Share

Aug 12, 2009

சா.கந்தசாமியின் "அவன் ஆனது" ராமு

சா கந்தசாமியின் "அவன் ஆனது '' நாவலில் மறக்கமுடியாத "ராமு" கதாபாத்திரம் நாவல் படித்து இருபத்தைந்து வருடமான பின்னும் நினைவில் நிற்கிறது . ராமு மாதிரி மனிதர்களே எங்கும் காணக்கிடைக்க மாட்டார்களா ? என்று மனதில் ஏக்கம் . இன்று சாத்தியமேஇல்லை என்பதன் யதார்த்தம் மனதை அறைகிறது . சாகாவரம் பெற்ற ரொம்ப இயல்பான நேர்த்தியான கதாபாத்திரம் 'அவன் ஆனது ' ராமலிங்கம் .

ராமுவின் சீரான வாழ்க்கை சூசகமாக தெரிவிக்கும் செய்தி டால்ஸ்டாய் சம்பந்தப்பட்டது . டால்ஸ்டாய் தத்துவார்த்த தேடல் மிகவும் பிரபலமானது . அது -
“How should one live a moral life in an ethically imperfect world ?” என்ற கேள்வி . சா .கந்தசாமியின் 'அவன் ஆனது ' ராமு தான் இதற்கான பதில் .அமெரிக்கையான ஆர்ப்பாட்டமில்லாத பதில் . சொல்லப்போனால் 'ராமு 'நாவலின் பிரதான பாத்திரம் அல்ல .கதை சொல்லி சிவசண்முகம் பார்வையிலே தான் ராமு பார்க்க கிடைக்கிறார்.விஷேசமாக அவருடைய Reticence ! Poising,Balancing Reconciliation ! Unselfish Generosity ! இன்னொன்று அவர் நல்ல வாசகர். பற்றற்ற 'தண்மை' நிறைந்த ராமு பாத்திரத்தை விரிவாக பேசி எழுதவோ செய்தால் கூட அபத்தமாகி விடும் . படிக்கிற தேர்ந்த வாசகனுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய விஸ்வரூபம் . அது தான் சா கந்தசாமி என்ற கலைஞனின் செய்நேர்த்தி !
“Is it over?
Even the full stop
Does not stop anything”
-நகுலனின் ஆங்கில கவிதை . இந்த கவிதையின் மௌன குறியீடு 'அவன் ஆனது ' நாவல் .

தி.ஜானகிராமன் " தெய்வத்துளி " என்ற வார்த்தையை பயன்படுத்துவார் . அது 'ராமு ' பாத்திரத்துக்கு பொருந்தும் என்றும் சொல்லவேண்டும் .

சிவசண்முகம், சிவாவின் அப்பா ,பத்மநாபன் , திருவேங்கடம் , அந்தோனி ,ராகவலு போன்றவர்களுக்கிடையே ராமு தெய்வத்துளி .

கமலா ,ரோஸ்மேரி , ராஜலக்ஷ்மி ,திருவேங்கடத்தின் மனைவி,சிவாவின் அம்மா , சித்தி போன்ற பெண்கள் பெண்ணியம் அறியாதவர்கள் !ஆனாலும் ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு விதமாக ஆணாதிக்கம் மீதான ஆன்ம நிராகரிப்பு (Soulful rejection i.e.,Emotional rejection -Abandonment -Avoidance) செய்கிறார்கள் . வெகு நுட்பமாக கமலா உள்பட .

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.