Share

Jan 21, 2020

புத்தக கண்காட்சியில் ஒரு சில நிமிடங்கள்


ஞாயிற்றுக்கிழமை (19.01.2020)
புத்தக கண்காட்சியில்
ஒரு சில நிமிடங்கள்
பத்மஜா நாராயணன், லீனா மணிமேகலை,
ஷோபா சக்தி, கோணங்கியுடன்.
கோணங்கி ‘என் பேட்டி பாத்தியா?’
மீடியா வெளிச்சத்துல விழுந்துட்டான்.
அதில் சந்தோஷமும் அவனுக்கு இருக்கிறது.
” என் புது நாவல் வந்திருக்கு தெரியுமா?”
ஷோபா சக்தி என்னுடைய லேட்டஸ்ட் பதிவு பற்றியெல்லாம் சொல்லி                                   “ அண்ணன், பாத்தீங்களா..உங்களை எப்போதும்                                                     படித்துக்கொண்டே தான் இருக்கிறேன்.”
மூன்றாவது முறையாக சந்திக்கிறேன். விகடன் விருது விழா ஒன்றில், எலியட்ஸ் பீச் ஸ்பேசஸில் ஒரு தடவை ஏற்கனவே ஷோபா சக்தியை பார்த்ததுண்டு.
கவிஞர் மஹி ஆதிரனை ( டெபுடி சூப்ரிண்ட் ஆஃப் போலீஸ்) பத்மா நாராயணன் காட்டி “ மஹி தான் என்னை பத்து வருடங்களுக்கு முன் ராஜநாயஹத்தை படிக்க சொன்னவர்.”
பத்து வருடமாக நான் நன்கறிந்திருந்த மஹி ஆதிரனை நேரில் முதல் முறையாக பார்த்தேன். சிலிர்ப்பாய் இருந்தது.
இப்போது கமுதியில் இருக்கிறார்.
மஹி ஆதிரன் அவசரமாக கிளம்பி விட்டார்.
அவர் இந்த புகைப்படத்தில் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது.
லீனா மணிமேகலையை அன்று தான் பார்த்தேன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.