Share

Showing posts with label எம்.என்.நம்பியார். Show all posts
Showing posts with label எம்.என்.நம்பியார். Show all posts

Aug 31, 2020

எம். என். நம்பியார்

 நம்பியார் 'இளமைக்கால புகைப்படம் ஒன்று' பார்த்திருக்கிறேன். 

நம்பியார் பதின்பருவ வாலிபனாக வேட்டி கட்டிக்கொண்டு நிற்கிறார். 

சிவாஜி பன்னிரண்டு வயது சிறுவனாக கன்னத்தில் கை வைத்துக்கொண்டு. 

கூடவே டவுன் பஸ் கண்ணப்பாவும் சின்னப்பையனாக. 

அந்த புகைப்படம் கண்ணப்பா தான் 

எனக்கு காட்டினார். 

மறக்கவே முடியாத புகைப்படங்களில் அதுவும் ஒன்று.


 


எம்.ஜி.ஆர் இரண்டாவது திருமணத்தில் 

கலந்து கொண்ட நடிகர் நம்பியார்.


திரையுலகில் இருவரும் பிரபலமாவதற்கு முன்


இருவரும் எங்கோ ஒரு மலையேறி நீண்ட தூரம் போக வேண்டியிருந்த போது வெய்யிலில் நல்ல நிறமான நம்பியாரின்  உடல் முழுவதும் red patches ஏற்பட்டதை பார்த்து எம்.ஜி.ஆர் பதைத்திருக்கிறார். இது அவருடைய சுய சரிதை 

நான் ஏன் பிறந்தேனில் சொல்லியிருந்தார்.


எதற்கு இதை சொல்ல வேண்டியிருக்கிறதென்றால் இருவரும் சினிமாவில் பிரபலமாகும் முன்னரே

 நல்ல நண்பர்கள்.


 


நம்பியார் நடிக்க வந்த ஆரம்ப காலங்களில் நகைச்சுவை பாத்திரங்கள் செய்தார். 

அப்புறம் வில்லன். வில்லன் என்றால் சாதாரண வில்லன் இல்லை. 

கொடூரமாக வில்லன் பாத்திரத்தில் கொடி கட்டியவர்.


வில்லனாக நடிக்கும்போதே மிஸ்ஸியம்மாவில் காமெடி செய்திருக்கிறார். ரொம்ப பின்னால் ’தூறல் நின்னு போச்சி’


அவருக்குள் இருந்த காமெடியன் பின்னாளில் கூட தலை காட்டிக்கொண்டிருந்தார். கே.சங்கர் இயக்கிய ஒரு பக்தி படத்தில் நிறைய ஸ்லாப்ஸ்டிக் காமெடி செய்திருந்தார்.


வில்லனாக மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு பெயர் பெற்றார் என்பதற்கு ஒரு உதாரணம்.


எம்.ஜி.ஆர் 1967 தேர்தல் பிரச்சாரம்.

 பரங்கி மலை தொகுதி. ஒரு முதிய பெண்மணி ஒரு குண்டு சோடாவை எம்.ஜி.ஆருக்கு தருகிறார். அதே வேகத்தில் ” கண்ணு, இந்த நம்பியார நம்பாதே, அவன் பார்வையே சரியில்லப்பா. 

அவன் நல்லவனே இல்ல. 

கவனமா இருந்துக்கப்பா.” என்று சொன்னவுடன் எம்.ஜி.ஆர் அந்த வயதான அம்மாவை உணர்ச்சி வசப்பட்டு தழுவிக்கொண்டார். அந்த புகைப்படம் அவருடைய மிக பிரபலமான புகைப்படம். சில நாளில் எம்.ஜி.ஆரை அவருடைய வீட்டிலேயே வைத்து எம்.ஆர்.ராதா சுட்டார்.


நம்பியார் ஒரு வில்லனாக செய்த சாதனைக்கு அந்த கிழவி நிகழ்வு ஒரு சிறந்த விருது போல.


இன்னொன்று


சுகுமாரன் நம்பியார் திருச்சியில் தேர்தலுக்கு நின்ற போது அதிமுகவினர் ஒரு பிரச்சாரம் செய்தார்கள்.


ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது பெண்களிடம் “ நம்ம தலைவர படங்கள்ள ரொம்ப தொந்தரவு பண்ணுவாருல்ல நம்பியார். அவரோட மகன் தான் இங்க ஓட்டு கேட்கிறார். அவரே அப்படி. இவருக்கு நீங்க ஓட்டு போடலாமா?” என்று கேட்டு சுகுமாரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.


Popular MGR was popular but infamous Nambiar. 


நம்பியாரின் வில்லன் நடிப்பு அவருடைய வாரிசின் அரசியல் வாழ்வில்  கூட இப்படி பாதித்தது.


சுகுமாரன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது வேட்டைக்காரன் படம் எடுக்க 

ஒரு வகை உதவி செய்தார்.


எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்குமான கௌபாய் உடைகள், கௌபாய் நடவடிக்கைகள் பற்றி ஃபாரின் மேகசின்ஸ், ஆங்கில படங்களில் உள்ள காட்சிகளை வைத்து விளக்கி உதவியவர். எம்.ஜி.ஆர் இதற்கு ரொம்ப சந்தோஷப்பட்டார். நம்பியாரே இதை ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.


 


”நம்பியாருக்கும் எம்பியாருக்கும் கத்தி சண்ட 

எந்த படத்தில?”


இப்படி தான் அப்ப எங்க பக்கத்து வீட்டு அஞ்சு வயசு ராதாக்ரிச்சு அடிக்கடி கேட்டுக்கிட்டே இருப்பான்.


ரெண்டு பேருக்கும் கத்தி சண்டை இல்லாத படங்களுக்கு வர மாட்டேன் என்று 

பெற்றோரிடம் அடம் பிடிப்பான்.


 


இருவரும் கத்தி சண்டை போடும்போது  இரட்டையர்கள் போல தோன்றும்.


குழந்தைகள், சிறுவர்கள்  மனதில் ஆழமாக எம்.ஜி.ஆர் போலவே தவிர்க்கமுடியாமல் நம்பியாரும் அன்று ஆக்ரமித்தார்.


எம். ஜி. ஆர் படங்களில் மட்டுமல்ல. 


ஸ்ரீதர் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' நம்பியாரின் முக்கிய கதாபாத்திரம். 

'சிவந்த மண்' திவான். 


கே. எஸ். ஜியின் 'உயிரா மானமா' 


நம்பியார் பிரமாதமாக நடித்த படங்கள் பட்டியல் போட்டு முடியாது. 


இன்று எல்லோர் மனதிலும் 

நம்பியார் வில்லன் நடிகர் என்றாலும்

 அவர் ரொம்ப நல்லவர் என்று

 ஒரு saintly image ஏற்பட்டிருக்கிறது.


ஐயப்ப சாமிகளின் குருநாதர்.


https://m.facebook.com/story.php?story_fbid=2817468261799955&id=100006104256328

Aug 30, 2016

எம்.ஜி.ஆர் கட்சியில் அந்தக்கால சில நடிகர்கள்


அகில உலகிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இல்லையென்பது உண்மை தான்.ஆனாலும் திருச்சி சௌந்தர் ராஜன் அந்தக்காலத்தில் அகில உலக எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களின் தலைவராகத்தான் இருந்தார். தி.மு.கவில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் நடத்தும் கட்சிக்கூட்டங்களில் சிறப்புப்பேச்சாளராக பேசிக்கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கான மன்றங்களைப்பற்றி எண்ணும் போது சிலர் நினைவுக்கு வருவர். ஒருவர் திருச்சி சௌந்தர்ராஜன். இன்னொருவர் முசிறி புத்தன். அப்புறம் கவர்ச்சி வில்லன் கே.கண்ணன்.
அதே போல சிவாஜி ரசிகர் மன்றங்களுக்குத் தலைமை என்றால் சின்ன அண்ணாமலையும் தளபதி சண்முகம் என்பவரும் தான்.
ம.பொ.சியின் தமிழரசு கழகம் கட்சியில் இருந்தவர் சின்ன அண்ணாமலை. பண்ணைப் புத்தகாலயம் அதிபர். இவர் எழுதிய “சொன்னால் நம்ப மாட்டீர்கள்” படிக்க சுவாரசியமாயிருக்கும்.

திருச்சி சௌந்தர்ராஜன் எம்.ஜி.ஆர் படங்களிலெல்லாம் நடிப்பார். பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாக, அப்பாவாக, கொள்ளைக்கூட்டத்தில் ஒருவனாக.
ரகசிய போலீஸ் 115ல் உயர் போலீஸ் அதிகாரியாக, கண்ணன் என் காதலனில் ஜெயலலிதாவுக்கு அப்பாவாக …இப்படி..இப்படி..
டி.ஆர் ராமண்ணாவின் ”நான்” படத்தில் கதாநாயகனின் தந்தை பெரிய ஜமின்தாராக வந்து ஆரம்பத்தில் செத்துப் போவார்.
திருச்சி சௌந்தர்ராஜன் முன்னதாக கதாநாயகனாக சொந்தப் படம் எடுத்து நடித்திருக்கிறார். டப்பாவிற்குள் போனது என்று சொல்லவும் வேண்டுமோ?
1965ல் வெளி வந்த “பணம் தரும் பரிசு”.
 பணம் தரும் பரிசு படத்தில் கதாநாயகி வி.ஆர் திலகம். ரமண திலகம் இரண்டாவது நாயகி. இந்த ரமண திலகம் திரையுலகு கண்ட பெரிய கவிஞரான வாலிக்கு மனைவியானார்!
திருச்சி சௌந்தர்ராஜன் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் மந்திரியாக ஆனவர். என் மாமனாரின் நண்பர் இவர்.
எம்.ஜி.ஆர் படங்களில் சின்ன ரோல் செய்தவர் மந்திரியானார்.
இவர் மற்ற மந்திரிகள் போல சம்பாத்திய புத்திசாலியாக இருக்கவில்லை என்று ஒரு செய்தி. உண்மையோ என்னவோ?
வேலன் நாடகமொன்றில் நடிக்கும்போது மற்ற கதாபாத்திரங்கள் பேசும்போது அவர்களை மாற்றி,மாற்றிப் பார்த்து ’அது சரி’ என்ற வார்த்தையை தலையை ஆட்டி ஆட்டி ‘ஐசரி!’ ‘ஐசரி!’ என்று உச்சரித்ததால் ஐசரிவேலன் ஆனவர்.
சாதாரண சிரிப்பு நடிகர் ஐசரி வேலனும் கூட ராதாகிருஷ்ண நகர் எம்.எல்.ஏ வாக மந்திரி செயலர் என்பதாக ஒரு விசித்திர பதவியில் இருந்தார்.
இந்த ஐசரி வேலன் மகன் ஐசரி கணேஷ் இன்று பல்கலைக்கழகமொன்றின் வேந்தரா?


இவர்களெல்லாம் எம்.ஜி.ஆர் கட்சியில் பதவி பெற்றவர்கள் எனும்போது ஏன் நட்சத்திர வில்லன் நடிகர் நம்பியார் அதிமுகவில் சேர்ந்து ஜொலிக்கவில்லை?

 இதற்கு எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலங்களில் புன்னகையையே பதிலாகச் சொன்ன நம்பியார் சில வருடங்களுக்கு முன் சொன்னார்: ”எம்.ஜி.ஆருக்கு சந்தேகக் குணம் அதிகம். கட்சியில் யாராவது நம்பியார் பற்றி பொல்லாங்காக சொன்னால் அதை உடனே நம்பி விடுவார். அவருடைய சந்தேகக்குணம் தாங்கவே முடியாதது. படாத பாடு படுத்தி விடுவார். நட்பு கெட்டுப்போகும். அதனால் தான் நான் எம்.ஜி.ஆர் கட்சியில் சேரவேயில்லை.”
திருச்சி சௌந்தர்ராஜன், கே.கண்ணன், ஐசரிவேலன், எஸ்.எஸ்.சிவசூரியன் போன்ற நடிகர்களால் மட்டும் ஆரம்ப கால அதிமுக அலங்கரிக்கப்பட்டது.


Sep 25, 2012

பசுத்தோல் போர்த்திய புலி

Nov 3, 2008


நம்பியார் சுவாமி சினிமாவில் வில்லன். நிஜ வாழ்க்கையில் புனிதர் . இப்படி பலரும் நினைத்துகொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் எம்ஜியார் படங்களில் வில்லன் ஆகியதால் பெண்களின் கடுமையான வசவுக்கும் சாபத்துக்கும் ஆளானவர். பின்னர் பொது மக்கள் மத்தியில் ஐயப்ப பக்தர் என்பதனாலும் பலருக்கும் சினிமாவுலகில் மாலை போட்டவர் என்பதால் ஒரு Saintly Image இவருக்கு உண்டாகி, மேலும் சினிமாவை புரிந்து கொண்ட பெருமையும் சினிமா வில்லன் நிஜ வாழ்க்கையில் உத்தமன் என்பதை உறுதி செய்ய கிடைத்த Role Model ஆக்கி நம்பியாரை தூக்கி பிடித்தார்கள்.


நம்பியாரை பற்றிய நிஜம் ஒன்று. அவர் பேச்சில் ஆபாசம்,விரசம் இருக்கும்.Vulgarity! ஏதோ ஒழுக்க கண்ணோட்டம் கொண்டு நம்பியாரை அளந்து பார்ப்பதாக எண்ணிவிட வேண்டாம். ஆனால் ஐயப்ப விரதம் என்பது சுத்தத்தை அடிபடையாக ஏற்று கொண்டு உணவு, லாகிரி, செக்ஸ் எல்லாவற்றையும் புறந்தள்ளி கடுமையான ஒழுக்க கோட்பாடுகளின் அடிப்படையில் நம்பிக்கை வைத்து மேற்கொள்ளப்படுவது என்பதை நினைவிற்கொள்க. அதோடு இந்த பரிசுத்த நம்பிக்கையின் குருசாமியாகி பலருக்கு மாலை போட்டு தனக்கு ஒரு புனித பிம்பத்தையும் ஏற்படுத்திக்கொண்டு ஏற்றுகொண்ட அனுஷ்டானங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டாமா !

நான் வேலை பார்த்த படத்தில் மனோரமா நடித்தார். கதாநாயகனின் தாயாக. பிரசாத் தோட்டத்தில் அந்த படத்தின் சண்டைகாட்சி எடுக்கப்பட்ட போது மனோரமா வேறொரு ஷூட்டிங்கில் அங்கே அருகில் இருந்தார். அவருடைய ஹேர் ட்ரெஸ்ஸெர் கலா என்பவர் ஆச்சி ஷூட்டிங்கில் இருப்பதை தெரியப்படுத்தி வந்து பாருங்கள் என்றார்.

மனோரமா கோபிசெட்டிபாளையத்தில் இரவு பத்து மணிக்கு நான் சின்ன வாக் போய்க்கொண்டிருந்த போது என்னை அடையாளம் கண்டு தன் காரை நிறுத்தி ' ஏம்பா , காரில் ஏறிக்கொள்ளுங்கள்.ஏன் நடக்க வேண்டும் ' என்று பரிவோடு ஒரு முறை சொன்னார்.
நான் ' இல்லை அம்மா நீங்க போங்க .நான் தூங்கு முன் சின்ன வாக் போகிறேன் .' என்று சொன்னேன்.எல்லோரும் அக்கா என்று தான் அவரை அழைப்பார்கள். நான் அம்மா என்று தான் சொல்வேன்.

ஆச்சியை அந்த ஷூட்டிங்கில் நான் பார்க்க போன போது கயிற்று கட்டிலில் இவருடன் நம்பியார் சாமி மறு பக்கமாக திரும்பி அமர்ந்திருந்தார்.ஆர்க் புரூட் எனும் சக்திவாய்ந்த விளக்கு என் மீது அப்போது தற்செயலாக திருப்பப்பட்டது.

மறு நாள் டப்பிங் தியேட்டர் வேலையின் போது மனோரமா அங்கு வந்தவர் முந்தைய நாள் ஷூட்டிங்கில் நம்பியாரை திட்டியதை சொன்னார் .
' இனிமே இப்படி அசிங்கமா ஆபாசமா பேசுனா அப்புறம் பார்த்துக்குங்க. ஏன் கிட்ட பேசவே வேண்டாம் '

அவருடைய உதவியாளரை கூப்பிட்டு ' என்னப்பா இவரு இப்படி எப்பவுமே அசிங்கமா பேசுறாரே ' ன்னு சொன்னேன். அதுக்கு அந்த ஆள் ' ஐயோ அதை ஏன் கேக்கறீங்க. பூஜையில இவரு ஒக்காந்திருக்கும் போது மகளும் மருமகனும் வந்தாங்க. இவரு ' ரூம்லே போய் வச்சுக்கங்க. இது பூஜை பண்ற இடம். உங்க பூஜையை ஒங்க பெட் ரூம் போய் வச்சுக்கங்க ' ன்னு சொன்னாரு. மகளிடமே அப்படி தான் பேசுறாரு ' ன்னு சொல்றான்.பார்த்துக்கங்க .' என்று சொன்ன மனோரமா உரத்த குரலில் நம்பியார் பற்றி " பசுத்தோல் போர்த்திய புலி " என்றார்.

நம்பியார் விரசமாய் பேசுபவர் என்பது திரைப்பட துறையில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்று தான்.
மனோரமா யாரைப்பற்றியும் தைரியமாக வெளிப்படையாக கம்மன்ட் அடிப்பார். நான் கூட ஆச்சரியப்படுவேன். 'இந்த மாதிரி லூஸ் டாக் செய்பவர் எப்படி திரையுலகில் நிலைத்து நிற்க முடிகிறது '
...


சித்தர்கள் மத அனுஸ்டானம், பூஜை புனஸ்காரம், சாஸ்த்திர சம்பிரதாயங்களை,சமுக கட்டுப்பாடுகளை உதறி வாழ்ந்தவர்கள்.

கெட்ட வார்த்தை,கோபம் நிரம்பிய சாமியார் இலங்கையில் இருந்தார்.யோகர் என்று பெயர்.இவர் பற்றி பிரமிள் சொல்வார்.

யாராவதுயோகர் சுவாமியிடம் தன் கஷ்டத்தை முன் வைத்தால் அவர் பதில் ' ஒரு பொல்லாப்பும் இல்லே. எப்போவோ முடிஞ்ச காரியம்டா புண்டை மகனே ' என்பார்.
பிரமிள் சொல்வார். ' ஆனால் அவர் அருகில் நாம் இருக்கும்போது அருவி சாரல் அருகில் இருப்பது போன்றுஜிலு ஜிலுன்னு இருக்கும்! ரொம்ப விஷேசமான ஆத்மீக அனுபவம்!'