Share

Apr 27, 2017

முத்துப்பேட்டை சோமு


நாகப்பட்டினத்தில் என் தந்தை, பெரியப்பா இருவருமே கஸ்டம்ஸ் அதிகாரிகளாக வெவ்வேறு காலகட்டங்களில் இருந்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டராய் இருந்த போதும் சூப்ரிண்ட் ஆக இருந்த போதும் நாகை கஸ்டம்ஸில் இருந்தவர்கள்.

இன்ஸ்பெக்டராக இவர்கள் இருந்த காலத்தில் எஸ்.எஸ்.ரஜூலா கப்பல், சூப்ரண்ட் ஆக இருக்கும்போது எம்.வி.சிதம்பரம் கப்பல்.

கப்பல் நாகை துறைமுகம் வரும்போது பேக்கேஜ்காக திருச்சியில் இருந்து கூட சுங்கத்துறை அதிகாரிகள் வருவார்கள்.

முத்துப்பேட்டை சோமு என்பவர் எங்கள் வீட்டுக்கு வருவார். என் பெரியப்பா நாகையில் இருக்கும்போது அவர் வீட்டுக்கும் வருவார்.
வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி.

என் அப்பா, பெரியப்பா இருவருக்குமே நல்ல நட்பில் இருந்தார்.
அவருடைய மகள் ஹேமாமாலினி அந்தக்காலங்களில் பாரதிராஜா படங்களில் கதா நாயகிக்கு டப்பிங் பேசிக்கொண்டிருக்கிற விஷயத்தை எங்களிடம் சொல்வார். என் பெரியப்பா “ எங்க தொரய சினிமாவில சேர்த்து விடுங்க” என்பார். தொரை என்பது என்னைத்தான்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் அப்பா, பெரியப்பா இருவரும் கஸ்டம்ஸ் யூனிஃபார்மில் இருக்கும்போது ஒரு நாள் முத்துப்பேட்டை சோமு “ அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் தனித் தனியா பார்த்தால் பயப்பட மாட்டேன். ஆனா ரெண்டு பேரும் சேர்ந்திருக்கும் போது பாக்க பயமா இருக்கு. அதனால வால சுருட்டிக்கிட்டு இருக்கேன்.”
வேடிக்கையாக இப்படி என் அப்பா, பெரியப்பா இருவரிடமும் பேசுவார்.

அவர் மகன் இப்போது பெயர் சொல்லும் நடிகர்.
எம்.எஸ்.பாஸ்கர்.

இன்று அவருடைய பேட்டி ஆனந்த விகடனில் பார்த்தேன்.

அவருக்கு ஒரு போன் செய்து இந்த பழைய விஷயங்களை சொன்னேன். எம்.எஸ்.பாஸ்கர் கேட்டுக்கொண்டார். அவரோடு அறிமுகமோ பரிச்சயமோ எதுவும் கிடையாது.
……………………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2017/02/blog-post_7.html

http://rprajanayahem.blogspot.in/2012/06/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/2016/12/blog-post_2.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_6071.html

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.