Share

Jan 15, 2017

தி தினத்தந்தி - தி இந்து


 ’தினத்தந்தி’ P.வாசு

P.வாசு இப்ப கூட ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கார் போல இருக்கு. சிவலிங்கா. இது ஏதோ அந்தப் படத்துக்கான inner promoன்னு நினச்சிடாதீங்க.
 வாசுவை stylish director ன்னு
ஒரு நடிகர் புகழ்ந்ததை டி.வியில் இன்று பார்த்தேன்.


இவர் அப்பா பீதாம்பரம். வாசுவுக்கு தமிழில் இனிசியல் போட்டால் அவ்வளவு நல்லாயிருக்காது. வாசு தன் பெயரை P.வாசு என்று டைட்டிலில் போஸ்டரில் போடுவது தப்பே இல்லை. அப்பா பெயர் பீட்டர், பீர் முகமது, பீதாம்பரம் என்றிருந்தால் ஆங்கிலத்தில் இனிசியல் இருப்பது தான் நல்லது. தனித்தமிழ் வெறியர்களுக்கு இதெல்லாம் புரியாது. அப்பா பெயர் பீ என்று பிடிவாதமாக பீ.வாசு என்று எழுத வேண்டுமா? தமிழில் பி.வாசு என்று எழுதினால் அப்பா பெயர் பிரபாகரா, பிச்சைமுத்துவா,பிள்ளையாரா ஆங்கில இனிசியல் P என்பதை எதற்காக ’பி’ என்று ஏன் எழுதுகிறான்கள்? இங்கிலீஷ்ல இனிசியல் போடுகிற சுதந்திரம் பிறப்புரிமைடா.
ஒரு தனித்தமிழ் வெறியன் ‘ இங்கிலீஷ்ல இனிசியல் போடுறவனெல்லாம் இங்கிலீஷ்காரனுக்கு பொறந்தவனுங்க’ என்று அபத்தமாக மைக்ல கூப்பாடு போட்டான்.
’தி இந்து’ என்று தமிழில் பத்திரிக்கை பெயர். பத்திரிக்கை பெயரிலேயே தமிழ் கிடையாது. என் பெயரை என் விருப்பப் படி R.P.ராஜநாயஹம் என போட மறுத்து இனிசியலை தமிழில் தான் போடமுடியும் என்று ’தி இந்து’ தமிழ் பிடிவாதம் பிடித்தது. நான் எழுதிய கட்டுரைகளில் என் பெயர் ஆர்.பி.ராஜநாயஹம் என்று தான் பிரசுரிக்கப்பட்டது.

’குமுதம்’ வாரப்பத்திரிக்கை என் பெயரை என் விருப்பப்படி என் கட்டுரைகளில் ’R.P.ராஜநாயஹம்’ என அச்சிட்டிருந்தது. அருண் சுவாமிநாதனுக்கு நன்றி.


கோவை ஞானி பலவருடங்களுக்கு முன் இந்திரா பார்த்தசாரதியின் ‘ கிருஷ்ணா, கிருஷ்ணா’ நாவலுக்கு ஒரு விமர்சனம் கேட்டார். நான் ‘லீலார்த்தம்’ தலைப்பிட்டு அனுப்பி வைத்தேன்.
கோவை ஞானி ’ராஜநாயஹம் என உங்கள் பெயரை பிரசுரிக்க மாட்டேன். ராஜநாயகம் தான். ’ஹ’ போட மாட்டேன்..’

நான் ‘ ராஜநாயஹம் என்று என்னை சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், பிரமிள் ஆகியோர் கூட குறிப்பிட்டிருக்கிறார்களே’

கோவை ஞானி ‘ அவங்க எல்லாம் மனுசங்க தானா? எனக்கு சந்தேகமாயிருக்கு. நான் ராஜநாயகம்னு தான் அச்சிடுவேன்.’

நான் ‘ நீங்க என் லீலார்த்தத்தை பிரசுரிக்க வேண்டாம். கிழிச்சிப்போட்டுடுங்க’
பிறகு எம்.ஜி.சுரேஷின் பன்முகம் பத்திரிக்கையில் ’லீலார்த்தம்’ பிரசுரமானது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் பி.வாசுவுக்கு சினிமாவில ரொம்ப நல்ல செல்வாக்கு. பாக்யராஜ் சொந்தப்படம் ‘அம்மா வந்தாச்சு’ படத்திற்கு இயக்குனர் வாசு தான்.
டைரக்டர் P.வாசு சித்தப்பா கேமராமேன் M.C.சேகர்.  'ராசுக்குட்டி' படத்தில் இவர் கேமராமேனாக இருந்த போது சேகர் சொன்ன விஷயம்.
“ வாசு அந்த காலத்தில தினத்தந்தி படிக்கிறதத்தான் நான் எப்போதும் பாத்திருக்கேன். தினத்தந்திய வாசிப்பான்.உருப்படியா புத்தகம் எதுவும் அவன் வாசிச்சதேயில்லை.”
வாசுவிடம் பெரிதாய் நல்ல வாசிப்பு எல்லாம் இருந்ததில்லை என்பதை சுட்டிக்காட்டும்போது இதனை குறிப்பிட்டுச் சொன்னார்.
.....................................

வர்ஜனம் = புறக்கணிப்பு

”அன்று (28-08-2016) மியூசியம் அரங்கில் கூத்துப்பட்டறையின் வண்டிச்சோடை நாடகமேடையேற்றத்தின் இறுதியில் கூத்துப்பட்டறையின் நடிகர் பிரசன்னா பங்கேற்பாளர்கள் பற்றிய அறிமுகம் செய்த பிறகு அன்று நாடகம் பார்க்க வந்திருந்த நாடகாசிரியர் கூத்துப்பட்டறை நிறுவன இயக்குநர்
ந.முத்துசாமி, நாடகத்தை இயக்கிய R.P.ராஜநாயஹம் முதலானவர்களுக்கு ஒரு மரியாதை நிமித்தமாக ஒரு மலர்ச்செண்டாவது கொடுத்து கௌரவித்திருக்கலாம். அந்த சுரணையெல்லாம் தி இந்து நாடகவிழா அமைப்பாளர்களுக்குக்
கிடையாது என்பதைச் சொல்ல வேண்டும்.”
- பேராசிரியர் டாக்டர் செ.ரவீந்திரன்
” நாடகவரங்கில் ஓர் ஒளியமைப்பாளனின் நினைவுக்குறிப்புகள்” மணல் வீடு 27வது இதழ்.
................................

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html

http://rprajanayahem.blogspot.in/…/the-hindu-subha-intervie…

http://rprajanayahem.blogspot.in/…/an-email-interview-by-hi…


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_03.html

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_23.html

http://rprajanayahem.blogspot.in/2008/07/blog-post_06.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.