Share

Dec 16, 2009

பெர்லுஸ்கோனி

பெர்லுஸ்கோனி இத்தாலியில் மிகப் பெரிய செல்வந்தர். செல்வசெழிப்பு போதாதென்று அவருக்கு பிரமாதமான பெரும் பதவி வேறு. இத்தாலி நாட்டின் பிரதமர் பெர்லுஸ்கோனி. 'என்ன பாக்கியம். இதுவல்லவோ கஜலக்ஷ்மி அருள்! 'என்று வியப்பீர்கள். பணம் இருப்பதோடு அதிகார சக்தியும், மக்களிடம் நல்ல மரியாதையும் இணைவது தான் அஷ்டலக்ஷ்மிகளில் கஜலக்ஷ்மியின் விஷேசத்துவம்.

ஆனால் இவர் கதை " கடுமுடிக்கி பயில்வான் பீ முடுக்கி செத்த மாதிரி " ரொம்ப மோசமாகி விட்டது.

இவர் செய்த காரியங்கள் அப்படி. மோசடி, பணம் கையாடல், பலபெண்களுடன் சரீரசம்பந்தம்.


Fraud,
Embezzlement,
Extra-Marital Sexual Dalliance!

பெர்லுஸ்கோனி மனைவி வெரோனிக்கா லாரியோ விவாகரத்து கேட்டிருக்கிறார்.

இவருடைய கத்தோலிக்க மதத்தின் கடும் ஆக்கினை. கண்டனம் .

இத்தாலியில் இந்த பிரதமருக்கு எதிரான பேரணிகள் நடக்கின்றன.

சமீபத்தில் பிரதமர் பெர்லுஸ்கோனி முகத்தில் ஒருவர் கடுமையாக தாக்கி இரத்தசகதியுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பிரதமருக்கு உள்ள பாதுகாப்பு வளையத்தையும் மீறி இந்த தாக்குதல்.மூக்கு உடைந்து, இரண்டு பற்கள் உடைந்து , உதடு கிழிந்து ...ரொம்ப குழம்பிப்போய் விட்டார் .
“There is a climate of hatred, I expected this would happen” என்றும் சொல்கிறார் . அடுத்த அவருடைய வார்த்தைகள் இந்த முதல் வாக்கியத்தை
Cancelசெய்து விடுகிறது .“ I want the good of everyone and I do not understand why they hate me so much”


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.