Share

Jan 7, 2024

கூத்துப்பட்டறையில் R.P. ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை

கூத்துப்பட்டறையில் நடந்த
R.P. ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை

ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை நிகழ்ந்தேறிக்கொண்டிருந்தது
 சாமி கொடுத்த வரம். 
நடேஷ் சாமி கொடுத்த வரம்.

2018 ஏப்ரல் துவங்கி மேடையில் நடந்து கொண்டிருந்த ராஜநாயஹம் கூத்து 

 பெரும் தடைகளையும் இந்த வரம் மீறியதால் 2018 டிசம்பர் 15லும் 30ம் தேதியிலும் கூத்துப்பட்டறையில் ராஜநாயஹம் பெர்ஃபாமன்ஸ் நடந்தது. 

டிசம்பர் 23ம் தேதியும்  நடந்தது.

15ம் தேதி நிகழ்ச்சி நடந்த பின் இளைஞன் ஒருவன் ராஜநாயஹம் காலில் விழுந்து பரவசப்பட்டான்.
 
30ம் தேதி உற்சாக அப்ளாஸிற்கிடையே பூவண்ணன் கமெண்ட். “சினிமாவில் கூட இப்படி நான் சிரிச்சதில்லை சார்.”

ஒரு இருபது வயது பெண் ‘ என்ன சொல்றதுன்னே தெரியல சார். கூத்துப்பட்டறையில் இப்படியெல்லாம் நடக்குமா? ரொம்ப பிரமாதம் சார்”
என்று பிரமிப்பு நீங்காத நிலையில் ரோட்டில் ராஜநாயஹத்தைப்பார்த்து சொன்னாள்.

2019 ஜனவரி ஆறாம்தேதியில் கொத்தனாரின் கொத்து வேலை நடந்ததால் தியேட்டரும், வாசல் முன் பகுதியும் கயிறு கட்டப்பட்ட நிலை. 

தியேட்டரில்  மிஞ்சிய சிறு இடத்தில் கழைக்கூத்தாடி போல ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை நடந்தது. 

தெரு கோணல், மேடை கோணல் என்பதான அதிருப்தியெல்லாம் கிடையாதென்பதால் சவாலாகத்தான்  நிகழ்ச்சியை நிகழ்த்திக்காண்பித்தேன்.

ந.முத்துசாமி சார் கூட
அந்தக்கால கூத்துப்பட்டறை நிகழ்வுகளை மிகுந்த சிரமத்துடன் தான்
 ஈடேற்ற முடிந்திருக்கிறது.

 க்ரீம்ஸ் ரோடு லலித்கலா அகாதெமியில் அப்போது செக்ரட்டரி ராஜாராம் கூத்துப்பட்டறைக்கு இடம் கொடுத்திருக்கிறார். 

ஆனால் அங்கேயும் பூசாரியாக ஒருவர். சிற்பியும் ஓவியருமான சி.தட்சிணாமூர்த்தி முகம் சுளித்திருக்கிறார். 

அவருக்கு கூத்துப்பட்டறை ந.முத்துசாமிக்கான இந்த சலுகை அசூயை ஏற்படுத்தியிருக்கிறது. ”இவங்களுக்கு ஏன் இங்கே இடம் கொடுக்கிறீங்க?” என்று சொல்லி தடுத்து நிறுத்தி விட்டாராம்.

 முத்துசாமி மனத்தை இந்த பூசாரித்தனம் ரொம்ப புண்படுத்தியிருக்கிறது. இந்த அவமானத்தை என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

நடேஷ் கோபப்பட்டு சொன்ன ஒன்று. போஸ் கிருஷ்ணமாச்சாரி Indian Art ஐ ஒழிச்சான். 
போஸ் கிருஷ்ணமாச்சாரியை அச்சுதன் கூடலூரும் திட்டுவார். 
டெல்லிக்கு போன கேரளா ஓவியர்களெல்லாரும் கோடீஸ்வரர்கள். ஆனால் தமிழ் ஓவியன் கார் துடைச்சான். அதாவது pauper.

......

Koothuppattarai Boss M. Natesh 

on Actor R. P. Rajanayahem 

"By 1990 I was 11 years old in theatre. 

Kind of knew all techniques to train

 an actor’s body-voice; 

but not the mind. 

I thought that a person with trained skills 

in all that I know can go on stage, 

pick up his/her life’s problems and deliver a solo show of good theatre.

 No text by-hearting, no rehearsals. IT NEVER HAPPENED.

 IN 2018  Rajanayahem comes on stage and does exactly that 28years later!!!!!!!!!!!!!... 

I acknowledged the same day after the show

 in front of the audience. 

An intelligent, evocative, transformative actor changing roles like a chameleon. 

R. P. Rajanayahem is a Transformative Actor "

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.