Share

Nov 26, 2018

அது மனிதருக்கு தோழனடி


பேச்சு வழக்கில் ’நாய் மாதிரி ஒழைச்சேன்’ என்பதற்கு கவுண்டமணி காண்டு ஆகி சொன்னது “ நாய் எங்கடா ஒழச்சது. எப்பயும் கொலச்சது, கடிச்சது, இன்னும் எவ்வளவு காலம்டா நாய் மாதிரி ஒழைச்சேன்னு சொல்வீங்க”
ஒரு நாடகத்தில் நாயை பார்த்து நாகேஷ் பதற்றமாவார். பிரமீளா “ நாய் பாவம் சார், வாயில்லா ஜீவன்” எனும் போது நாகேஷ் பயந்து நடுங்கி சொல்வது “ வாயில்லா ஜீவன். ஆனா கடிக்கும், குதறும்.”


1. சென்னை காவேரி ஹாஸ்பிடலில்
பணியாற்றும் என் நண்பர் டாக்டர் ராஜாவின் நாய் கவிதை கீழே:

’எவரேனும் விரட்டியிருக்கலாம்
படியேறி நடக்கையில்
பாய்ந்து வருகிறது அந்த நாய்
வெல மீன் வருவலை
மதியம் உண்டிருந்தாலும்
மனதளவில் நான் விஜிடேரியன்
என்பதை நாயின் மோப்ப சக்தி அறியுமா?
நாலு கால் பாய்ச்சலில் குதிரை ஒன்று கிளம்ப
சுவரொட்டி நடுங்குகிறது
ஓர் பல்லி
நெருங்கி வருகையில்
ஒதுங்கிச் சென்று
தெறித்தோடியதைக்கண்டு
சிரிப்பு வந்து விட்டது எனக்கு
நாயும் சிரித்திருக்குமா என்பதை நானறியேன் பராபரமே’


2. ஆனந்த் கவிதை
நாய்
நாயைப் பார்த்தேன்
பயம் வந்தது.

நான்கு கால்கள்
வளைந்த ஒரு வால்
நான்கு கோரைப்பற்கள்
எச்சில் வழிய
துடித்துத் தொங்கும்
நீண்ட நாக்கு
அனைத்தும் இருந்தது

பயத்துக்கு.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.