Share

Sep 30, 2016

துற...



என் பள்ளிப்படிப்பு திருச்சி செயிண்ட் ஜோசப்’ஸ்.
சேசு சபை பாதிரிகள் தான் பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸ், சென்னை லொயோலா ஆகிய கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள்.
பாதிரியார்களின் டைனிங் ஹாலில் எட்டிப்பார்த்திருக்கிறேன். பழங்கள் வித,விதமாக டைனிங் டேபிளில் வைக்கப்பட்டிருக்கும்.
சிறுவனாக ஆர்வத்துடன் ஒரு பாதிரியாரிடம் அவர்களின் உணவுப் பழக்கம் பற்றி விசாரித்திருக்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை மட்டன், திங்கள்கிழமை சிக்கன், செவ்வாய்க்கிழமை போர்க், புதன்கிழமை பீஃப், வியாழக்கிழமை மீண்டும் மட்டன், சனிக்கிழமை மீண்டும் சிக்கன்.
வெள்ளிக்கிழமை மெனு?

பாதிரியார் சற்றே சோகம் ததும்ப சொன்னார்.”வெள்ளிக்கிழமை ஆண்டவர் சேசு இறந்த நாள். ஆனதால் மாமிசம் சாப்பிடவே மாட்டோம். துக்கம் அனுஷ்டிப்போம். அன்று மீனும் முட்டையும் மட்டும் தான் சாப்பாட்டோடு சேர்த்துக்கொள்வோம்.”

Two great European narcotics, Alcohol and Christianity.
- Nietzshe

……………………………………………………………………

மத்தாயுட பிரார்த்தனா!

ஞான ரதம் பத்திரிகையில் வந்த கவிதைஒன்று .
" சைத்தான்" எழுதியது !

ஜி நாகராஜன் எழுதிய நாவல் "நாளை மற்றுமொரு நாளே " இந்தபத்திரிக்கையில் தான் தொடராக வந்தது . சுந்தர ராமசாமியின் பிரபலமான 'சில கெட்ட உறுப்புகள்" ( முலையை மட்டும் வெட்டிடுரெனே.. எந்த முலை?) ஞானரதம் பத்திரிகையில் தான் பிரசுரமானது .

மத்தாயுட பிரார்த்தனா!

எண்ட கர்த்தாவே !
மத்தாயு கள்ளும் குடிக்கும்
பெண்ணும் பிடிக்கும் .
கர்த்தர் ரட்சிக்கனும் .
ரட்சிச்சிலேங்கில் மத்தாயுக்கு மயிரானு ..

- "சைத்தான் "

ஞானரதம் ஜூலை ,1973

...................................................................



பிரார்த்தனை

அந்தோனி டிமெல்லோ ஒரு கிறித்துவ பாதிரி . நிறைய குட்டிகதைகள் எழுதியுள்ளார் . மதத்திற்கு விரோதமான கருத்துக்கள் அந்த கதைகளில் இருப்பதாக அவர் மீது கத்தோலிக்கம் கண்டனம் வைத்தது .அவர் எழுதிய குட்டி கதை ஒன்று .

' ஒரு பாதிரி ஜெபம் செய்ய ஆரம்பிக்கிறார் . அப்போது மழைக்காலம். அதன் காரணமாக அவருடைய சர்ச் ஒட்டியுள்ள வீட்டை சுற்றி தேங்கிய குட்டையில் தவளைகள் சப்தம் .

பாதிரியார் பிரார்த்தனைக்கு இந்த தவளை சத்தம் குந்தகம் விளைவிக்கின்றன என எண்ணி அயர்ச்சியாடைகிறார் .

“Quiet . I’m at prayer” என்று ஒரு கூப்பாடு போடுகிறார் .

தவளைகள் அனைத்தும் நிசப்தமாகி விடுகின்றன . பயங்கர அமைதி !

பாதிரி சந்தோசமாக உரக்க கூவி பிரார்த்திக்கிறார் .

“My Father! Who art in heaven!”

வானத்திலிருந்து ஒரு அசரிரி

“OK! I am hearing you.
But why did you stop the prayer of the Frogs?!”

..........................................

Ailing Popes are not unusual

82 வயது போப் பெனடிக்ட் இத்தாலியில் விடுமுறையை கொண்டாட சில நாட்களுக்கு முன் சென்றிருந்த போது கீழே விழுந்து கை மணிக்கட்டில் எலும்பில் அடி பட்டு கீறல் ஏற்பட்டு சுகவீனம் ஏற்பட்டதாக ஒரு செய்தி .

A Pope is not ill until He is dead என்பது வாட்டிகன் விதிமுறை . மருத்துவ விதிமுறை Ailing Popes are not unusual. சுகவீனம் ஏற்பட்டு விடும்போது போப் கூட நோயாளி தான் .
முன்னாளில் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில் ஒருபோப் ' பயஸ் ' என்று பெயர் . 'சேசு சபை பாதிரிகள் சிகரட் பிடிக்கக்கூடாது' . என்றார். இது பரவாயில்லை. தப்புன்னு சொல்லமுடியுமா ? பாதிரிகள் என்று இல்லை யாருக்குமே சிகரட் குடிப்பது உடம்புக்கு தொந்தரவு தான் .சுகக்கேடு தான் .ஆனால் இந்த போப் ' விதவைகள் மறுமணம் செய்வது கூடாது ' என்று வேறு சொன்னார் . கடைசி காலத்தில் அவருக்கும் சுகவீனம் ஏற்பட்டது . 'மெண்டல் பிரச்சினை '.மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலை . Ailing Popes are not unusual.
ஆல்பெர் காம்யு தன் 'வீழ்ச்சி' நாவலில் சொன்னார் '' போப் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஜெபிப்பதை நிறுத்தி விட்டு மோசமான தீயவர்கள் மத்தியில் வந்து வாழவேண்டும்.''
சேரியில் வந்து வசிக்கும் போப் நமக்கு வேண்டும். வாட்டிகன் அரண்மனையை விட்டு போப் சேரிக்கு வந்து வாழ வேண்டும்.

'But who today is the enemy of the people of god ? Louis the emperor or John XXII the Pope ?'
-Umberto Eco in 'The name of the Rose'

...............................

பாதிரி ஒருவர் விடுமுறை கொண்டாட்டத்திற்காக காட்டுப்பகுதி ஒன்றிற்கு சென்றவர் விருந்தை முடித்துக்கொண்டு விச்ராந்தியாக 'சின்ன வாக் ' போக ஆரம்பித்தவர் ஏதோ சிந்தனையில் மூழ்கியவாறு காட்டின் உள்பகுதிக்கு சென்று விட்டார் . திடீரென்று எதிரே ஒரு சிங்கம் . நடுங்கிபோய் முழந்தாளிட்டு ' தேவனே ! காப்பாற்று !' என கண்மூடி பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டார் . 
சிறிது நேரம் கழித்து கண்ணை திறந்து பார்த்தால் இவர் முன் சிங்கமும் கண் மூடி ,முழந்தாளிட்டு கை கூப்பி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது . பாதிரியார் பரவசமாகி வான் நோக்கி '' தேவனே ! உம்முடைய வல்லமை அளப்பரியது !! சிங்கத்தைக்கூட மனம் திரும்ப செய்து விட்டீரே !!! என்னே உம்முடைய பெருமை !!!" என கூவினார் . சிங்கம் கண் திறந்து " சாப்பிடும் முன் தேவனுக்கு நன்றி ஜெபம் சொல்கிறேன் . இன்றைய உணவுக்காக கடவுளுக்கு நன்றி.தேயா கிராசியஸ் !" என்று அதே பரவசத்துடன் சொல்லி " ஜெபம் செய்யும்போது கூப்பாடு போடக்கூடாது " என்று கண்டிப்புடன் பாதிரியாரை அதட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தது.

.....................................

Photo
R.P.Rajanayahem

http://rprajanayahem.blogspot.in/2008/10/trichi-st.html


http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_9.html

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_21.html

Sep 27, 2016

காருக்குறிச்சி அருணாச்சலம்


’சிங்காரவேலனே தேவா’ ஆபேரி ராக பாடலுக்கு நாதசுரம் வாசித்த காருக்குறிச்சி அருணாச்சலம்!



தன் பெயர் ‘கோவில் பட்டி அருணாச்சலம்’  என்று குறிப்பிடப்பட்டால் விரும்ப மாட்டார். ‘காருக்குறிச்சி அருணாச்சலம்’ என்று குறிக்கப்படவேண்டும் என்பார். 


ஒரு புகைப்படம் அபூர்வமானது. அதில் மூன்று மனைவிகளோடு அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது!
தன்னுடைய குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போலவே தானும் மூன்று பொண்டாட்டிக்காரன் என்று காருக்குறிச்சி சொல்லிக்கொள்வார்.


1921ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதி பிறந்த காருக்குறிச்சி 1964ம் வருடம் ஏப்ரல் 7ம் தேதி மறைந்திருக்கிறார்.
 மாரடைப்பால் இறந்தார்.

கோவில்பட்டியில் காருக்குறிச்சிக்கு உள்ள சிலை ஜெமினி கணேசன் உபயம். மகா கஞ்சன் என்று ஜெமினி கணேசன் பற்றி சொல்வார்கள். ஆனால் அவர் தேவையான, நியாயமான காரியங்களுக்கு நல்ல நன்கொடை கொடுத்ததுண்டு.

கி.ராஜநாராயணனிடம் பேசும் போது காருக்குறிச்சி பற்றி எப்போதும் ஏதாவது சொல்வார்.
காருக்குறிச்சியின் முதல் மனைவியின் அப்பா முத்தையா புலவர். கி.ராவிற்கு அருணாச்சலத்தின் ஷட்டகர் பொன்னுசாமி மிகவும் பரிச்சயமானவர்.
முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி உடனே மறைந்திருக்கிறார். ஆனதால் முதல் மனைவியின் உறவினரான மற்றொரு    பெண்ணை மணந்தார் காருக்குறிச்சி. அவருக்கு குழந்தைகள் பிறந்தார்கள்.
 பின்னர் நடிகை ஈ.வி.சரோஜாவின் ஒன்று விட்ட சகோதரியை கல்யாணம் செய்து கொண்டார். தஞ்சாவூர்க்காரர்.

“கச்சேரிகளுக்கு செல்லும்போது பல மாதிரி கெட்டுப் போக வாய்ப்பு அதிகம். அதனால் இந்த  மனைவியைக் கூட அழைத்துப் போய் சோதனைகளைத் தவிர்க்க முடியும்.”
இவருக்கும் குழந்தைகள் உண்டு.

எல்லா குழந்தைகளையும் மூத்த முதல் மனைவி அன்போடு வளர்த்து ஆளாக்கினார்.
‘கொஞ்சும் சலங்கை‘ யில் நாகஸ்வர வித்வானாக ஜெமினி கணேசன் நடிப்பைப் பார்த்து பிரமித்துப்போய் காருகுறிச்சி “அது எப்படிய்யா? நாகஸ்வரம் இந்த இடத்தில் மேலே தூக்கணும், இங்க இறக்கணும், சீவாளியை இப்படி இப்படிச் சுத்தம் பண்ணணும் இவ்வளவு நேர்த்தியா உன்னால முடிஞ்சது. எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடேன்” என்று மனம் விட்டுப் பாராட்டியதைப் பற்றிப் புளகாங்கிதத்துடன் என்னிடம் சொன்னபோதே, காருகுறிச்சி பற்றிய நினைவுகளில் மூழ்கி, நெகிழ்ந்து உடைந்த குரலில், ‘ நல்ல மனுஷனெல்லாம் அற்பாயுசிலே போய்ச் சேந்துட்டான்’ என்று ஏங்கினார் ஜெமினி.


காருக்குறிச்சியின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் இந்திரா பழனியில் வாழ்ந்து மறைந்திருக்கிறார். தன் தகப்பனுக்காக அங்கு ஒரு மணி மண்டபம் கட்டினார் இந்த இந்திரா.
காருக்குறிச்சிக்கு  சரவண பவன் என்று ஒரு மகன். அந்தப் பையன் ஒரு எஞ்ஜினியர்.
டாக்டர் ச. வீரப்பிள்ளை என்பவர் கிராவுக்கும் எனக்கும் நல்ல நண்பர். சரவண பவனை காரைக்காலில் சந்தித்ததாக கிராவிடம் சொன்னார் வீரப்பிள்ளை.

கி.ரா பழைய நினைவில் மூழ்கி என்னிடம் சொன்ன விஷயம் ஒன்று.
காருக்குறிச்சியின் மகனை நாகசுர வித்வானாக்க வேண்டும் என்று கி.ரா வற்புறுத்தியிருக்கிறார். காருக்குறிச்சி அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மறுத்துத்தலையை ஆட்டினார். ’நாகசுரம் வாசிப்பவனுக்கு சரியான மரியாதையை இந்த சமூகமும் சங்கீத உலகமும் தருவதேயில்லை’ என காரணம் சொன்னாராம்.

காரு குறிச்சியின் 'சகானா' வாசிப்பு கேட்கும்போது ஒரு தடவை 
எனக்கு 'இப்போதே மரணம் வாய்த்து விடாதா' என ஒரு நிறைவு ஏற்பட்டது.