Share

Jul 12, 2022

மாயவநாதனும் மலேஷியா வாசுதேவனும்

'டெல்லி டூ மெட்ராஸ்'னு
படம்.
தமிழ் திரையில் ஸ்ரீவித்யா 'கதாநாயகி முழு அந்தஸ்தில்' நடித்த முதல் படம் என்று சொல்லலாம்.
ஜெய்சங்கர் கதாநாயகன்.

பாலச்சந்தரின் நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு படங்களுக்கு அடுத்த வருடம் வந்த 'டெல்லி டூ மெட்ராஸ்' இயக்குநர் I.N.மூர்த்தி. இசை V. குமார்.

படத்தின் பாடல்கள் எழுதியவர் கவிஞர் மாயவநாதன்.
இந்த படத்தின் டைட்டிலில் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

படத்தில் ஒரு உதவி இயக்குநர்
 எம். ஆர். கணேசன்.
பின்னர் இவர் 
நடிகர் அம்ஜத்குமார்.

இந்த அம்ஜத் குமார் சிபாரிசில் தான் மலேஷியா வாசுதேவன் 
முதல் முதலாக இந்த படத்தில் பின்னணி பாடகராக முதல் வாய்ப்பு பெற்றார்.
" பாலு விக்கிற பத்துமா, 
ஒன் பாலு ரொம்ப சுத்தமா?"


டைட்டிலில் 'மலேசியா வாசுதேவ்'.

'டெல்லி டூ மெட்ராஸ்' சாதாரண படம்.
கவனம் பெற வேண்டிய ஒன்றல்ல.
ஆனால் இதிலும் கவனிக்க அர்த்தப்பூர்வமாக, விஷேசமாக எவ்வளவு விஷயங்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=3354745338072242&id=100006104256328

http://rprajanayahem.blogspot.com/2012/08/blog-post_2081.html?m=0

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.