Share

Showing posts with label கி.ராஜநாராயணன். Show all posts
Showing posts with label கி.ராஜநாராயணன். Show all posts

Apr 1, 2020

கி. ரா எழுதியுள்ள புதிய நாவல்

97 வயதான கி. ராஜநாராயணன் குரலில் கொஞ்சம் கூட முதுமையின் சுவடு தெரியாது.
அவர் போனை எடுத்து குரல் கொடுத்தவுடன்
 அவர் மகன் என நினைத்து "பிரபி, நான் ராஜநாயஹம் பேசுகிறேன்"
"ராஜநாயஹமா? நான் ராஜநாராயணன் தான் பேசுறேன் "
உற்சாகமான, கனிவான பாசக்குரல்.

வயதிற்கான அடையாளம், சிரமம், ஞாபக பிசகு எதுவுமே இல்லாத தெளிவான இளமைக்குரல்.

தங்கு தடையற்ற நிதான உரையாடல் நிகழ்த்துகிறார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்
நான் பேசியிருக்கிறேன்.

'இந்த இவள் ' என்ற அவருடைய நாவலையடுத்து இன்னொரு நாவல் எழுதி முடித்திருக்கிறார்.
இந்த புதிய நாவலை அச்சு பிரசுரத்திற்கு கி. ரா கொடுப்பதாக இல்லை.
பதிப்பகம் மூலமாக வெளிவரும் புத்தகம் அல்ல.

Byron "Emma letters" பற்றி நினைவு படுத்தினார்.

Byron's early poems to Emma?

இந்த வருடம் கி. ரா பிறந்த நாளில் புதிய புதினம் புது விதமாக வாசகர்களுக்கு படிக்க கிடைக்க இருக்கிறது.

ஞான பீட விருது அவருக்கு கிடைக்க வேண்டும்.
.. 

Mar 31, 2020

Writer's block

’நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்’ என்றான்                    எட்டயபுரம் தலப்பா கட்டி.

ஆனால் கவிஞர் சமயவேல் சொல்வது போல
“ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் திடுமென மனது உறையத்தொடங்குகிறது.”

அந்தக் கவிதை முடிவது இப்படி-”எதிரெதிர் வண்ணங்களின் இழுப்பில் என் தூரிகை நகர்கிறது.”

Writer 's block.

எழுத்தாளனுக்கு எப்படியும் தொற்றும் வியாதி.

ஹெமிங்வே எழுத்து தடைப்படுவதை சகிக்க முடியாமல், எழுத எதுவும் இல்லையோ, ஊற்று வற்றி விட்டதோ என்ற தவிப்பில் தான் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பான்.

எலக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்ட்டெல்லாம் ஏர்னெஸ்ட் ஹெமிங்வேக்கு கொடுக்கப்பட்டது. அப்புறமும் அவனுடைய தேர்வு, தீர்வு தற்கொலை தானே.

கி. ராஜநாராயணன் ஒரு தீராத ஊற்று.

அவருடைய 'இந்த இவள்' நாவலில் எழுதியுள்ள விஷயம் கீழே :

"மழையைப் போலத் தான் எழுத்தும்.
மழைப்பேறும் பிள்ளைப் பேறும் எப்போ என்று மகா தேவனுக்கே தெரியாதாம்.

வில்லைக் கையில் எடுத்தாச்சி, அம்பையும் வைத்துக் குறியைப் பார்த்து இழுத்தாச்சி.
இடையில் எந்த ஒலிக் குறிக்கீடும் இருக்கக்கூடாது.

தாளின் மேல்  பேனா ஊன்றி நாட்டியம் தொடங்கி விட்டால், அல்லது யோசித்து நின்று கொண்டிருக்கும் போது, மேலேயிருந்து ஒரு பல்லி விழுந்தால் கூட அனைத்தும்
அணைந்து போய் விடும்.

இவை எல்லோருக்கும் அல்ல.

" வாகையடி முக்கில் வந்து தேர் விழுந்து விட்டது " என்பாராம் புதுமைப்பித்தன்.

நடு வழியில் வந்து படுத்துக் கொள்ளும்
நாவல் - மாடு - ரொம்பவே உண்டு என்று
 சுந்தர ராமசாமியும் சொல்லியிருக்கிறார்."

I'm not running out of Writer's Ink.

.. 

Mar 24, 2020

R.P.ராஜநாயஹத்திற்கு கி.ராஜநாராயணன் கடிதம்


புதுவையில் நான் இருந்த போது லாஸ் பேட்டில் இருந்து
கி. ராஜநாராயணன் எழுதிய சுவாரசிய கடிதம்.
லாஸ் பேட் 24.12.89
பிரியமுள்ள ராஜநாயஹம்,
நலமாகுக.
அருமையாய் வடிவமைக்கப்பட்ட
உங்கள் லெட்டர் ஹெட் கடிதம் வந்தது. மகிழ்ச்சி.
எனக்கும் ஒரு வேலை போட்டுக் கொடுங்கள்; நானும் வந்துருதேன்!
யுனிவர்சிட்டிக்காரன் கொடுக்கிற 4000/த்தை விட உங்கள் 400 / எனக்குப் பெரிசு.
உவர்மண் சுமக்கிற கழுதையாய் இருப்பதை விட
பூவைச்சுமக்கிற கழுதையாய் இருப்பது மேலல்லவா!
கோணங்கி என்கிற பொன் வண்டு
உங்கள் தீப்பெட்டிக்குள் அடங்கி
நீங்கள் போடுகிற
கருவை இலையைத் தின்று கொண்டு
முட்டையிடுமா என்று தெரியவில்லை.
செய்து பாருங்கள்;
எல்லாக் குழந்தைகளும் பிரியப்படுகிற விளையாட்டு தான் இதுவும்.
உங்கள் குட்டி ராஜநாயஹம் எப்படி இருக்கிறான்?
உள் வாங்கிய சிரித்த நாணத்துடன், எனது நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினான் பயல்.
எமப்பயல்!
அப்பாவுக்கு எனது அன்பைத் தெரிவியுங்கள்.
உங்கள் வீட்டம்மாவுக்கு எங்கள் பிரீதியையும் வரத்தையும் தெரியப்படுத்துங்கள்.
இன்னொரு தடவையும் வவ்வா மீன் சாப்பிடனும்.
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
இராஜநாராயணன்

Mar 8, 2020

கி. ரா கேட்ட பொஸ்தகம்

இருபது வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்த என்னிடம் கி. ரா ஒரு உதவி வேண்டினார்.

'வியத்தகு எண்ணெய் மருத்துவம் '
என்று ஒரு நூல் அவருக்கு தேவையாம்.

திருச்சி காஜா மலை பக்கம் ஏதோ ஒரு வீட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. எப்படியாவது தேடிப் பிடித்து இரண்டு பிரதியை வாங்கி அனுப்பும் படி கேட்டு எழுதியிருந்தார்.

 லெப்டினன்ட் கர்னல் தும்மல கோட்டேஷ்வர ராவ் எழுதிய தெலுங்கு புத்தகத்தை
ராயப்பேட்டை கோ.கிருஷ்ண மூர்த்தி தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது.

மலைக்கோட்டை பக்கம் எத்தனை புத்தக கடை.
அவற்றில் விற்பனைக்கு கொடுத்து தொலைத்திருக்கலாமே. மெயின் கார்ட் கேட் பகுதியில் எதற்கும் தேடிப்பார்க்க முயன்றேன். ம்ஹூம் கிடைக்கவில்லை.

காஜாமலை போன பின் பஸ்சில் இருந்து இறங்கி ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ரோட்டில் ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருந்தது.

என்னவோ ஏழு கடல், ஏழு மலை தாண்டின்ற அலுப்பு. நீண்ட தூரத்திற்கு ஒரு ஆளே பார்க்க முடியாமல், விசாரிக்க ஒரு கடை கூட காண கிடைக்காமல்.

'மதுரக்கி வழி வாயில'ன்னு சொல்றது திருச்சிக்கு செல்லுபடியாகாது போல.

ஒரு வழியா அந்த வீட்ட கண்டுபிடிச்சி
மூணு பொஸ்தகம் விலைக்கு வாங்கி
 ஒன்ன என் அப்பாவுக்கு குடுத்துட்டு
ரண்ட கி. ராஜநாராயணனுக்கு
ரிஜிஸ்டர் போஸ்ட்டில் அனுப்பி வைத்தேன்.

காலயில பல்ல விளக்கிட்டு காலக்கடனெ முடிச்ச பெறகு, சாப்பிடுறதுக்கு முன்ன ரெண்டு தேக்கரண்டி நல்லெண்ண, இல்ல கடலெண்ண, இல்லாட்டி ரீஃபைண்ட் சூரிய காந்தி எண்ணய வாயில விட்டு பதினஞ்சி, இருவது நிமிஷம் கொப்பளிச்சு துப்பிடனும். வாய நல்லா கழுவிடனும்.

ஒரு நாள்ள மூணு தடவ கூட கொப்பளிக்கலாம். ஆனா வெறும் வயித்துல தான்.

இது தான் 'வியத்தகு எண்ணெய் மருத்துவம்'.

ஆமா, இன்ன நோயின்னு இல்ல, எல்லா வியாதிக்கும் இந்த ஒரே மருத்துவ முறையாம்.

கி. ரா அப்புறம் ரொம்ப நன்றி சொன்னார்.

இந்த எண்ண கொப்பளிக்கிற வைத்திய
சிகிச்சைய செய்ய ஆரம்பிச்சாச்சுன்னு உற்சாகமாக சொன்னார்.

இந்தா பாருங்க இப்ப அவருக்கு
தொண்ணூத்து ஏழு வயசாகுது.

ஏதோ கி. ரா. வோட இந்த பூர்ண ஆயுசுக்கு நானுந்தான் காரணமோ?

....

Jul 2, 2019

அப்பா வாசித்த வாத்தியம்


முப்பது வருடங்களுக்கு முன் புதுவையில் கி.ராஜநாராயணன் என்னிடம் சொன்ன ஒரு விஷயம் இன்று காலை அடி மனதில் இருந்து மேலெலும்பி வந்தது.
நினைவின் ஞாபக அடுக்கில் இருந்து அவ்வப்போது இப்படித்தான் ஏதோதோ எட்டிப்பார்க்கும்.

கி.ராவின் சினேகிதர் ஒருவர். வங்கியில் நிர்வாகியாக இருந்தார் என்று சொன்னதாக ஞாபகம்.
வங்கி நிர்வாகியின் தகப்பனார் இறந்த போது நடந்த சம்பவம்.
பூத உடலுக்கு பலரும் வந்து இறுதி மரியாதை செய்து கொண்டிருந்த நேரம். இறந்தவர் சங்கீத ஞானம் மிக்கவர் என்பதோடு ஒரு வயலினிஸ்ட்.
இறந்தவரின் அபிமான தாரம் அழுது கொண்டே வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.
அபிமான தாரமாயிருப்பவர் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் வெறுப்பையும், கசப்பையும் பெறுபவராகவே இருக்க வேண்டியிருக்கும்.
அந்த பெண் கதறல் “அய்யோ, என்ன விட்டுட்டு போயிட்டீங்களே”
அப்போது தகப்பனை இழந்த கவலையில் இருந்த மகனுக்கு கோபமும் துவேசமும் பெருகியிருக்கிறது.
விக்கித்த நிலையில் கணவரின் பிணத்தருகே இருந்த தன் தாயிடம் மகன் ஆவேசமாக புலம்பியிருக்கிறார். “ இங்க பாரும்மா, அப்பா செத்தப்பிறகும் இந்த பொம்பள நம்மள கேவலப்படுத்த வந்துட்டா பாரும்மா”
அந்த விதவைத்தாய் தன் கணவனின் அபிமான தாரம் பற்றி உடனே தீர்க்கமாக மகனிடம் சொல்லியிருக்கிறார்.
“ அப்பா வாசிக்கிற வயலின் மேல் உனக்கு ரொம்ப பக்தியும், மரியாதையும் இருக்கில்ல. அந்த வயலின் ரொம்ப பவித்திரமானது தான. அந்த வயலின் போல தான் இவள். உன் அப்பா வாசித்த வாத்யம் போல் தான் இவளும். உனக்கு சித்தி. இன்னொரு தாய் தான். அப்பாவின் வயலினுக்கு கொடுக்கிற அதே மரியாதய நீ அப்பாவின் பிரிய சினேகிதிக்கும் கொடுக்க வேண்டும்.”
……..
அப்பாவின் ஆசை நாயகி பற்றி “ என் தாயி தங்காயி “ என்று கவிஞர் மகுடேசுவரன் கவிதை 

‘என் முகச் சாயலில் இறந்த என் தந்தையின் ஆசை முகத்தைக் கண்டவள் போல கண்வடிய நிற்பாள் என் தாயி தங்காயி’

யாரோ ஒரு இஸ்லாமியக் கவி பாடினாள் ‘தேவடியாள் என் தாயாக வேண்டும். நான் தேவடியாள் வீட்டு நாயாக வேண்டும்’

God invented concubinage, Satan marriage.
- Francis Picabia
............

May 10, 2019

கு.அழகிரிசாமியின் தந்தை பற்றி கி.ரா


கு.அழகிரிசாமியின் அப்பா தன் காலத்தில் ஜோதிடம் தொழில் பார்த்தவர். 
என்னிடம் கி.ரா. அவருடைய விசித்திர ஜோதிடம் பற்றி நான் புதுவையில் இருந்த காலத்தில் வேடிக்கையாக விவரித்திருக்கிறார்.
கீழே கி.ரா எழுதியுள்ள விஷயம்
”வறுமை ஒழிக என்ற அவயம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு ”பொற்காலம்”. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் குடும்பத்தார், இனி இடைச்செவலில் பிழைக்க முடியாது என்று வண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள். அந்தப் புறப்பாட்டைப் பார்க்க முடியாமல் என் வீட்டினுள் கிடந்தேன். அழகிரிசாமி சென்னையில் சிரமதிசையில் இருந்தான். வண்டியில் எல்லோரும் ஏறிக்கொண்டார்கள். அழகிரிசாமியின் அப்பா மட்டும் ஏறமுடியாது என்கிறார். செத்தாலும் நா இங்கே தான் சாவேன். கோயமுத்தூருக்கு வரமாட்டேம் என்கிறார்.
என்ன செய்ய. யார் சொன்னால்க் கேட்பார் இவர்.
ஒரு ஊரில் ஒவ்வொருவருக்கும், இன்னார் சொன்னாத்தாம் இவர் கேட்பார் என்று உண்டு. கு.அ.வின் மாமா ஒருவர். அவருக்குத் தெரியும் நான் சொன்னால் அவர் கேட்பார் என்று. என்னைத் தேடி வந்து விட்டார்.
எழுந்து போனேன். கிட்டே போய் அவருடைய கைப்பிடித்தேன். அவருக்குப் பார்வை போயிருந்தது. எனது தொடுதலிலிருந்தெ என்னைத் தெரிந்து கொண்டார். ஒரு குழந்தை போல் அழுது கொண்டே ’நா போக மாட்டேன் ராஜு போக மாட்டேன். நீயும் போகச் சொல்லுவியா. அய்யோ, ஏங்குடும்பம் இப்பிடி ஆயிட்டதே தேவுடா.’
எப்படி அவரைச் சமாதானம் செய்ய; தெரியவில்லை.
மாமா, நீங்க மட்டும் எப்பிடி இங்கே இருக்க முடியும்.
“ஏம் எனக்கு நீ கஞ்சி ஊத்தமாட்டியா? ஒரு வேளை மட்டும்; அரை வகுத்துக்குப் போதும்”
சீனி மாமா சொன்னார்: “ராஜூ உமக்குக் கஞ்சியும் ஊத்துவார்; பொடிப்பட்டை செலவுக்கும் தருவார், சரி விடிஞ்சதும் ”மந்தை”க்குப் போகக் கையெப் பிடிச்சிக் கூட்டிட்டுப் போவாரா, நாளைக்குச் சட்டடியா படுத்துட்டா ஒம்மோட பீத்துணியை அலசிப் போடுவாரா!”
இது நகைச்சுவை இல்லையென்றாலும், அவ்ர் சொன்னது அங்கிருந்த அனைவரையும் முகம் திருப்பி ஒரு வகைச் சிரிப்பைத் தந்தது.
வயசாகிப்போன ஒவ்வொருவருடைய இறுதி நாள் கவலை அது.
இது தான் நேரம் என்று, சீனி மாமா தனது மாமனாரான கு.அவின் அப்பாவின் கையிலிருந்த கைத்தடியை வாங்கிக்கொண்டு அவரைக் குண்டுக் கட்டாகத் தூக்கி வண்டிக்குள் வைத்தார்.
என்னிடம் சொல்லிக்கொண்டு எல்லோரும் புறப்பட்டுப் போனார்கள். அவர்களை நான் பார்த்தது அது தான் கடேசி என்று அன்று நினைக்கவில்லை. அதுவே கடேசிக் காட்சியாக அமைந்து விட்டது.”
- கி.ராஜநாராயணன் “ வேதபுரத்தார்க்கு நூல்
( குமுதத்தில் தொடராக வந்தது)
அன்னம் வெளியீடு

May 9, 2019

கு.அழகிரிசாமி


”கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை தனித்தனியாக பத்திரிக்கைகளில் அவ்வப்போது படித்துப் பார்த்தபோது அவை அப்படி ஒன்றும் பிரமாதமானவையாகத் தோன்றவில்லை. ஆனால் சேர்த்து புஸ்தக ரூபத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கும் போது, சங்கீத ரஸிகர்கள் சொல்கிறார்களே அது போல் ‘ஐயோ!’வென்றிருக்கிறது. எப்படித்தான் இந்தச் சிறுகதையாசிரியர் இப்படியெல்லாம் எழுதினாரோ? என்றிருக்கிறது” என்று க.நா.சு 1959லேயே மலைத்துப் போயிருக்கிறார்.

நகுலன் “அழகிரிசாமியின் கதைகள் மனநிலைகளை நுணுக்கமாக விவரிப்பதிலும் சௌந்தரிய உணர்ச்சியின் பரிணாமத்தையும் உள் வளைவுகளையும் தாங்கியிருப்பதிலும் இவ்வளவு இருந்தும் பிரத்தியட்ச உலகின் தொடர்பு அறாமலிருப்பதிலும் நம்மைக் கவர்கின்றன, ஆனால் கு.அழகிரிசாமி கலையைப் புரிந்துகொண்டு அனுபவிப்பதற்கு வாசகனும் நுண்ணுணர்வு பெற்றவனாக இருக்கவேண்டும்.”
மேலும் நகுலன் 1961ல் சொன்னார் “ புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, இவர்களுடன் உடன் வைத்துப் பேசக்கூடிய தகுதி வாய்ந்தவர் கு.அழகிரிசாமி. சொல்லப்போனால் இக்குறிப்பிட்ட ஆசிரியர்களின் சாயை அழகிரிசாமியிடம் ஒரு நூதன ரூபமெடுத்திருக்கின்றன. இவர்கள் அனைவரிடமிருந்தும் தனித்து நிற்கும் ஒரு பண்பும் கலைத்திறனும் அவருடைய கதைகளுக்கு உண்டு. அவருடைய கதைகளை ஒருமுறைக்கு இரு முறையாக படிப்பவர்களுக்கு சௌந்தரிய உணர்ச்சி என்பதன் தனி அர்த்தம் தெளிவாக விளங்கும்.
கதைத்தொகுதிகளை இன்று மூன்றாவது முறையாகப்படிக்கும் போது வட்டமிடும் உணர்ச்சி என்னவென்றால் அவர் கதைகளில் காணப்படும் ஒரு நூதனமான ’நகைச்சுவை’. விளக்கமாகச் சொல்லப்போனால் அவருடைய கதைகளுக்கெல்லாம் அர்த்தம் கொடுப்பது ஒரு தனிவிதச் சிரிப்புத்தன்மை. ஆனால் அவரை நாம் ஒரு பொழுதும் ஒரு நகைச்சுவை ஆசிரியராகச் சாதாரணமான அர்த்தத்தில் கருத முடியாது. ஒரு மேல்நாட்டு ஆசிரியர் ஆனந்த பாஷ்பத்தின் அடித்தளத்தில் நாம் துக்கக் கண்ணீரின் உலர்ந்த சுவட்டைக் காணலாம் என்று சொன்னார். அந்த அர்த்தத்திலும் நாம் அழகிரிசாமியின் நகைச்சுவைக்கு வியாக்கியானம் அளிக்க முடியாது. இதைச் சற்று வார்த்தைகளில் விவரிப்பது கடினம் தான்.”
அழகிரிசாமி செய்த ஒரு சபதம் “குழந்தைகளை அடிக்க மாட்டேன். கம்ப ராமாயணத்தின் மீது சத்தியம்.”
அவருடைய பிள்ளைகள் அதிர்ஷ்டக்காரர்கள். சாரங்கன் தன் அப்பா கையால் அடிவாங்காத மகன். கம்பராமாயணத்தின் மீது சபதம்.

அழகிரிசாமிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர். He was having some strong likes and dislikes. மௌனியையும் லா.ச.ராவையும் சுத்தமாக பிடிக்காது. இவர்கள் இருவரும் எழுதியவை கதைகளாகவே தனக்குத்தோன்றவில்லை என்று கடுமையாக பேசினார்.
அழகிரிசாமி சிறுகதைகள் முழு புத்தகமாக பதிப்பாசிரியர் பழ அதியமான் அவர்களின் சீரிய முயற்சியில் காலச்சுவடு வெளியீடாக எட்டு வருடங்களுக்கு முன் வந்திருக்கிறது.


அழகிரிசாமியின் சில கதைகள் படித்து எவ்வளவு காலம் ஆனாலும் கூட சட்டென்று சிரமமின்றி நினைவின் மேலெழும்பி வரக்கூடியவை.
திரிபுரம், அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், அழகம்மாள், திரிவேணி, குமாரபுரம் ஸ்டேசன்,சுயரூபம் ஆகிய கதைகள். சில கதைகளை குறிப்பிடுவதால் கொஞ்சம் நல்ல கதைகள் தான் போல என்று யாருமே எண்ணி விட வேண்டாம்.
கி.ராவுக்கு அழகிரிசாமி எழுதிய கடிதங்கள் காட்டும் உலகம்.

கு.அழகிரி சாமி இசையறிஞர் விளாத்திகுளம் சுவாமிகளைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம் " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார்!"
இதே போல கு.அழகிரி சாமி ரசிகமணி டி.கே.சி யைப் பார்த்தவுடன் உடனே,உடனே சொல்லியிருக்கிறார் "அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார்!"
 1990ல் புதுவையில் ஒரு கட்டடத்தில் புத்தகக்கண்காட்சி. கி.ராவுடன் நான் உள்ளே நுழையும்போது செருப்பை வெளியே விட வேண்டியிருந்தது. உடனே கி.ரா
“இப்படி செருப்பை கழற்றி விட்டு செல்ல வேண்டியிருக்கும் போது அழகிரிசாமி என்ன செய்வான் தெரியுமா? ஒரு செருப்ப இங்கன போடுவான். இன்னொரு செருப்ப அங்கன போடுவான்.”
திருடு போய்விடக்கூடாது என்பதற்காக!
இப்படி அழகிரிசாமி பற்றி கி.ரா. நினைவில் இருந்து அள்ளித் தெளிக்கும் விஷயங்களை கேட்கும்போது அவரை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கம் தான் ஏற்படும்.

திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் அமுதன் அடிகள் என்னிடம் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை அங்கே ஒரு பிரபலத்திற்கு தந்துதவும்படி சொன்னார். ”புத்தகங்கள் திரும்ப கிடைக்கும். நான் பொறுப்பு” என்றார்.
அதன் படி அந்த மனிதர் என் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த அனைத்து அழகிரிசாமி சிறுகதை தொகுப்புகளையும் வாங்கிச்சென்றார்.
அவருக்கு அழகிரிசாமி கதைகள் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கிறதாம். ஒரே மாதத்தில் திருப்பித்தருவதாக சொன்னார்.ஆறு மாதமாக தரவேயில்லை.
அமுதன் தர்மசங்கடத்துடன் கையை பிசைந்தார். என்ன இந்த மனிதர் இப்படியிருக்கிறார் என்று வேதனைப்பட்டார்.
நான் மனந்தளரவில்லை. அவருடைய வீட்டுக்குப் போய் விட்டேன். அவருடைய மனைவி தான் இருந்தார். புத்தகத்தை திருப்பித்தர நினைவு படுத்தி விட்டு வந்தேன்.
ஒரு வாரம் கழித்து அவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வந்தார். முகம் விளங்கவில்லை. புத்தகங்களை திருப்பி கேட்டு அவரை அவமானப்படுத்தி விட்டதாக கருதுகிறார் என்பது அவர் முக விலாசத்தில் தெளிவாக தெரிந்தது. “நானெல்லாம் ரொம்ப கௌரவமானவன். ரோஷமானவன்.” என்று சொல்லி புத்தகங்களை திருப்பி தந்து விட்டு நன்றி சொல்லாமலே திரும்பிச் சென்று விட்டார்.

Apr 10, 2019

குட்டி பாப்பா


கி.ராஜநாராயணன் என்னிடம் சொன்னார் : ’குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப்போகலாம்.’
ஆங்கிலத்தில் ஒரு இடியம் உண்டு.
Left holding the baby - அசௌகரியப்படுத்தப்படுவது. கூடுதல் வேலைப்பளுவால் சிரமப்படுத்தப்படுதல்.
கைக்குழந்தைகளை கவனித்துக்கொள்பவர் is made a scapegoat என்கிற அர்த்தம்.
இன்றைக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு தலை மேல் பாரம் பேரக்குழந்தைகளை கவனித்துக்கொள்வது.
இப்படி கி.ரா.வின் ஒரு சஹிருதயர் தன் இரு மகன்களும், மருமகள்களும் வேலைக்கு செல்வதால் தானும் தன் மனைவியும் கூடுதல் பளுவால் அனுபவிக்கும் பெருந்துயராக, அவர்களின் கைக்குழந்தைகளை கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பைப்பற்றி சொன்னதை என்னிடம் விவரித்தார். ஆயாச பெருமூச்சுடன் அந்த பெரிய மனிதர் ஈனஸ்வரத்தில் நொந்து கொண்டாராம். 
கி.ரா பட்டென்று உடைத்து, வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டாக (அவரிடம் சொல்லாமல்), என்னிடம் சொன்னார்” குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப் போகலாம்.”
எனக்கும் தெரிந்தவர் தான். அவர் இப்போது உயிரோடு இல்லை.
நன்றாக நினைவிருக்கிறது. தன் பிள்ளைகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்த விஷயத்தையெல்லாம் என்னிடம் எவ்வளவோ சந்தோஷமாக சொல்லியிருக்கிறார்.
கிருஷ்ணன் நம்பி எழுதிய ‘விளையாட்டுத்தோழர்கள்’ கதையில் ஒரு குட்டிப் பாப்பா தான் வில்லன்.
சிறுவன் சங்காவின் இடது கால் குதிரைச் சதையில் பாப்பாவின் ஐந்து பற்கள். அழுந்த நெரித்து இறுக்கிய பிடிவாத பாப்பாவின் பற்கள்.

’பாட்டியா வீட்டில் குழந்தை காட்சி’ சுவாரசியமான தி.ஜானகிராமனின் சிறுகதை.
எழுத்தாளர் சி.ஆர். ராஜம்மா பெற்ற ஒரு பச்சைக்குழந்தை,தாயின் பூ விழுந்த கண்ணை பிய்த்து வெளியே எடுத்து விட்டது.
சும்மா ’சுகமான சுமை’ என்று பீற்றிக்கொண்டு பேரப்பிள்ளைப்பீய அள்ளலாம்.ஆனால் யதார்த்தம் வேறு.
சாரு நிவேதிதா ‘குழந்தைகளை எனக்குப் பிடிக்காது’ என்று ஒரு கட்டுரை எழுதியதுண்டு.



Oct 20, 2017

கிருஷ்ணன் நம்பி – சு.ரா- கி.ரா – சூரியோதயம்


சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவல் படித்தவர்கள் அதில் வருகிற சூரியோதய காட்சியை மறந்திருக்க முடியாது.
”அப்போது கிழக்கே சூரியனின் விளிம்பு தெரிந்தது. நகத்தைப் பிய்த்துக்கொண்ட விரலிலிருந்து ரத்தம் கசிவதைப்போல் சூரியன் வருகிறது. ரத்த வெள்ளம்….”
“காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, கீழே இறங்கி, பாதை விளிம்பில் நின்று கொண்டு சூரியோதயத்தைப் பார்த்தேன்…….அற்புதத்திலும் அற்புதமான அந்தக் காட்சியைப் பின்னகராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். மனித ஜென்மங்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இது. அதிகாலையிலும், ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியாகவும், அதே சமயம் வெவ்வேறு விதமாகவும், கணங்கள் தோறும் மாற்றிக்கொண்டும்………….
”ஒவ்வொரு நாளும் இந்த விசுவரூப தரிசனத்திலிருந்து நாம் பெறக்கூடியவற்றில் மேலான ஞானம் லகுவாகவும் பக்குவமாகவும் நமக்குக் கிடைக்கும். வேறு எதிலிருந்தும் பெற முடியாத ஞானம் இதிலிருந்து பெற முடியும்…..”
ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல் 1981ல் க்ரியா வெளியீடாக வந்த போது ஏற்படுத்திய பரபரப்பு…..
அசோகமித்திரன் ஜே.ஜே. பற்றி “ அண்ணாந்துன்னா பாக்க வேண்டியிருக்கு.”
மிக பிரமாதமாக 1985ல் அசோகமித்திரன் “ஒற்றன்” நாவல் மூலம் படைப்பாளியாக எதிர்வினையாற்றினார். ஜே.ஜேக்கு பதில் என்று புரிந்து கொள்ளக்கூடாது. ஜே.ஜேக்கு சரியான சவாலான நாவல்.
இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்” கூட ஜே.ஜே சில குறிப்புகளுக்கு குறைந்த ஒன்று அல்ல.
பின்னாளில் பிரமிள் குறுநாவல் ‘ப்ரசன்னம்’ சு.ரா.வின் ஜே.ஜேவுக்கு எதிர்வினை என்று வெளிப்படையாக சொன்னார்.
ந.முத்துசாமி தன்னுடைய ‘உந்திச்சுழி’ நாடகத்தை ஜே.ஜே என்ற கதாபாத்திரத்திற்கே சமர்ப்பணம் செய்தார்.
ஜே.ஜே சில குறிப்புகள் நாவல் ஏராளமாய் விமர்சனத்தை எதிர்கொண்ட நாவல். சாரு நிவேதிதாவின் விமர்சனம் ரொம்ப பிரபலம்.

1984ம் ஆண்டு ‘ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு விமர்சனம்’ என்ற ஒரு சின்ன புத்தகம் சாரு நிவேதிதா எழுதியிருந்தார். ஜே.ஜே சில குறிப்புகளை கடுமையாக விமர்சிக்கையில் ஜே.ஜே ஏன் ஸாண்டவரி என்ற எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட் போல இல்லை என்று கேட்டு, அரவிந்தாட்ச மேனன் ஏன் சார்த்தர் மாதிரியில்லையே என அதிருப்தியுற்று, மாஸேதுங் அழுக்காகவும் குளிக்காமலும் இருந்ததை மிகவும் சிலாகித்து, ஜெனேயை விடவா ஜே.ஜே பெரிய கொம்பன் என்றெல்லாம் சாரு நிவேதிதா கொந்தளித்திருந்தார்.


2002ல் ஜூலை 16ந்தேதி எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பினார். அதில் அவர் எழுதியுள்ளதை அப்படியே தருகிறேன்.
My dear R.P.Rajanayahem,

I totally rejected nearly sixty criticisms on J.J. 
Criticisms is a matter of opinion and opinions of writers always tend to vary, assuming they are recording their real voice, which is not often the case, especially in our milieu. 
Difference in opinions are understandable. But if anybody distorts FACTS that are standing in my favour, surely I will try to expose the deliberate falsifications of writers who ever they are.

- Sundara Ramaswamy 

ஜே.ஜே நாவலை கிருஷ்ணன் நம்பியின் நினைவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் சுந்தர ராமசாமி.

சுந்தர ராமசாமியின் கிருஷ்ணன் நம்பியின் நினைவோடை (2003)யில் பிரசுரமானது. அதில் நம்பியும் சுராவும் பார்த்த சூரியோதயத்தைத் தான் ஜே.ஜேயில் விவரித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
1976ல் நம்பி பிழைக்கவே இனி வழியில்லை என்ற மருத்துவ உண்மை தெரிந்த பின் நடந்த ஒரு நிகழ்வு.
“ அதிகாலையில் அவன் (கிருஷ்ணன் நம்பி) முதலில் எழுந்தான்.
 கொஞ்ச நேரம் கழித்துப் புறப்படுவோமே என்று சொன்னேன். புறப்பட்டோம்.
 கார் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ மீட்டர் போயிருக்கும். 
அப்போது தான் அந்த அருமையான சூரியோதயத்தை நாங்கள் பார்த்தோம். ஜே.ஜேயில் நான் விவரித்திருந்தது கூட அந்த சூரியோதயத்தைத்தான்.
 தென்னை மரங்களின் மேலாக சூரியன் மெல்ல மேலெலத்தொடங்கியிருந்தது. 
அந்தக் காட்சியை நன்றாக பார்ப்பதற்குத் தோதான இடத்தில் காரை நிறுத்தும்படிச் சொன்னான். இறங்கினோம். அங்கு ஒரு பாலம் இருந்தது. கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றோம். அங்கிருந்த திண்டில் அமர்ந்து கொண்டான். 
கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியத்தொடங்கியது. அந்த சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காகத் தான் அவன் அதிகாலையில் புறப்பட வேண்டும் என்று சொன்னானா? இனி இது போன்ற காட்சிகளை பார்க்க முடியாதே என்ற விஷயத்தை, மரணத்தை அந்தக் காட்சி அவனுக்கு நினைவு படுத்தியதா…….?”
.............................

கி.ராஜநாராயணன் தன் தொண்ணூறாவது வயதில் குமுதத்தில் “வேதபுரத்தார்க்கு” என்ற சுயசரிதைத் தொடர் ஒன்றை 2012ல் ஆரம்பித்து எழுதி அது புத்தகமாக 2014 வந்திருக்கிறது.

அந்த வேதபுரத்தார்க்கு நூலில் கிருஷ்ணன் நம்பி நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கும்போது கி.ராவுடன் ரயில் பயணத்தின் போது பார்த்த சூரியோதயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.ரா அதை விவரிக்கிறார் : “ மதுரையிலிருந்து கிருஷ்ணன் நம்பியுடன் நான். அதிகாலை நேரத்தில் ரயிலில் வந்து கொண்டிருந்தோம். கோவில் பட்டியைப் பார்த்து. வானம் வெளுக்க ஆரம்பித்தது.
இப்பொ ஒரு அதிசயம் நிகழப்போகிறது என்று கிருஷ்ணன் நம்பிக்குத் தெரியாது. காரணம் அவர் மேற்கே பார்த்துக்கொண்டிருந்தார், என்னிடம் பேசிக்கொண்டு.
மனசுக்குள் நான் அவரை திடீரென்று ‘அதெப் பாருங்க’ என்று கிழக்கே பார்க்க வைக்க வேண்டும்.
சில காட்சிகளை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது கடல் அலைகளைப் பார்ப்பது போலெ. கடல் விளிம்பில், மலை முகட்டில் சூரியப் பிறப்பையும் மறைவதையும் பார்த்திருப்பார்கள். தரையில் அவை நிகழ்வதைப் பெரும்பாலோர் பார்க்க வாய்ப்புக்கள் கிடைத்திருக்காது.
ஒரு தாயின் வயிற்றிலிருந்து ஒரு குழந்தை உதிப்பது போல சூரியனின் தலை தெரிய ஆரம்பித்தது.
எதை இப்படி வாய்பிளந்து கவனிக்கிறார் என்று நம்பியும் திருப்பிக் கிழக்கே பார்த்தார். அவரையும் அந்தக் குழந்தைச்சந்தோசம் பற்றிக்கொண்டது.

“ஓ” என்று குரல் கொடுத்துக் கத்திக்கொண்டு ரயிலும் ஓடிக்கொண்டிருந்தது தாளத்துடன்.
ரயிலுடன் நம்பியும் சேர்ந்து ஆனந்தக்குரல் கொடுத்தார்.

கண்கூசாத ஒரு பிரம்மாண்டமான பவள உருண்டையாகக் காட்சி தந்தான் சூரியத்தேவன்.
இப்படி ஒரு வாய்ப்பு ஒருவருக்கு எப்போதாவது தான் வாய்க்கும்.”

……………………............

ஃப்ரஞ்ச் கவிஞன் ஆர்தர் ரைம்போவின் Eternity கவிதையில்
"It has been found again,
What? - "ETERNITY"
It is the sea fled away
with the sun!"


It has been found again. What? – Eternity. It is the sea gone with the sun.

it (the sun) will rise (again).

…………………………….


Sep 18, 2017

கி.ரா அறியாத பலகாரமும்,புலவர் பிரபஞ்சனும் (1991)


கணையாழி ஆகஸ்ட் 1991 இதழில் நான் எழுதிய இதன் ஒரு பகுதி ‘புலவர் பிரபஞ்சன்’ என்ற தலைப்பில் பிரசுரமானது.

கேக் கொண்டு வந்த சினிமா நடிகர் பார்த்திபனிடம் பின்னால் கி.ரா கடிதத்தில் கேட்ட கேள்வி. ‘அது என்ன பலகாரம்?’ என்ன தான் காஸ்ட்லியான கேக் என்றாலும் பார்த்தவுடனே கண்டு பிடிக்க முடியும். கி.ரா எப்படில்லாம் காதில் பூ சுத்திருக்காரு. எல்லா கிராமங்களுக்கும் கேக் 1970லேயெ வந்துடுச்சி. கோவில்பட்டியிலேயே பேக்கரி கேக் உண்டு. இடைச்செவல் கிராமம் பக்கத்தில் தான். கேக் தெரியாத கிராமத்தானே கிடையாது. பாண்டிச்சேரி போன்ற நகரத்துக்கு வந்து மூன்று வருடம் கழித்து ’அது என்ன பலகாரம்?’ என்று வியந்து கேட்பது ரொம்ப ஓவர் தானே?

பிரபஞ்சன் பின்னால் ஒரு எட்டு ஒன்பது வருடங்களில் தி.ஜாவின் பெருமைகளை புரிந்து கொண்டார். ’தி.ஜாவை மிஞ்ச ஆளேயில்லை’ என்று வானளாவ ஜானகிராமனை புகழ ஆரம்பித்தார்.
…………………………………..

கி.ரா அறியாத பலகாரமும்,புலவர் பிரபஞ்சனும். (1991)
- R.P.ராஜநாயஹம்

சென்ற ஜுலை மாத கணையாழியில் பிரபஞ்சன் பேட்டியில் தி.ஜாவின் பெண் கதாபாத்திரங்களை Utopian characters ஆக மட்டையடி அடித்திருப்பது ஏற்க முடியாத விஷயம். பெண்மையின் மேன்மையையும், உன்னதத்தையும் தன் பெண் கதாபாத்திரங்களின் பலம், பலவீனத்துடன் தெளிவாக சித்தரித்தவர் தி.ஜானகிராமன்.
’தாங்க முடியாத மன உளைச்சலுக்குத் தான் ஆட்படும்போது தி.ஜாவின் மோகமுள்ளை ஒரே இரவில், ஒரே மூச்சில் எத்தனையோ தடவை படித்துள்ளதாக’ சொல்லும் பிரபஞ்சன் தன்னுடைய பார்வை முரண்பாடுகளை பரிசீலிக்க வேண்டும்.


’தன்னை நம்பி வந்த மனைவியை பட்டினி போட்டு விட்டு ஒருவன் இலக்கியம் படைத்தால் அந்த இலக்கியம் கறை படிந்த இலக்கியம்’ என்கிறார். முன்பொரு முறை பாரதி மீது பணக்கார பாலகுமாரன் இந்த மாதிரி ஒரு கமெண்ட் அடித்தார். இப்போது பிரபஞ்சன்.

பாரதி, புதுமைப்பித்தன் துவங்கி ஜி. நாகராஜன் வரை, கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றி முகம் சுளித்து தீர்ப்பிட யாருக்கும் இங்கே யோக்கியதை கிடையாது. கலைஞன் இவர்களுடைய சமூக, பண்பாட்டு மதிப்பீடுகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாதவன். டேல் கார்னகி, எம்.ஆர்.காப்மயர் தியரிகளைப் போன்ற அபத்தங்களை  உளற வேண்டாம்.

வட்டார இலக்கியம் போலியானது என்பது சரி. இது குறித்த அபாய எச்சரிக்கையை முதலில் செய்தவர் வண்ண நிலவன்.  மானாவாரி பயிர், திவசம், கம்மங்கூழ் இப்படி சில   வார்த்தைகளோடு வறுமையை மிக்ஸ் பண்ணி ’ரெடிமேட்’ கரிசல் இலக்கியம் செய்வதை வண்ணநிலவன் சாடினார்.

கி.ராவின் இலக்கிய அந்தஸ்தை இது கேள்விக்குள்ளாக்காது. கி.ராவின் சாதனை ‘கதவு’ மட்டும் தானா? நாவலுக்கு என்று இருந்த வடிவத்தை உடைத்ததோடு தமிழின் முதல் சரித்திர நாவலையும் எழுதியவர் கி.ரா. சமீப காலங்களில் முழுக்க முழுக்க வட்டார வழக்கிலேயே கரிசல் காட்டு கடுதாசி கட்டுரை துவங்கி, தொடர்ந்து தன் மொழி நடையில் அவர் செய்து வரும் மரபு மீறல் புதிய முயற்சி. எந்த மொழி இலக்கியமானாலும் மரபு மீறல்களாலேயே வளமடைந்திருப்பது சரித்திர உண்மை.

கி.ராவிடம் ஆட்சேபகரமான விஷயங்களும் இல்லாமல் இல்லை. ஈசல் போல் கரிசல் எழுத்தாளர்கள் பெருகுவதைக் கண்டு அவர் புளகாங்கிதமடைவது ஏற்புடையதன்று. பூமணி, கோணங்கி விதிவிலக்கு.

மற்றொன்று ஆரம்ப காலத்தில் கி.ரா.வுக்கு ஏற்பட்டு விட்ட நகர வாசனையேயில்லாத கிராமத்து அப்பாவி என்ற பிம்பத்தை தொடர்ந்து காப்பாற்ற அவர் செய்யும் பிரயத்தனங்கள்!

புதுவையில் தன்னைப் பார்க்க வந்த ஒரு சினிமாக்காரன் கொடுத்த ‘கேக்’ பற்றி, பின்னர் அவனுக்கு எழுதிய கடிதத்தில் ‘அது என்ன பலகாரம்?’ என்று மிகையாக அதிசயப்பட்டு விசாரித்திருக்கிறார். அந்த நடிகனே இதை குமுதத்தில் எழுதி அவரை ரொம்ப இன்னொசண்ட் என்று புகழ்ந்திருந்தான்.

கி.ராவின் சமீபத்திய இலக்கிய முயற்சிகளை ஆபாசத்தின் எல்லை என்று பிரபஞ்சன் கடுமையாக தாக்குவது சரியா?
நக்கீரன் பத்திரிக்கையில் பிரபஞ்சன் அடித்த கூத்தை விட எதுவுமே ஆபாசம் கிடையாது.

‘மரப்பசு’ நாவல் குறித்த தன் அபிப்ராயமாக ‘தி.ஜானகிராமனுக்கு ஆயிரம் பெண்களோடு படுக்க ஆசை’ என்று எழுதிய வக்கிரம்,

எஸ்.வி.சேகர் ஏதோ ஒரு பத்திரிக்கையாசிரியரான போது, அலட்சியப்படுத்த வேண்டிய உப்பு பெறாத இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொண்டு, மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ்.ராமையாவையும் ‘எழுத்து’ சி.சு.செல்லப்பாவையும், குமுதம் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அப்புச்சியோடு தோளோடு தோளாக நிறுத்தி வைத்து ‘இவர்களெல்லாம் பத்திரிக்கையாசிரியர்களாக இருந்த செந்தமிழ் நாட்டில் இன்று எஸ்.வி. சேகர் பத்திரிக்கையாசிரியரா? என்று புலம்பிய அபத்தம்,

’1989 இல் தி.மு.க.வின் சட்டசபைத் தேர்தல் வெற்றி, ஐயர்களின் தோல்வி’ என்று கொக்கரித்த எகத்தாளம்.
ஆக இந்த பேட்டை ரௌடித்தனம் தான் இன்று கி.ரா.வின் மேலேயும் நிர்த்தாட்சண்யமாக பாய்ந்திருக்கிறது.
கடைசியாக ‘Ego’ பற்றி பிரபஞ்சன் வருத்தப்படுவது வேடிக்கை தான். ஏனென்றால் இந்த கற்றோர் காய்ச்சல், வித்துவச் செருக்கெல்லாம் புலவர் பிரபஞ்சனிடமும் இருக்கிறது.
………………………………..




Aug 1, 2016

கு.அழகிரிசாமியின் யுக்தி


நிறை மாத கர்ப்பிணிகளை நிறைய பார்க்கிறேன்.

’பத்து மாசம் சுமந்திருந்து பெற்றாள்’ பாட்டு இருக்கிறது.
’ முன்னூறு நாள் சுமந்தாள்’ – இப்படியும் ஒரு டப்பா பாட்டு நான் சிறுவனாயிருக்கும் போது கேட்டிருக்கிறேன்.
அப்போது நினைத்திருக்கிறேன். அடுத்து ‘7200 மணி நேரம் வயிற்றில் அன்னை என்னை வைத்திருந்தாளே!’ பாட்டு அடுத்து வரப்போகிறது!

வில்லன் பிரகாஷ் ராஜ் வசனம் ஒரு படத்தில் இந்த மாதிரியிருந்தது. டி.வியில் ஓடிக்கொண்டிருந்ததை ஒரு நிமிஷம் கவனிக்க நேர்ந்த போது. – “என் அம்மா செத்துட்டா. அவ இப்ப உயிரோடு இருந்தா ஏண்டி என்ன பத்துமாசம் உள்ள வச்சிருந்தேன்னு கேட்டு அவள கொன்னுடுவேன்!”
………………………………………………..


கி.ரா வயது தொண்ணூற்று நான்கு. கடந்த ஆறு மாதங்களாக அவருடன் தொலைபேசுவது நடப்பதில்லை. மணிக்கணக்காக என்னுடன் எப்போதும் அளவளாவுவார். எனக்கு இது ஒரு இழப்பு. எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கிறது. அவரால் இப்போதெல்லாம் யாரையும் சந்திக்க இயலவில்லை. மணிக்கணக்காக என் போன்றவர்களுடன் பேச முடியவில்லை. முதுமையின் அயர்ச்சி.
சென்ற வாரம் என் ப்ளாக்கில் 2008ம் வருடம் நான் பதிந்திருக்கிற “ ஆன வயதிற்கு அளவில்லையெனினும் தெளிவே வடிவாம் கி.ரா.” மிக அதிக ஹிட் பெற்றிருந்தது. எனக்கு உடனே பதற்றம். திடீரென்று இது அதிக பேரால் படிக்கப்பட்டிருக்கிறது என்றால்………. இதை கி.ராவின் 85 வயதில் அவருக்காக வெளியிடப்பட்ட ’கி.ரா- 85’ நூலுக்காக எழுதியிருந்தேன். அதை நான் ப்ளாக் ஆரம்பித்த 2008ம் வருடம் பதிந்திருக்கிறேன்.
நல்ல வேளை கி.ராவுக்கு எதுவும் ஆகி விடவில்லை என்பது தெரிந்து கொண்டேன்.
………………………………………………….

ஞாயிற்றுக்கிழமை பெசண்ட் நகர் முத்தமிழ் பேரவை அரங்கத்தில் ஒரு பரத நாட்டிய அரங்கேற்றம். 

ந.முத்துசாமி சாருடன் உட்கார்ந்திருந்தபோது ஒருவர் உள்ளே நுழைந்தார். 
அவர் முகம் கு.அழகிரிசாமியை நினைவுறுத்தியது. புகைப்படத்தில் பார்த்திருக்கிற அழகிரிசாமியின் முகம். அவருடைய ‘அன்பளிப்பு’, ‘ராஜா வந்திருக்கிறார்’, ’சுயரூபம்’ போன்ற அற்புத கதைகளெல்லாம் வரிசை கட்டி நினைவுக்கு வந்தன.
அழகிரிசாமிக்கு மௌனியைப் பிடிக்காது.
அவர் கருத்து - ’சும்மா பம்மாத்து செய்கிறார்’.
க.நா.சு சொன்னார்:”மூக்கறையர்களுக்கு மௌனியை புரியாது.”
ஆனால் மௌனியின் சிறுகதைகளுக்கான முன்னுரையிலேயே அன்று தமிழின் ஒன்பது எழுத்தாளர்களில் ஒருவராக கு.அழகிரிசாமியை கனப்படுத்தினார். ’கு.அழகிரிசாமி பாரதி வரிசையில் வைத்து போற்றப்படவேண்டியவர்.’- இதை சொன்னதும் க.நா.சு. தான்!
அழகிரிசாமியின் மகன் சாரங்கன் மௌனி பற்றி நல்ல டாகுமெண்டரி படம் எடுத்தார்! காலம் காலமாக தலைமுறை இடைவெளி!

நாற்பத்தைந்து ஆண்டுகள் முன் மறைந்து விட்ட கு.அழகிரிசாமி. தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் கு.ப.ரா வை நினைத்தால் ந.பிச்சமூர்த்தியை நினைக்காமல் இருக்க முடியாது. கு.அழகிரிசாமியை நினைத்தால் கி.ராஜநாராயணன் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.

கொஞ்ச நேரத்தில் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு முத்தமிழ் பேரவை அரங்கத்திற்குள் ’கடலோடி’ நரசய்யா நுழைந்தார். மணிக்கொடி சிட்டியின் மருமகன்.முத்துசாமிக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

பரத நாட்டிய நிகழ்ச்சி முடிந்ததும் அழகிரிசாமி தோற்றம் கொண்டவர் வந்து முத்துசாமியை சேவித்தார். அவர் அழகிரிசாமியின் மகனே தான்! மூத்தமகன் ராமச்சந்திரன்.
இளைய மகன் சாரங்கனை அந்தக்காலத்தில் திலகர் மருது (ட்ராட்ஸ்கி மருதுவின் தம்பி) மூலமாக எனக்கு அறிமுகமுண்டு. 2007ம் ஆண்டு கோவையில் நடந்த ’காலச்சுவடு’ விழாவில் மீண்டும் சாரங்கனை சந்தித்திருக்கிறேன்.
ராமச்சந்திரனிடம் அவரைப் பார்த்தவுடன் எனக்கு கு.அழகிரிசாமி ஞாபகம் வந்ததைப் பற்றி சொன்னேன்.
கி.ரா பேசும்போது அழகிரிசாமி பற்றி எப்போதும் ஏதாவது சொல்வார். 1990ல் புதுவையில் ஒரு கட்டடத்தில் புத்தகக்கண்காட்சி. கி.ராவுடன் நான் உள்ளே நுழையும்போது செருப்பை வெளியே விட வேண்டியிருந்தது. உடனே கி.ரா
“இப்படி செருப்பை கழற்றி விட்டு செல்ல வேண்டியிருக்கும் போது அழகிரிசாமி என்ன செய்வான் தெரியுமா? ஒரு செருப்ப இங்கன போடுவான். இன்னொரு செருப்ப அங்கன போடுவான்.”
திருடு போய்விடக்கூடாது என்பதற்காக!
இதை ராமச்சந்திரனிடம் நான் சொன்னபோது அவர் “அப்பா பற்றி இந்த செருப்பு விஷயம் எனக்கே இப்போது தான் தெரிய வருகிறது!”
எனக்கு சந்தோஷம் தான். என்னால் அழகிரிசாமி பற்றிய ஒரு சுவாரசியம் அவர் மகனுக்கு இவ்வளவு காலங்கழித்து இப்போது தெரிய வந்திருக்கிறது.
........................................................

Jul 23, 2016

தூறலாய் சாரல்


வேலைய சரியா செய்யாட்டி
“என்னய்யா திருப்பதி அம்பட்டயன் செரைச்ச மாதிரி”.
இது தேய்ந்த சொலவடை.
கி.ராஜநாராயணனுடன் போனில் ஒரு மணி நேரத்துக்கு மேல் உரையாடிக்கொண்டிருந்த போது இதற்கு மாற்றாக ஒன்று சொன்னார். மாற்றாக சொல்வதற்காக சொல்லவில்லை. அந்த நேர பேச்சில் சொல்ல வந்த ஏதோ ஒரு விஷயத்துக்கு பொருத்தி இதை சொன்னார்.
”ஊரான் பிள்ளைக்கு ஒரு பொம்பள குண்டி கழுவி விட்ட மாதிரி…” தன் பிள்ளைக்கு கழுவற மாதிரி ஊரான் பிள்ளை குண்டிய அவ சரியா, சுத்தமா கழுவி விட மாட்டா. 


……………………………………………

அகமெம்னான் நாடகம் மொழிபெயர்த்த ஜம்புநாதனுக்கு ஒரு ஓவியம் பெசண்ட் நகரில் பரிசளிக்கப்பட்டது. அந்த ஓவியத்தை வரைந்தவர் மு.நடேஷ்.
அதில் நடேஷ் ஒரு வாக்கியம் எழுதியிருந்தார்.
“சுவாதிகள் இல்லையடி பாப்பா”

நடேஷ் தன் ஓவியங்கள் பற்றி பேசும்போது சொன்ன விஷயம்: ”பிக்காஸோ தான் எனக்கு Reference point.ஆனா அவன் செஞ்சதுக்கு எதிரா தான் நான் செய்யறேன்!”

நடேஷ் சார்த்தரின் ”மீள முடியுமா” நாடகத்தில் நடிக்கும்போது
83 பக்க text ஐ நாலரை மணி நேரத்தில் மனப் பாடம் செய்தவர்!

இங்கே கூத்துப்பட்டறையில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி
பரத நாட்டிய மாணவிகளுக்கு வகுப்பு எடுக்கும் போது நடேஷ் சொன்ன வார்த்தை “தமிழனின் தலையெழுத்துக்கு அண்ணாத்துரையின் மூக்குப்பொடி தான் மூலம்!” 
தமிழ் மண்ணில் திராவிட இயக்க அரசியல் தாக்கம் பற்றிய ரத்தினச் சுருக்க Sarcasm!
………………………………………………………………………

சில விளம்பரங்கள் எப்போதும் மறக்க முடியாதவையாய் மனதில் நிலைத்து விடும்.
ரொம்ப வருடங்களுக்கு முன் ரொம்ப funny ஆக ஒரு விளம்பரம்.
ஒரு கௌபாய் டைப் பாரில் பலர் குடித்துக்கொண்டிருப்பார்கள். Chubby ஆக தலையில் தொப்பி போட்ட ஒருவனை கிண்டலாக மற்ற குடிகாரர்கள் கவனிப்பார்கள். அந்த குண்டு ஆள் “ இந்த ஸ்ட்ராங்க் பீர் மஹாவீருக்கு எந்த சரக்கும் சர்பத் தான்டா!” என்று ஒரு ’மக்’கில் உள்ளதை கட,கட,மட,மடவென்று குடித்து விட்டு ஃப்ளாட் ஆகி விடுவான்.

மூன்று நான்கு வருடங்கள் முன் டி.வியில் அடிக்கடி காட்டப்பட்ட விளம்பரம்.
சிக்னல் நிறுத்தத்தில் ஒரு கார். பக்கத்தில் வியர்த்து விறுவிறுத்து ஒரு பள்ளிச்சிறுவன் சைக்கிளில் வந்து நிற்பான். காரில் உள்ளவர் பையனைப் பார்த்து முகம் சுளிப்பார். சிறுவன் தன் அழுக்கான ஆடையை அவசரமாய் திருத்தி, கழுத்து டையை ஒழுங்கு செய்து கொள்வான். புறப்பட பச்சை சிக்னல் விழும்போது பையன் சைக்கிளை அழுத்திக்கொண்டே காரில் உள்ள பணக்காரரைப் பார்த்து சொல்வான்
”ரெண்டு சக்கரம் தான் வித்தியாசம் அங்க்கிள். ஒரு நாள் அதுவும் வந்திடும்.”

நகைக் கடை விளம்பரங்கள் எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை.அப்படியிருந்தும் ஒரு விளம்பரம் கொஞ்ச நாட்களுக்கு முன் நெகிழ்த்தியது.
தன் அம்மாவுக்கு நகைகள் வாங்கித்தருகிறாள் ஒரு யுவதி. நகைக்கடையில் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்து உணர்ச்சிவயப்பட்டு அம்மா அழுகிறாள்.
”அசடாட்டம் அழாதம்மான்னு நான் சொன்னப்ப ‘ம்..ம்..ம்…’னு தலையை ஆட்டிக்கிட்டே அம்மா என் கண்ண துடைச்சி விட்டா…”
……………………………………………………..


மணிகள் என்ற தலைப்பில் ஞானக்கூத்தன்
’சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை’
இந்த மணிகள் கவிதைக்கு என்றில்லை, உரைநடைக்கு மட்டுமில்லை
இன்னும் பலவற்றுக்குமான இலக்கணம் தான்.
…………………………..
photos
1.M.Natesh
2. Ki.Rajanarayanan with Kamal
3.Gnanakoothan
4.R.P.Rajanayahem
..........................................