Share

Showing posts with label கமலா விருத்தாச்சலம். Show all posts
Showing posts with label கமலா விருத்தாச்சலம். Show all posts

Aug 24, 2008

குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதைகள்

க.நா.சு க்கு 1.12.1988 அன்று ஒரு கடிதம் எழுதினேன் .அமரர் தி.ஜானகி ராமனை பற்றி அலட்சியமாக , முன்றில் பத்திரிகையில் சேறு தெளித்து எழுதிவிட்டார். அதற்கு பதிலாக ஒரு கோபமான rejoinder அவருடைய சென்னை விலாசம் , டெல்லி விலாசம் ,முன்றில் மற்றும் அந்த நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலக்கிய பத்திரிகைகள் , புத்தக பதிப்பாளர்கள் ,எழுத்தாளர்களில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சிட்டி ,ஜெயந்தன் துவங்கி கோணங்கி வரை , மேலும் பேராசிரியர்கள் பலர், வாசகர்கள் ,என் நண்பர்கள் பலருக்கும் zerox நகல் நூறுக்கும் மேல் தபாலில் அனுப்பி வைத்தேன் .
16.12.1988 அன்று க.நா.சு இறந்துவிட்டார் .டெல்லி வானொலியில் காலை ஒலிபரபபில் தமிழ் செய்திகளில் கேட்டு அதிர்ந்து போனேன் .
க .நா. சு . நல்ல படைப்பாளி .அவருடைய பொய்த்தேவு ,ஒரு நாள் , அவருடைய முதல் நாவல் சர்மாவின் உயில் , அசுர கணம் ....சொக்க வைக்கும் படைப்புகள் . உண்மையில் "உரைநடை விறுவிறுப்பு" என்றால் முதலில் க . நா .சு அடுத்து தி. ஜா .. தொடர்ந்து சுஜாதா . இப்படித்தான் . அசோக மித்திரன் , சுந்தர ராம சாமி பிரத்யேக நடை தனி விஷேசம் . கி .ரா . எப்போதும் தனிக்காட்டு ராஜா ! இ.பா . சுஜாதாவுக்கே வாத்தியார் !
கொஞ்சம் தடம் புரண்ட திறனாய்வாளர் க .நா. சு .
பொய் சொல்வார் .தன் தந்தையிடம் இருந்து இந்த பொய் சொல்லும் பழக்கம் தன்னை தொற்றிகொண்டதாக அவரே எழுதியிருக்கிறார் .
இப்ப உள்ள வில்லன்கள் அவரை ரொம்ப நல்லவர் ஆக்கிவிட்டான்கள் !
க .நா. சு . மரண செய்தி ஒலிபரபபான அந்த நிமிடமே மணிக்கொடி சிட்டி ஒரு கடிதம் எனக்கு உடனே ,உடனே எழுதி போஸ்ட் செய்துவிட்டார் . மறு நாள் எனக்கு கிடைத்தது .
சிட்டி எழுதியிருந்தார் .
"உங்கள் அற சினத்தின் விழைவு போல் க.நா.சு மறைந்து விட்டார் போலும் ."
கோணங்கி சொன்னான் " க. நா. சு உன் கடிதத்தை படித்திருப்பார் . மேல போயும் உன்னை நினைச்சிகிட்டு தான் இருப்பார் ."
_________________________________
1991 ல் "மேலும் " பத்திரிகையில் " நெஞ்சஞ்சுட உரைத்தல் நேர்மைஎன கொண்டாயோ ?"- இந்த தலைப்பில் நான் எழுதி ஒரு கட்டுரை வெளியானது . புதுமைப்பித்தன் சர்ச்சை பற்றியது.
உடன் பொதியவெற்பன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் .
" மரணபடுக்கையில் இருக்கும் கமலா விருத்தச்சலத்தை புண் படுத்தி விட்டீர்கள்"
கமலா விருத்தாசலம் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மனைவியார் .
இதற்கு ஒரு கார்டில் நான் எழுதிய பதில் .
“My intentions are genuine. I don’t see the need to retaliate .”