவாசமாக இன்னொரு நாள் ஓட்டல்லே ரூம் போட்டு வெட்டிகதை பேசாமல் கவனமாக கதை நடத்தினார்கள் .

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.