ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மானுக்கு பாராட்டு சொல்லிவிட்டு அதே வாயில் " ஒலிம்பிக் போட்டி போல எல்லா நாடுகளும் பங்கேற்று போட்டியிட்டு திறமைக்கு கிடைக்கும் பரிசு அல்ல ஆஸ்கார் பரிசு . அமெரிக்கர்கள் தங்கள் ரசனைக்கு படங்களை தேர்வு செய்து , படங்களுக்கு பரிசு தருகிறார்கள் . ஆஸ்கார் பரிசு உலகத்தரமானது அல்ல " என்று தன் வயிற்றெரிச்சலை கமல்ஹாசன் வெளிப்படுத்தி விட்டார் . சீ ..சீ .. இந்த பழம் ..
சினிமாக்காரர்கள் எல்லாம் 'ரஹ்மான் பரிசு வாங்கியிருக்கும்போது இப்படி இவர் பேச வேண்டுமா' என்று கமல் ஹாசன் மீது ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று நேற்று வந்துள்ள ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டுள்ளது .
ஆஸ்கார் பரிசு பற்றிய அளவுக்கு மீறிய மிகையான பிரமை தான் ரஹ்மானுக்கு அது கிடைத்த போது எல்லோரையும் ஆனந்த கண்ணீர் விடவைத்து புல்லரித்து செடியரித்து மரம் அரித்து புளகாங்கிதமடைய வைத்துள்ளது .அதனால் தான் இந்த 'ரஹ்மான் பாராட்டு கோரஸில் ' நான் சேர விரும்பவில்லை என நான் எழுதியிருந்தேன் .கமல் ஹாசன் சொல்வது நூற்றுக்கு நூறு மிகவும் உண்மை .( இதை கமல் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமும் நமக்கு இல்லை )ஆனால் ரஹ்மான் ஆஸ்கார் கிறக்கத்தில் இந்தியாவே இருக்கும் இந்த நேரத்தில் அவர் இதை சொன்னதில் ஆற்றாமை , ஏக்கம் , தன்னிரக்கம் வெளிப்படுவதும் நூற்றுக்கு நூறு உண்மை .
எப்பவும் நான் ஆஸ்கார் பற்றி சொல்ற விஷயம் தாங்க என்று கமல் விளக்கம் தர முடியாது . சொன்ன விஷயம் தானே .ரஹ்மானுக்கு ஆஸ்கார் பரிசுக்காக வாழ்த்து சொல்லும்போதே விவஸ்தையில்லாமல் இந்த ஆஸ்கார் உலகத்தரம் அல்ல என்று சொல்வது பூலாப்பு தானே ?'உலகநாயகனே ' என்று ரஹ்மானை பார்த்து இந்தியாவேபரவசமாக பாடுகிறதே !
நேற்றைய முந்தைய தினமே'கமல் ,அமீர்கான் காதில் புகை நிச்சயம் ' என்று நான் மனித உளவியல் பற்றிய குறிப்பாக நான் “My concern is always with the not so brilliant and the not so successful people.” பதிவில் குறிப்பிட்டதற்கு கணிசமான எதிர்ப்பு கிளம்பியிருந்தது . நேற்று மட்டும் ஏழு' வெத்து கடுமை 'பின்னூட்டங்களை நான் இது குறித்து நிராகரிக்க வேண்டியிருந்தது . என் நுட்பமான பார்வை உண்மை தான் என கமல் ஹாசன் நிரூபித்து என்னை கனப்படுத்தி விட்டார். நான் சொன்னது சரி தான் என கமல் ஹாசன் நிருபர்கள் முன் பேசியுள்ளதன் மூலம் நிரூபித்து விட்டார்.
சில வருடங்களுக்கு முன் 'குமுதம் ஸ்பெஷல் ' இதழ் ஒன்றில் பத்திரிக்கை குழு முன் வைக்கும் கேள்விகளுக்கு வாசகர்கள் பதில் அளித்து வந்தார்கள் . அதில் ஒரு கேள்வி :
கமல் , ரஜினி ஒப்பிடுக .
ஒரு வாசகர் பதில் பிரசுரமானது . அந்த பதில் :
கமல் கடுமையாக உழைக்கிறார் .
ரஜினிக்காக கடவுளே உழைக்கிறார் .
கமல் திறமை , அதிர்ஷ்டம் பற்றி இந்த புத்திசாலித்தனமான பதில் முன் வைக்கும் சோகம் பாருங்கள் . உண்மையில் இந்த பதில் கமலை மிகவும் கௌரவப்படுத்துகிறது . அதே நேரம் கமல் ஹாசனின் தகுதி,உழைப்பு உதாசீனப்படுத்தப்படும் சோகத்தையும் முன் வைக்கிறது.வசூல் , விருது போன்றவை அவ்வளவு சுலபமாக சிலருக்கு கிடைப்பதே இல்லை . இந்த உலகத்தில் தகுதி ,திறமைக்கு தகுந்த வெகுமதி பெறாமல் போனவர்கள் எல்லா துறையிலும் கணக்கிலடங்காதவர்கள் .
கமலுக்கு ஆஸ்கார் பரிசு கிடைக்காதது பற்றி நான் நேற்றைக்கு முந்தைய தின பதிவில் கிண்டல் ஏதும் செய்யவில்லை . ஏ ஆர் ரஹ்மானுக்கு இசைக்கு கிடைக்கும்போது கமலுக்கோ , அமீர் கானுக்கோ நடிப்புக்கு ஆஸ்கார் விருது என்ன தகுதியில்லாததா ?
கமல் ஹாசன் நடிப்பு துவங்கி அவரது படங்கள் ,நோக்கங்கள் ,பற்றி பல விமர்சனங்கள் எனக்கும் உண்டு . கமல் நடிப்பின் மிகப்பெரிய பலவீனம் -அவரால் கேமரா சென்ஸ் இல்லாமல் நடிக்க முடியவில்லை . 'இந்த படத்தில் நிறைய எனக்கு வேலை இருக்கு என்ற கர்வம் ' அவர் நடிக்கும் போது வெளிப்படையாக தெரிகிறது . இதை தவிர்த்து விட அவரால் முடியும் . அவருடைய சுபாவத்திற்கு 'இயல்பாய் இருக்க' கடும் முயற்சி,பயிற்சி தேவை . ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன் . அகில இந்தியாவிலே மோகன் லால் தான் கேமரா சென்ஸ் இல்லாமல் ,கதாநாயகன் என்ற கர்வம் ,பிரமை இல்லாமல் நடிக்கிற அற்புத நடிகர் .
சினிமாக்காரர்கள் எல்லாம் 'ரஹ்மான் பரிசு வாங்கியிருக்கும்போது இப்படி இவர் பேச வேண்டுமா' என்று கமல் ஹாசன் மீது ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று நேற்று வந்துள்ள ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டுள்ளது .
ஆஸ்கார் பரிசு பற்றிய அளவுக்கு மீறிய மிகையான பிரமை தான் ரஹ்மானுக்கு அது கிடைத்த போது எல்லோரையும் ஆனந்த கண்ணீர் விடவைத்து புல்லரித்து செடியரித்து மரம் அரித்து புளகாங்கிதமடைய வைத்துள்ளது .அதனால் தான் இந்த 'ரஹ்மான் பாராட்டு கோரஸில் ' நான் சேர விரும்பவில்லை என நான் எழுதியிருந்தேன் .கமல் ஹாசன் சொல்வது நூற்றுக்கு நூறு மிகவும் உண்மை .( இதை கமல் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமும் நமக்கு இல்லை )ஆனால் ரஹ்மான் ஆஸ்கார் கிறக்கத்தில் இந்தியாவே இருக்கும் இந்த நேரத்தில் அவர் இதை சொன்னதில் ஆற்றாமை , ஏக்கம் , தன்னிரக்கம் வெளிப்படுவதும் நூற்றுக்கு நூறு உண்மை .
எப்பவும் நான் ஆஸ்கார் பற்றி சொல்ற விஷயம் தாங்க என்று கமல் விளக்கம் தர முடியாது . சொன்ன விஷயம் தானே .ரஹ்மானுக்கு ஆஸ்கார் பரிசுக்காக வாழ்த்து சொல்லும்போதே விவஸ்தையில்லாமல் இந்த ஆஸ்கார் உலகத்தரம் அல்ல என்று சொல்வது பூலாப்பு தானே ?'உலகநாயகனே ' என்று ரஹ்மானை பார்த்து இந்தியாவேபரவசமாக பாடுகிறதே !
நேற்றைய முந்தைய தினமே'கமல் ,அமீர்கான் காதில் புகை நிச்சயம் ' என்று நான் மனித உளவியல் பற்றிய குறிப்பாக நான் “My concern is always with the not so brilliant and the not so successful people.” பதிவில் குறிப்பிட்டதற்கு கணிசமான எதிர்ப்பு கிளம்பியிருந்தது . நேற்று மட்டும் ஏழு' வெத்து கடுமை 'பின்னூட்டங்களை நான் இது குறித்து நிராகரிக்க வேண்டியிருந்தது . என் நுட்பமான பார்வை உண்மை தான் என கமல் ஹாசன் நிரூபித்து என்னை கனப்படுத்தி விட்டார். நான் சொன்னது சரி தான் என கமல் ஹாசன் நிருபர்கள் முன் பேசியுள்ளதன் மூலம் நிரூபித்து விட்டார்.
சில வருடங்களுக்கு முன் 'குமுதம் ஸ்பெஷல் ' இதழ் ஒன்றில் பத்திரிக்கை குழு முன் வைக்கும் கேள்விகளுக்கு வாசகர்கள் பதில் அளித்து வந்தார்கள் . அதில் ஒரு கேள்வி :
கமல் , ரஜினி ஒப்பிடுக .
ஒரு வாசகர் பதில் பிரசுரமானது . அந்த பதில் :
கமல் கடுமையாக உழைக்கிறார் .
ரஜினிக்காக கடவுளே உழைக்கிறார் .
கமல் திறமை , அதிர்ஷ்டம் பற்றி இந்த புத்திசாலித்தனமான பதில் முன் வைக்கும் சோகம் பாருங்கள் . உண்மையில் இந்த பதில் கமலை மிகவும் கௌரவப்படுத்துகிறது . அதே நேரம் கமல் ஹாசனின் தகுதி,உழைப்பு உதாசீனப்படுத்தப்படும் சோகத்தையும் முன் வைக்கிறது.வசூல் , விருது போன்றவை அவ்வளவு சுலபமாக சிலருக்கு கிடைப்பதே இல்லை . இந்த உலகத்தில் தகுதி ,திறமைக்கு தகுந்த வெகுமதி பெறாமல் போனவர்கள் எல்லா துறையிலும் கணக்கிலடங்காதவர்கள் .
கமலுக்கு ஆஸ்கார் பரிசு கிடைக்காதது பற்றி நான் நேற்றைக்கு முந்தைய தின பதிவில் கிண்டல் ஏதும் செய்யவில்லை . ஏ ஆர் ரஹ்மானுக்கு இசைக்கு கிடைக்கும்போது கமலுக்கோ , அமீர் கானுக்கோ நடிப்புக்கு ஆஸ்கார் விருது என்ன தகுதியில்லாததா ?
கமல் ஹாசன் நடிப்பு துவங்கி அவரது படங்கள் ,நோக்கங்கள் ,பற்றி பல விமர்சனங்கள் எனக்கும் உண்டு . கமல் நடிப்பின் மிகப்பெரிய பலவீனம் -அவரால் கேமரா சென்ஸ் இல்லாமல் நடிக்க முடியவில்லை . 'இந்த படத்தில் நிறைய எனக்கு வேலை இருக்கு என்ற கர்வம் ' அவர் நடிக்கும் போது வெளிப்படையாக தெரிகிறது . இதை தவிர்த்து விட அவரால் முடியும் . அவருடைய சுபாவத்திற்கு 'இயல்பாய் இருக்க' கடும் முயற்சி,பயிற்சி தேவை . ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன் . அகில இந்தியாவிலே மோகன் லால் தான் கேமரா சென்ஸ் இல்லாமல் ,கதாநாயகன் என்ற கர்வம் ,பிரமை இல்லாமல் நடிக்கிற அற்புத நடிகர் .