Share

Apr 26, 2018

பழசு ஒன்னு, புதுசு ஒன்னு


Sudhakar is Nothing
ஹிண்டு ரங்கராஜனின் படத்தில் நடிகர் சுதாகர் நடித்துக்கொண்டிருந்த போது, ஹிண்டு பத்திரிக்கையில் அந்த நேரத்தில் ரிலீசாகியிருந்த ஒரு சுதாகர் படத்தின் விமர்சனம் பிரசுரமாகியிருந்தது. அதில் Sudhakar is nothing என்றே எழுதப்பட்டிருந்தது.
சுதாகரின் பெரும்பாலான படங்கள் தரமில்லாமல் தான் இருந்தது. மார்க்கெட் முடிவுக்கு வரும்படியான சூழ்நிலை வெகு சீக்கிரமாக உருவாக இருந்தது. தயாரிப்பில் இருந்த ஹிண்டு ரங்கராஜனின் படமும் படுதோல்வியை தழுவ இருந்த படம் என்பது தான் வேடிக்கை.

’கௌரவம்’ படத்தை எடுத்த ஹிண்டு ரங்கராஜன். நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார். ஜெமினி கணேசன் ஹிண்டு முதலாளியின் நல்ல நண்பர். மற்றபடி எந்த நடிகரையும் அவர் மதிக்கக்கூடியவர் அல்ல. ஒரு மஹாராஜா தோரணையில் இருப்பவர்.
’ நான் இவர் படத்தில் கதாநாயகன். என்னைப்பற்றி அவருடைய பத்திரிக்கையில் இப்படி ‘Sudhakar is nothing’ என்று எழுதுவது நியாயமா?’
வெளிப்படையாக முனகினார் சுதாகர்.
ஹிண்டு ரங்கராஜன் காதுக்கு இது போன போது அவருடைய ரீயாக்சன் சுதாகருக்கு இன்னும் அவமானமாய் ஆகி விட்டது.
ஹிண்டு பத்திரிக்கையை சுதாகரால் influence செய்ய முடியுமா?
புகைப்படங்கள்
ஹிண்டு ரங்கராஜனின் அந்த படத்தில் ராஜநாயஹம்
..........................................................

ஷோபா சக்தி
விகடன் ந.முத்துசாமிக்கு பெருந்தமிழர் விருது கொடுத்து கௌரவித்த விழாவுக்கு சில மாதங்களுக்கு முன் போயிருந்த போது அ.மார்க்ஸ் பக்கத்தில் அமர்ந்திருந்த ஷோபா சக்தியை சந்தித்தேன்.
ஃபேஸ்புக்கில் என்னை படிப்பதாக சொன்னார்.
ஃபேஸ்புக்கில் படிக்கும் பலரும் எனக்கு லைக் கொடுப்பதில்லை.
2002ல் நான் எழுதிய “ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை” கட்டுரையை படித்து விட்டு எனக்கு ஃப்ரான்சில் இருந்து ஒரு கடிதம் ஷோபா சக்தி எழுதியிருந்தார்.
திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில் ’கொரில்லா’ நாவலைப் பற்றி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன். அதற்காக புத்தகமெல்லாம் பேராசிரியர்களுக்கு நானே விலை கொடுத்து வாங்கி படிக்க கொடுத்தேன்.

விகடன் விழாவில் ஷோபா சக்தி என்னிடம் வந்து கேட்டார் “ சிகரெட் பிடிப்பீங்களா?”
’இல்ல. நான் சிகரெட் பிடிக்கிறதில்ல சார்’
சிகரெட் பிடிக்க கம்பெனி கிடைக்குமா என்பதற்காக என்னிடம் கேட்டிருக்கிறார்.
”உங்க அப்பா கஸ்டம்ஸ் ஆஃபிசர்?”
நான் ”ஆமா சார்”
அவர் சிகரெட் பிடிக்க கிளம்பிப் போனார்.
அப்புறம் எனக்கு தோன்றியது. ஷோபா சக்தியுடன் போயிருக்கலாம். அவரிடம் பேசிக்கொண்டிருக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டேனே!
ஷோபா சக்தியின் ’விகடன் தடம்’ பேட்டி அந்த மாதத்தில் தான்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.